Posts

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (17)

Image
அபிமன்யுவின் மனைவியான உத்தரை அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரத்திலிருந்து தன் கர்பத்தைக் காப்பாற்றும்படி பகவானிடம் வேண்டிய ஸ்லோகம் . पाहि पाहि  महायॊगिन् देवदेव जगत्पते। नान्यम्  त्वदभयं पश्ये यत्र मृत्युः परस्परम्।। பாஹி பாஹி மஹாயோகின்! தேவதேவ! ஜகத்பதே! | நான்யம் தவபயம் பஷ்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:8:9) யோகீஸ்வரனே! உலகங்கள் அனைத்திற்கும் தலைவனே! தேவர்களுக்கெல்லாம் தெய்வமாய் விளங்குபவனே! என்னைக் காப்பாற்றுங்கள். ஒருவருக்கொருவர் விரோதிகளாய் இருக்கும் மனிதர்கள் நிரம்பிய இவ்வுலகில் எனக்கு உம்மைத்தவிர அபயம் தருபவர் எவருமில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்! கர்பிணிகள் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் அவர்களது கர்பம் காப்பாற்றப்படும். Thanks to subasree Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1abpCeatakXE1p8ZIbnjnrc3IbOUo2b_3/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (16)

Image
இந்திரனுடன் வ்ருத்திராசுரன் சண்டையிடும்போது பகவானைத் துதித்த ஸ்துதியிலிருந்து.. अहं हरे तव पादैकमूल  दासानुदासॊ भवितास्मि भूयः । मनः स्मरेतासुपतेर्गुणांस्ते  गृणीत वाक्कर्म करॊतु कायः।। அஹம் ஹரே‌ தவ பாதைகமூல தாஸாநுதாஸோ பவிதாஸ்மி பூய:| மன: ஸ்மரேதாஸுபதோ குணாம்ஸ்தே க்ருணீத வாக்கர்ம கரோது காய:|| (ஸ்ரீமத் பாகவதம் 6:11:24) ஸ்ரீமன் நாராயணா! உம்முடைய திருவடிகளையே முக்கியமான ஆஷ்ரயமாகக் கொண்ட பக்தர்களைப் பின்பற்றும் தாஸனாக எப்போதும் இருக்கப்போகிறேன். ப்ராணநாதனாகிய உமது குணங்களை மனது எப்போதும் தியானிக்க வேண்டும். வாக்காகிய இந்திரியம் உமது குணங்களையே துதிக்கவேண்டும். உடம்பு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யட்டும். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1fn31MFKZ4cQVQJrzPbJwp6GM8c5q96FI/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (15)

Image
यॊsनुग्रहार्थं भजतां पादमूलमनामरूपॊ भगवाननन्तः । नामानि रूपाणि च जन्मकर्मभिः  भेजे स मह्यं परमः  प्रसीदतु ।। யோsநுக்ரஹார்தம் பஜதாம் பாதமூலம் அநாமரூபோ பகவான் அனந்த: | நாமானி ரூபாணி ச ஜனாகர்மபி: பேஜே ஸ மஹ்யம் பரம: ப்ரஸீதது || (ஸ்ரீமத் பாகவதம் 6:4:33) தக்ஷப்ரஜாபதி ஸ்ருஷ்டியைத் துவக்கும்முன் செய்த பிரார்த்தனையிலிருந்து உண்மையில் பெயர் உருவமில்லாத அடையாளங்களுமில்லாத கடவுளானவர் பக்தியால் அவரது அனுக்ரஹத்தை அடையத் தகுந்தவர்களுக்கு தன் சரணங்களைக் கொடுப்பதற்காக உருவங்களை ஏற்று, அவதாரங்கள் செய்து, லீலைகளும் செய்கிறார். அப்பேர்ப்பட்ட பரமாத்மா எனக்கு அருள் புரியட்டும்.. Thanks to Smt.  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1shOKiXlCKMtKNm34qz1LDX5zqaQDEe6B/view?usp=drivesdk

