முடிவெடுக்க இயலாத

தருணங்களில்
முதலும் முடிவுமான
உன் பெயரைத்
தானே
இசைக்கிறது மனம்..
உன் முடிவை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில்
செயலை
முடித்துவிட்டுச் சிரிக்கிறாய்.
உனக்கும் எனக்குமான
முடிச்சின் இறுக்கம்
அத்தகையது..
அதை‌ நீ
உணர்ந்திருக்கும் அளவிற்கு
நான் இன்னும்‌ உணரவில்லை.



Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1