Posts

Showing posts with the label #க்ருஷ்ணமாதுரி

க்ருஷ்ணமாதுரி - 109

Image
கண்ணனை அனுபவிக்கும் பல்வேறு பக்தர்களின் சிந்தனைகளையும், பக்த லக்ஷணங்களையும் ஒட்டி மனத்தில் தோன்றியவற்றை எளிய வரிகளாக க்ருஷ்ணமாதுரி என்ற பெயரில் பதிவிட்டேன். தொடர்ந்து 108 பதிவுகள் ஆன நிலையில், அதைப் பிறகு தொடரலாம் என்று எண்ணி, படித்த, ரசித்த, மேலும் எழுத ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களையும் நமஸ்கரிக்கிறேன். Previous  Home   Next

க்ருஷ்ணமாதுரி - 106

Image
கேலியும் கண்ஜாடையும் தனக்காகவென்று எண்ணியது பேதை மனம். உற்று நோக்கியபின் புரிந்தது அது பொதுச்சொத்தென்று.. ஈடுபட்ட மனமது பாடுபட்டு அலையும்போது பற்றிக்கொண்டது உன் பனிப்பெயர்! பெயரொன்றே துணையென்று தனிப்பயணம் துவங்கிவிட்டேன்.. பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.. பெயரெனக்குத் துணையன்று! அதுதான் என்னை அழைத்துச் செல்கிறதென்று.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 105

Image
கறுத்த மேகத்தினின்று காற்றைக் கிழித்து கணையாய்ப் பாய்கிறது மழைத்துளி.. உளம் துளைத்து உள்ளே பாயும் உன் கருணை போல்.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 104

Image
மனமெனும் அரங்கத்தின் மேடை பொறிகளே.. அரங்கம் ஆட ஆட மேடை பலமடையும் அதிசயம்.. அரங்கம் ஆடுவது ஆபத்து.. அதை நிறுத்திவிட்டு நீ ஆடு.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 103

Image
களிமண்ணாய்க் கிடந்த மூளையைப் பிடித்து உன் உருவம் செய்துவிட்டாய்.. அப்படியே கல்லாகிவிட்டது.. மனமோ.. உன்னை எதிரொளிக்கும் நீலக்கடலாகி ஆர்ப்பரிக்கிறது.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 102

Image
வினை தீர்வது. நோய் அகல்வது.. துன்பம்‌ தீர்வது.. இன்பங்கள் சேர்வது.. செல்வம் கொழிப்பது.. நிம்மதியாக வாழ்வது.. அனைத்துமே உனை வணங்குவதன் பக்க விளைவுகள்.. என் முதல் நோக்கம் நான் உன்னையும் நீ என்னையும் இடையறாது நோக்குவதே.. Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 101

Image
உன் குழலோசை தெளிவாய்க் கேட்கவேண்டும் என்பதால் காற்றை மெதுவாய் வீச உத்தரவிட்டிருக்கிறேன். உன் வரவை அறிவிக்கும் நூபுர த்வனி கேட்க யமுனையும் சத்தமின்றி அமைதியாய் நடக்கிறாள். நீ இவ்வனத்தில் நுழையும்போது கூவச்சொல்லி குயிலை எல்லையில் நிறுத்தியிருக்கிறேன். நிலவை நீ வந்தபின்பு யாரும் பார்க்கமாட்டார்களாம். அதனால் நீ வருவதற்குள் வானில் பட்டொளி வீசி ஒரு சிற்றுலா செல்வேன் என்கிறது. அதன் கொட்டம் அடங்குமாறு சட்டென்று இவ்விடம் வா... Previous    Home   Next

க்ருஷ்ணமாதுரி - 100

Image
உன்னோடு எனக்குள்ளாகவே நான் பேசிய பேச்சுக்களின் பேரிரைச்சலில் காதுகள் செவிடாகிவிட்டன.. மனதோ ஊமையாகிப்போனது. இரைச்சல்களினூடே கேட்கும் உன் மெல்லிய குழலோசை நரம்புகளால் உடலைச் சிறையிடுகிறது.. வடதிசை நோக்கும் காந்தமுள்ளாய் புலன்களனைத்தும் உன்னை நோக்கியவாறு... Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 99

Image
தாமரைக் கரங்களில் பூத்த முல்லைப்பூ விரல்களால் ஏழிசை தொடுக்கிறாய்.. மயக்கும் மலர்வனமாய் என் மனவனத்தில் நடக்கிறாய் என் சொல்லும் செயலும் உனைச் சேர்வதாலேயே பொருள் கொள்கின்றன. இதோ.. நானும் யாத்த கவிதைகளும் உன் தளிர்ப்பதத்தடியில் குப்பையாய்.. ஏற்பதும் விடுப்பதும் நின் செயல்.. -------- க்ருஷ்ணார்ப்பணம்.. பிறகு வரும்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 98

Image
ஸார்வபௌமனான நீயே எனக்கு ஸர்வமும்.. உன் வெண்கொற்றக்குடை நிழலின் அன்புக் குளிர் என்னை வாட்டுகிறது.. குளிர் போக்க அன்பின் ஆதவனான நீ கொஞ்சம் அருகில் வாயேன்.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 97

Image
அன்றொருநாள் நதிக்கரையில் நண்பர்களோடு விளையாடும்போது கலைந்த மயில்பீலியைச் சரிசெய்யும் சாக்கில் விளையாட்டாக ஒரு ஓரப்பார்வை வீசி மனம் கலைத்துப்போனாய்.. அன்றுமுதல் உன்னிடம் பேசவேண்டியவற்றை முடிச்சுப் போட்டு நினைவு வைக்கத் துவங்கினேன். இனி சேலையில் முடிந்து வைக்க இடமில்லை.. முடிச்சுப்போட இனி சேலையும் இல்லை.. இன்று உன்னைக் காணும்போழ்து சேலை முடிச்சுக்கள் மறந்துபோய்.. இதயம் தாய்மொழி மறந்து முடிச்சிட்டுக்கொண்டது.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 96

Image
எண்பத்து நான்கு லட்சம் உயிர்வகை படைத்தாய்.. எண்பத்து நான்கு கோசங்களில் உன் ஸ்ரீ வனம்.. நீ படைத்தவற்றுள் ஓருயிரான எனக்கு உன் வனத்திலேயே ஒரு மூலை கொடு.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 95

Image
தினமும் அதே கதவின் பின்னால் ஒளிந்துகொண்டு கண்டுபிடிக்கச்சொல்லும் குழந்தையைப் போல்.. உள்ளுக்குள்ளேயே ஒளிந்துகொண்டு தேடிக் காணச் சொல்கிறாய்.. உன் பெயர் சொன்னால் எழும் சுகந்தமே போதும் நீ ஒளியுமிடம் உணர.. Previous    Home    Next

க்ருஷ்ணமாதுரி - 94

Image
ஆனானப்பட்ட அசுரர்களையெல்லாம் கணத்தில் ஒழித்த நீ என் அகம்பாவம் கண்டு ஒளிவது விந்தை.. உன் ஒரே ஒரு மென்சிரிப்பில் 'நான்' அழிந்துபோகுமே.. இன்னும் என்ன தாமதம்? Previous   Home    Next

க்ருஷ்ணமாதுரி - 93

Image
இதோ வந்தாயிற்று என்று எண்ணி எண்ணியே நடக்கிறேன்.. அருகில் வர வர தூரம் அதிகமாகிறது.. தொடுவானமாகிவிடாதே நீலவண்ணா.. தொடும் வண்ணம் என் அருகில் வா.. Previous    Home    Next