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 21

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் புதல்வனுமான பரீக்ஷித் ஒருவன்தான் பாண்டவ வம்சத்தின் ஒரே வாரிசு.  கண்ணன் அவதாரத்தை முடித்துக்கொண்டு பூமியை விட்டுக் கிளம்பியது முதல் கலியுகம் ஆரம்பித்தது.  ஆங்காங்கே கலியின் தோஷத்தால் நேர்ந்த கொடுமைகளைப் பார்த்த பரீக்ஷித், பூமி முழுவதும் யாத்திரை செய்து கலியின் கொட்டத்தை முழுவதுமாக அடக்கினான். ஒரு சமயம் ஒரு காளை மாட்டின் மூன்று கால்களும் வெட்டிவிட்டு அதன் நான்காவது காலையும் வெட்டுவதற்காக கையில் வாளை வைத்துக் கொண்டிருந்த ஒருவனை பரீக்ஷித் சந்தித்தான். காளையின் அருகே ஒரு பசுவும் மிகவும் தீனமாக அழுது கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அருவருக்கத்தக்க நிலையில் இருந்த அம்மனிதன் அரச வேஷத்தில் இருந்தான். வாயில்லாத ஜீவன்களைத் துன்புறுத்துவதைக் கண்ட பரீக்ஷித் வெகுண்டு, அம்மனிதனை கொல்லத் துணிய, அவனோ பரீக்ஷித்...

கொஞ்சம்‌ சிரிப்பு கொஞ்சம்‌ சிந்தனை - 20

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. நீலகண்ட தீக்ஷிதர் என்னும்‌ மஹாத்மா‌ சிவலீலார்ணவம் என்று பரமேஸ்வரனின் திருவிளையாடல்களை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு ஸ்லோகத்தில் சிவபெருமானைப் பார்த்து விளையாட்டாக நிந்தா ஸ்துதிபோல் கேட்கிறார். பிட்டுக்கு மண் சுமந்த லீலையைச் சொல்லும்போது,  ஹே! பரமேஸ்வரா! நீ ஒரு பக்ஷபாதி. ஏமாற்றுகிறாய். எப்படித் தெரியுமா? அரசன் உன் முதுகில் அடித்தபோது அனைவர் முதுகிலும் அடி விழுந்தது. ஆனால், நீ பிட்டைச் சுவைத்தபோது அனைவர் நாவிலும் தித்தித்ததோ? பிட்டு மட்டும் உனக்கு. அடி எங்கள் அனைவருக்குமா? என்று வம்பிழுக்கிறார். பரிகளனைத்தும் நரிகளானபோது, மணிவாசகரை அரசன்  சிறையிலடைத்தான்.  பரமேஸ்வரனின் ஒரு கையில் அக்னியும், தலையில்‌ நீரும்‌ இருப்பதால், சிவனடியாரைச் சிறையிலடைத்தற்காக வெகுண்டு வைகையில் வெள்ளத்தைக்‌ கிளப்பிவிட்...

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ‌சிந்தனை - 19

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. தானத்தில் சிறந்தது அன்ன தானம். ஏனெனில் சாப்பாடு ஒன்றுதான் மனதிற்குப் போதவில்லை என்றால்கூட வயிறு மறுதலித்துவிடும். அவ்வையாரும் ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய். இருநாளைக்கு ஏலாய்.. வயிறே உன்னோடு வாழ்தலரிதென்கிறார். ஸம்ப்ரதாயம் தெரிந்தவர்கள் வாசலில் யாராவது பிச்சை என்று வந்தால் போடவில்லை என்றாலும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அடுத்தவீட்டில் போய்ப் பார் என்பார்கள். ஏனெனில் அடுத்தவீட்டில் ஏதாவது போட்டால் அந்தப் புண்ணியத்தில் இவர்களுக்கு ஒரு சிறு பங்கு வருமாம். தானத்தில் சிறந்தவன் கர்ணன். அவனது புண்ய பலன்களின் காரணமாக சிலகாலம் ஸ்வர்கத்தில் இருந்தான். அப்போது அவனுக்குப்‌ பசியெடுத்தது. ஸ்வர்கத்தில் பசி, தாகம் எல்லாம்‌ கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தபோகிலும் தனக்குப் பசியெடுக்கிறதே என்று குழம்பிக்கொண்டிருந்தான்  அவன். அப்போது கண்...

