க்ருஷ்ணமாதுரி - 97


அன்றொருநாள்
நதிக்கரையில்
நண்பர்களோடு
விளையாடும்போது
கலைந்த மயில்பீலியைச்
சரிசெய்யும் சாக்கில்
விளையாட்டாக
ஒரு ஓரப்பார்வை வீசி
மனம்
கலைத்துப்போனாய்..

அன்றுமுதல்
உன்னிடம் பேசவேண்டியவற்றை
முடிச்சுப் போட்டு
நினைவு
வைக்கத் துவங்கினேன்.

இனி சேலையில்
முடிந்து வைக்க இடமில்லை..
முடிச்சுப்போட
இனி
சேலையும் இல்லை..

இன்று
உன்னைக்
காணும்போழ்து
சேலை முடிச்சுக்கள்
மறந்துபோய்..

இதயம்
தாய்மொழி மறந்து
முடிச்சிட்டுக்கொண்டது..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37