Posts

Showing posts with the label inSearchOfMe
Image
  கரை காணாத இக்கடலில் உன் பெயர்ப்படகில் ஏறிப் பயணிக்கிறேன். புயல் காற்று நீரை வாரி என்மேல் இறைக்கிறது. படகு என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். நிச்சயம் செய்தபின் மணநாளை நோக்கிக் காத்திருப்பவர் போல தேதி கிழிக்கப்படுகிறது.
Image
  மனம் கேட்பதனைத்தையும் மிகவும் சிரமப்பட்டு ஓய்வொழிச்சல் இன்றி எங்கெங்கோ அலைந்து எப்படியோ தேடி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆச்சரியம்.. கொடுப்பனைத்தும் கண‌நேரத்தில் காணாமல் போயிற்று.. உள்ளே வந்து பார்த்தால்தான் தெரிகிறது.. மலையப்பனான நீ அனைத்தையும் விழுங்கிக்கொண்டிருக்கிறாய்.. இனி கொடுக்கப் பொருளேதுமில்லை என்னைத் தவிர..
Image
  பலமான புயல்காற்றும் மழையும்... காற்றிலெழும்பும் தூசி கண்ணில் விழுந்து எரிகிறது.. மிக மோசமான அலைக்கழிப்புக்குப் பிறகும் தன் மெல்லிய காம்பின் பலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது நேற்று முளை விட்ட துளிர் இலை.. உன் மீதுள்ள நம்பிக்கையைப் போல..
Image
  நீ என்னை நினைக்கும் நேரம் மட்டுமே.. நான் உன்னை நினைக்கிறேன். உன் வயிற்றில் மிதக்கும் பேரண்டங்களில் நானும் ஒரு தூசியாக இருப்பினும்.. எப்போதும் நான் உன் நினைவில் இருக்க, உன் இதய ஓரத்தில் நிரந்தரமாக ஒரு கரும்புள்ளியாகவாவது இருந்தாகவேண்டும்.
Image
  இனிதான இசை எந்தன் செவியேறுமோ நான் இங்கு நீயாகும் நாள் வருமோ மாயை தன் பிடி என்று எனை விடுமோ மயக்கும் உன் புகழில் என் மனம் மாயுமோ உன் பெயரே எனதென்று வழக்காகுமோ உயிர் உருகி உன் கழலைத் தழுவிடுமோ செயல் எல்லாம் உனதாக மாறிடுமோ செலவின்றி சிந்தை என்று அடங்கிடுமோ Image courtesy: Kanha
Image
  கனவில் வந்த முகம்‌ மறந்துபோயிருந்தாலும், விழிக்கும்போது எழும் புன்னகைக்குக் காரணம் கனவில் கேட்ட உன் குழலிசைதான். சொல்லத் தெரியாமல் கனக்கும் மனம் சட்டென்று ஒரு கணத்தில் லேசாவதின் காரணம் உன் மனத்தில் ஒரு கணம் எழுந்த என் நினைவுதான். அலையலையாய் எழும் எண்ணக் குவியல்களின் நடுவில் சட்டென்று மனம் சிந்தனையற்று நிற்பதன் காரணம் உன் மயிலிறகசைவுதான். இதுவரை பார்க்கவில்லையென்றாலும் மறைபொருளாய் என் பக்கலில் எப்போதும் இருப்பது நீ நீ நீயேதான்.
Image
  முடிவெடுக்க இயலாத தருணங்களில் முதலும் முடிவுமான உன் பெயரைத் தானே இசைக்கிறது மனம்.. உன் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில் செயலை முடித்துவிட்டுச் சிரிக்கிறாய். உனக்கும் எனக்குமான முடிச்சின் இறுக்கம் அத்தகையது.. அதை‌ நீ உணர்ந்திருக்கும் அளவிற்கு நான் இன்னும்‌ உணரவில்லை.
Image
  பூமியைப் பிளந்துகொண்டு கஷ்டப்பட்டுத் தலைநீட்டும் சிறு புல்லைப் போன்றது உன் மீதான என் நம்பிக்கை.. இனி.. அது மரமாய் வளர்வது உன் அரவணைப்பினால்தான்..
Image
  உறங்கும் நேரம் நினைவாய் நிற்கும் நீ.. விடிந்ததும் என்னை எழுப்பி இப்பாழும் உலகில் தள்ளிவிட்டு எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறாய்.. உன் பார்வை என்னை வழுக்கும் விஷய விஷங்களுக்குள் விழாமல் காத்தபோதும் உன் கரம் பிடித்து நடக்க மனம் ஏங்குகிறது.. https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t1.6435-9/57581506_10157339411966757_4139913448991490048_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=J2LEK8zyhagAX_hk85m&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=00_AT8dM83ru_uPZpZN_GJRFRJta95e7Eylmih0P6k3Q8uYSg&oe=62D8386C
Image
நீ இங்கேதான் இருக்கிறாய்.. தென்றல் சுமந்து வரும் துளஸியும் மகிழம்பூவும் கலந்த நறுமணம்.. நேற்று வாடத்துவங்கியிருந்த புற்கள் பசுமை போர்த்தி இன்று நிமிர்ந்து நிற்கின்றன.. யமுனையின் துள்ளல் நேற்றைவிட அதிகமாய்.. மரக்கிளைகள் நீ தடவிச்செல்ல வாகாய்த் தழைந்திருக்கின்றன.. இம்மலர்கள் வழக்கத்தை விடச் சற்று பெரியதாய்.. நீ இங்கேதான் இருக்கிறாய்.. எனக்குத் தெரியும்.. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதும் தெரியும். எனக்கது போதும்.. நான் உன்னைப் பார்க்காவிடில் என்?  
Image
ப்ரபஞ்சம் முழுவதும் நீயே வியாபித்திருப்பதால்.. நான் எத்திசையில் சென்றாலும் என் பயணம் உன்னை நோக்கியதாகவே அமைகிறது..  
Image
  உள்ளம் ஆடும் ஆட்டத்தில் ஒவ்வொரு உறுப்பும் வலிக்குது.. ஓரங்க நாடகமொன்று ஓய்வின்றி நடக்குது.. ஒவ்வொரு வேடமும் என் ஒருவளுக்கே பொருந்துது ஒன்பது ஓட்டைகளும் ஒழுகிக்கொண்டே இருக்குது! ஒலி வடிவமாய் வந்து உனதாட்டம் துவக்கு. என்னை ஒழித்து உன்னை உருப்படுத்து! ஓங்காரப் பொருளே நீ ஓடோடி உடனே வந்திடு!