கொஞ்சம் சிரிப்புகொஞ்சம்‌ சிந்தனை - 18

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. அனுஷ்டானம்‌ முடிந்ததும் கிடைத்த காய் கனிகளை உண்டு சலசலக்கும் கங்காநதியைப் பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தனர்  விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும். ஸ்வாமி, ஹிரண்யகசிபுவுக்கு குழந்தை பிறந்தது. அப்றம் என்னாச்சு?    தெரியாதவனைப் போல் கேட்டான் அரசர்க்கரசன். கண் படைத்த பயனை நன்றாய் அனுபவித்துக் கொண்டு, அவனது கமல முகத்தைப் பார்த்துக் கதை சொல்லத் துவங்கினார் ராஜரிஷி. அந்தக் குழந்தை மஹா பக்தனயிருந்தான் ராமா.. அசுரனின் பிள்ளை எப்படி பக்தனாயிருக்க முடியும்? அசுரன் தவம்‌ செய்யப் போனதும்,  அவனது மகன் இன்னும் என்னென்ன படுத்துவானோன்னு பயந்து, ம்ம் தேவேந்திரன் கர்பமாயிருந்த அசுரனின் மனைவியான கயாதுவை கடத்திண்டு போனான். ஓ கர்பிணியை படுத்தலாமா? தேவேந்திரனுக்கு அப்பப்ப ஏதாவது தப்பு பண்ணி திருந்தறதே வேலை. அது...

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம்‌ சிந்தனை - 17

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. விஸ்வாமித்திரரோடு காட்டு வழி நடந்தனர் பாலகர்கள்.  பின்னாளில் பாரதம் முழுதும் நடந்து வந்த கோமானுக்கு இது ஒரு பயிற்சியாயிற்று. இன்னும் என்னென்ன அவதாரங்கள் பண்ணினார் பகவான்? தன் செப்பு வாயைத் திறந்து சக்கரவர்த்தித் திருமகன் கேட்டான். அடுத்ததா ஹிரண்ய கசிபுவைக் கொன்று ப்ரஹல்லாதன் எனும் மஹா பக்தக்குழந்தையை ரக்ஷிப்பதற்காக அவதாரம் பண்ணினான் ம்ம் அதென்ன அவதாரம்? நரஸிம்மாவதாரம் ராமா.. அப்படின்னா? சிங்கமுகமும் மனித உடலும் கொண்ட‌ அவதாரம். ஆச்சர்யமா இருக்கே. இப்படி ஒரு அவதாரமா? இப்படிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் இவன் மானுடக் குழந்தைதானோ.. பகவத் அவதாரம் இல்லையோ என்று ஓரத்தில் சந்தேகம் எட்டிப் பார்த்தது முனிவருக்கு. பின்னால் வருகின்ற ராகவனை திரும்பிப் பார்த்தார். அவனது ஒளிபொருந்திய திருமுகத்தைப் பார்த்ததும் எல்லா சந்தேகங்களும் பறந்தன. தன்...

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(14)

Image
यत्सेवयाग्नेरिव रुद्ररोदनं पुमान्विजह्यान्मलमात्मनस्तम् | बडेत वर्णों निजमेष  सोsव्ययो भूयात्स ईशः परमो गुरोर्गुरुः || யத் ஸேவயாக்நேரிவ ருத்ரரோதனம் புமான் விஜஹ்யான்மல மாத்மனஸ்தம் | பஜேத வர்ணம் நிஜமேஷ ஸோவ்யயோ பூயாத்ம ஈஷ: பரமோ குரோர்குரு: || (ஸ்ரீமத் பாகவதம் 8:24:48) மத்ஸ்யாவதாரமாய் வந்த பகவானை ஸத்யவ்ரதன் செய்த ஸ்துதியிலிருந்து.. நெருப்பில் காய்ச்சப் படுவதால் வெள்ளி அழுக்கு நீங்கி ப்ரகாசிக்கிறது. அதுபோல் யாதொரு கடவுளை சேவிப்பதால் மனிதன் அழுக்குகளையும், அஞ்ஞானத்தையும் எளிதில் விட்டு விடுகிறானோ, அப்படிப்பட்ட மாறுபாடற்ற ஸர்வேஸ்வரனே எங்களுக்கு குருவின் வடிவில் இருக்கட்டும். அவரே  குருமார்களுக்கெல்லாம் குருவாவார். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1pG0wL6pFArFmhF9VtFp6uzeq0sgkHXTY/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (13)

Image
श्रुण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णशः स्मरन्ति नन्दन्ति तवेहितं जनाः | त एव पश्यन्त्यचिरेण तावकं  भवप्रवाहो परमं पदाम्बुजम् || ச்ருண்வந்தி காயந்தி க்ருணந்த்யபீக்ஷ்ணஶ: ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:| த ஏவ பஶ்யந்த்ய சிரேண தாவகம் பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:8:36) அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்பத்தை அழிக்க அஸ்வத்தாமன் ப்ரும்மாஸ்திரம் எய்தான். பகவான் க்ருஷ்ணன் சிறிய உருவெடுத்து கர்பத்தினுள் சென்று ப்ரும்மாஸ்திரத்திலிருந்து குழந்தையைக் காத்தான். நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மஹாராணி குந்தி, தன் வம்சத்தின் ஒரே வாரிசை காப்பாற்றிக் கொடுத்த கண்ணனை ஸ்துதி செய்கிறாள்.. அதிலிருந்து ஒரு ரத்தினம்.. ஹே க்ருஷ்ணா! யார் தங்களுடைய சரித்திரத்தைக் கேட்கிறார்களோ,  கானம் செய்கிறார்களோ, மறுபடி மறுபடி சொல்கிறார்களோ,  அடிக்கடி நினைக்கிறார்களோ, அதனால் மகிழ்ச்சியடைகிறார்களோ,  அவர்களே  ஜென்ம பரம்பரையை முடிக்கும் உந்தன் திருவடித்தாமரையை  சீக்கிரம் பார்க்கிறார்கள். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/...

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (12)

Image
न हि भगवन्नघटितमिदं त्वद्दर्शनान्नृणामखिल पापक्षयः | यन्नाम  सकृच्छ्रवणात्पुल्कसकॊsपि विमुच्यते संसारात् || ந ஹி பகவன் ந கடிதமிதம்  த்வத்தர்ஷனாந்ந்ரூணாமகில பாபக்ஷய : | யந்நாம ஸக்ருச்ச்ரவணாத் புல்கஸகோ(அ)பி விமுச்யதே ஸம்ஸாராத்|| (ஸ்ரீமத் பாகவதம் 6:16:44) சித்ரகேது என்ற கந்தர்வன் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துச் செய்யும் ஸ்துதியிலிருந்து.. பகவானே!  உம்மைப் பார்ப்பதனால் மனிதர்களுக்கு ஸகல பாவங்களின் அழிவு சம்பவிக்கிறது. உம்முடைய ஒரே ஒரு நாமாவை ஒரே ஒரு முறை கேட்டாலும்கூடப் போதும். மாபாதகங்கள் செய்தவன்கூட உலக பந்தத்திலிருந்து  விடுபட்டு முக்திநிலையை அடைந்து விடுகிறான். Thanks to  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1XcriLKNkh-YP3_wBozNgprl4HJds49Hx/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (11)

Image
अजातपक्षा इव मातरं  खगाः  ‍‍स्तन्यं यदा वत्सतराः क्षुधार्ताः | प्रियं प्रियेव व्युषितं विषण्णा  मनोsरविन्दाक्ष दिदृक्षते त्वाम् || அஜாதபக்ஷா இவ மாதரம் ககா:  ஸ்தன்யம் யதா வத்ஸதரா: க்ஷுதார்தா: | ப்ரியம் ப்ரியேவ வ்யுஷிதம் விஷண்ணா  மநோ(அ)ரவிந்தாக்ஷ தித்ருக்ஷதே தவாம்||  (ஸ்ரீமத் பாகவதம் 6:11:26) Audio: https://drive.google.com/file/d/12fzlbDE01_QOPi8MUZyUcXj17Yt_9h7L/view?usp=drivesdk Thanks to  Subashree Venkatraman எந்த நிலையில் இருந்தாலும் பகவானிடம் பக்தி செலுத்துவதற்கு யாதொருதடையுமில்லை என்று நிரூபிக்கும் வண்ணம், வ்ருத்திராசுரன் இந்திரனோடு யுத்தம் செய்த சமயத்தில் பகவானை நினைத்துச் செய்த ஸ்துதியிலிருந்து... இறக்கை முளைக்காமல் தாய்ப் பறவையை எதிர்பார்த்துக்கொண்டு  கூட்டிலிருக்கும் குஞ்சுப் பறவையைப் போலவும், பசியால் வாடியபோதிலும் தும்பினால் கட்டப்பட்டதால் தாய்ப் பசுவை எதிர்நோக்கும் கன்றைப் போலவும், அயலூர் சென்ற கணவனின் பிரிவுத்துயரால் வருந்தும் மனைவியைப் போலவும், தாமரைக் கண்ணா என் மனம் உன்னையே காண விரும்புகிறது.  இந்த ஸ்லோகத்தின் மூலம்...

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (10)

Image
தத் தே (அ)ர்ஹத்தம:நம: ஸ்துதி கர்ம பூஜா:  கர்ம ஸ்ம்ருதிஶ் சரணயோ: ஶ்ரவணம் கதாயாம் | ஸம்ஸேவயா த்வயி விநேதி ஷடங்கயா கிம் பக்திம் ஜன: பரமஹம்ஸகதௌ லபேத|| (ஸ்ரீமத் பாகவதம் 7:9:50) ஸ்ரீ ந்ருஸிம்ம பகவானைப் பார்த்து ப்ரஹலாதன் செய்யும் ஸ்துதியிலிருந்து.. ஓ சிறந்த கடவுளே! தாங்கள் பரமஹம்ஸர்களால் அடையப்படுகிறீர். ஆனால்,  கீழே விழுந்து நமஸ்கரித்தல்,  துதித்தல்,  எல்லா கர்மாக்களையும் பகவத் அர்ப்பணம் செய்தல்,  ஸாதுக்களுக்குப் பணிவிடை செய்தல்,  தமது பாதாரவிந்தத்தை நினைத்தல், ஸத்கதைகளைக் கேட்டல் என்ற ஆறு அங்கங்களைப் பின்பற்றுவதாலெயே ஜனங்கள் உம்மிடத்தில் பக்தியை அடைகிறார்கள். Audio link https://drive.google.com/open?id=1GzDl6V5SVQ-vMckAtsVZcjsMJAmLL3FI Thanks to Subashree Venkatraman

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (9)

Image
ஏவம் விம்ருஶ்ய ஸுதியோ பகவத்யநந்தே ஸர்வாத்மநா விதததே கலு பாவயோகம் | தே மே ந தண்டமர்ஹந்த்யத யத்யமீஷாம் ஸ்யாத் பாதகம் ததபி ஹந்த்யுருகாயவாத:|| (ஸ்ரீமத் பாகவதம் 6:3:26) மரணப்படுக்கையில் தன் மகனை நாராயணா என்று அழைத்தபோதும், விஷ்ணு தூதர்கள் ஓடிவந்து  அஜாமிளனின் உயிரை  விடுவித்தனர். அடாத பாவச்செயல்கள் புரிந்த அஜாமிளனை விஷ்ணுதூதர்கள் விடுவித்ததின் காரணம் புரியாமல் யமதூதர்கள்  தங்கள் தலைவனான யமராஜனிடம் கேட்டனர். ஜீவன்களை சரீரத்திலிருந்து விடுவித்து அவர்களது பாவ புண்யங்களை ஆராய்ந்து தக்க பலனை வழங்கும் பதவியிலிருக்கும் யமராஜன் அவர்களுக்குச் சொன்ன பதிலிலிருந்து.. மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களாலும் பகவான்  ஹரியினடத்தில் பக்தி செய்பவர்கள் புத்திமான்களாக அறியப்படுகிறார்கள். அவர்களிடம் பாவம் இருந்தாலும் அது அவர்கள் செய்யும் நாராயண ஸங்கீர்த்தனத்தினாலேயே அழிந்து விடுகிறது. பகவானான  ஹரியைத் தலைவனாகக் கொண்ட அவர்கள் நான் அளிக்கும் தண்டனைக்குத் தகுதி வாய்ந்தவர்களல்லர். அதனால் இந்த லோகத்திற்கும் அவர்கள் வரவேண்டியதில்லை..

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (8)

Image
ஶ்ருண்வதாம் ஸ்வகதாம் க்ருஷ்ண: புண்ய ஶ்ரவண கீர்த்தன: | ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி விதுநோதி ஸுஹ்ருத்‌ஸதாம் ||  (ஸ்ரீமத் பாகவதம்  1:2:17) நைமிஷாரண்யத்தில் யாகம் செய்த வேதியர்களின் கேள்விகளுக்கு ஸூதபௌராணிகர்  பதிலளிக்கும் வண்ணம்   ஸ்ரீமத் பாகவதத்தை சொல்லத் துவங்கிய ஸ்லோகங்களிலிருந்து.. ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றிச் சொல்வதாலும் கேட்பதாலும் நன்மையே உண்டாகும். அவர் ஸாதுக்களின் நண்பர். தன் கதையைக் கேட்பவர்களின் அந்தராத்மாவில் இருந்துகொண்டு அவர்களது மனத்திலுள்ள கல்மஷங்களைப் போக்குகிறார்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (7)

Image
அத  கதஞ்சித் ஸ்கலத க்ஷுத்பதநஜ்ரும்பணதுரவஸ்தாநாதிஷு விவஶாநாம் ந: ஸ்மரணாய ஜ்வரமரண தஶாயாமபி ஸகல கஶ்மலநிரஸ நாநி தவ குண க்ருதநாமதேயாநி வசன கோசராணி பவந்து||  (ஸ்ரீமத் பாகவதம் 5:3:12) நாபி மஹாராஜா செய்யும் யாகத்தில் ஆவிர்பவித்த (தோன்றிய) பகவானைப் பார்த்து ரித்விக்குகள் செய்த ஸ்துதியிலிருந்து... ஹே பகவன்! தங்கள் தரிசனத்தால் நாங்கள் க்ருதார்த்தர்களானோம்.(எங்கள் வாழ்வின் பலன் கிடைத்துவிட்டது) இருந்தாலும், இடறுதல், பசித்தல், கீழே விழுதல், மற்றும் கஷ்ட நிலைமைகளிலும், ஜுரம் வந்தபோதும், வியாதி வாட்டும்போதும், மரண காலத்திலும் உம்மை  நினைக்க சக்தியற்றவர்களாக இருக்கிறோம். எல்லா பாவங்களையும் அழிக்கும் குணங்களால் உமக்கு ஏற்பட்ட நாமங்களை எங்களுக்கு எப்படியாவது நினைவுபடுத்தி நாங்கள் எப்போதும்  அவற்றை உச்சரிக்குமாறு எங்களை ஆக்கிவிடுங்கள்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(6)

Image
யோ வா இஹ தே (அ)பராஜிதோ (அ)பராஜிதயா மாயயா அனவஸித பதவ்யாநாவ்ருத மதிர் விஷயவிஷரயாநாவ்ருத ப்ராக்ருதிரநுபாஸித மஹச்சரண: || (5:3:14) நாபி மஹாராஜன் யாகம் செய்யும்போது பகவான் ஆவிர்பவித்தான். அப்போது ரித்விக்குகள் செய்த ஸ்துதியிலிருந்து... ஸாது மஹிமா ஸாதுக்களின் பாதங்களை உபாசிப்பவர்கள், இந்திரியங்களுக்கு வசப்படாதவர்களாகவும், எவ்விடத்திலும் தோல்வியடையாதவர்களாகவும், இருப்பார்கள். மஹாத்மாக்களின் பாதங்களை சரணடைந்தவர்கள், புத்தியை மயக்கி தீர்மானைக்க முடியாத வழியைக் காட்டும் மாயையாலும், விஷய விஷத்தாலும் பாதிக்கப்படாத இயல்புடையவர்களாக இருப்பார்கள்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (5)

Image
தர்ஶனம் நோ தித்ருக்ஷூணாம் தேஹி பாகவதார்ச்சிதம்| ரூபம் ப்ரியதமம் ஸ்வாநாம் ஸர்வேந்த்ரிய குணாஞ்ஜனம்|| ( ஸ்ரீமத் பாகவதம் 4:24:44) ப்ராசீன பர்ஹிஸ் என்பவரின் புதல்வர்களுள்‌ பதின்மர்  ப்ரசேதஸர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பூமியில் ஸ்ருஷ்டியை ஏற்படுத்துவதற்காகக் கிளம்பிய அவர்களுக்கு ஸ்ரீ ருத்ரன் தரிசனம் கொடுத்து, ஸ்ரீ ஹரியின் பெருமைகளையும், அவரை அடையும் மார்கத்தையும் உபதேசம் செய்தார். அதிலிருந்து ஒரு ரத்தினம் இதோ : ஹே பகவன்!  தங்களது திருவுருவம் அடியார்களுக்கு மிகவும் ப்ரியமானது. எல்லா இந்திரியங்களுக்கும் நன்மை பயக்கும் மருந்து போன்றது. பக்தர்களால் விரும்பி வணங்கத்தக்க தங்கள் திருவுருவத்தை  எமக்குக் காட்டுங்கள்..

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(4)

Image
த்ருவ ஸ்துதியிலிருந்து.. பக்திம் முஹு: ப்ரவஹதாம் த்வயி‌ மே ப்ரஸங்கோ பூயாத் அனந்த மஹதாம் அமலாஶயானாம்| யேநாஞ்ஜஸோல்பண முருவ்யஸனம் பவாப்திம் நேஷ்யே‌பவத்குண கதாம்ருதபானமத்த: ||  ( ஸ்ரீமத் பாகவதம் 4:9:11) அழிவற்றவரே!  பரிசுத்தமான உள்ளம் படைத்தவர்களும், தங்களிடம் இடைவிடாது பக்தி செலுத்துபவர்களுமான ஸாதுக்களின் சங்கம் எனக்கு எப்போதும் ஏற்படட்டும். அந்த ஸாது சங்கத்தில் எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும்  தங்களுடைய கதாம்ருதத்தைப் பருகி, இந்த ஸம்சாரக் கடலை விரைவில் கடந்துவிடுவேன்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (3)

Image
தேவஹூதி கபிலரைப் பார்த்து செய்யும் ஸ்துதியிலிருந்து... அஹோ பத ஶ்வபசோ(அ)தோ கரீயான் யஜ்ஜிஹ்வாக்ரே வர்ததே நாம துப்யம்| தேபுஸ்தபஸ்தே ஜிஹுவு: ஸஸ்நுரார்யா ப்ரம்ஹாநூசுர் நாம க்ருணந்தி யே தே|| (3:33:7) ஹே பகவன்! எவ்வளவு பெரிய பாபங்களைச் செய்தவனாயினும், தங்களுடைய திருநாமத்தைச் நாக்கின் நுனியில் வைத்திருப்பதாலேயே , மஹாத்மாவாகிவிடுகிறான். அவன் முன் ஜென்மத்தில் தவம், ஹோமம், தீர்த்தஸ்நானம் முதலியவற்றை செய்திருப்பான். ஸதாசாரத்தோடு வேத அத்யயனமும் செய்திருப்பான்.