Posts

Showing posts with the label guruvarul_ondre_gathi

குருவருள் ‌ஒன்றே கதி - 35

Image
அவதார புருஷர்கள் - 3 ஸ்ரீ ராமக்ருஷ்ண பரஹம்ஸரின் வேண்டுகோளுக்கிணங்க காளி நரேந்திரருக்கு இரண்டு முறை தரிசனம் தந்தாள். இரண்டு முறைகளும் நரேந்திரர் பரவச அனுபவத்தினால் தன்னை மறந்த நிலைக்கு ஆளானார். தன் குடும்ப கஷ்டங்களுக்குத் தீர்வு கேட்க ‌மறந்து பக்தி, ஞானம் மற்றும் வைராக்யத்தை அருளும்படி காளியிடம் வேண்டினார். கடைசியாக  இன்னும் ஒரு முறை பவதாரிணியை நரேந்திரருக்கு தரிசனம் தரச் சொல்லி வேண்டினார் குருநாதர். இம்முறையும் இரவு பன்னிரண்டு மணிக்கு அன்னையின் கோவிலை நோக்கி நடந்த நரேந்திரர் மிகத் தெளிவாகத் தன் வேண்டுதல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மீண்டும் மீண்டும் தனக்குள் ஒராயிரம் முறை சொல்லிப் பார்த்துக்கொண்டு  சென்றார். இரவு சரியாக பன்னிரண்டு மணி ஆகும்போது கண்ணனின் சோதரியான பவதாரிணி தோன்றினாள். அன்பே உருவான  அன்னையின் முன் நிற்கும் நரேந்திரர் தன் பாக்யத்தை எண்ணி எண்ணி அழ ஆரம்பித்தார். சொல் நரேந்திரா? இன்று மறுபடி வந்திருக்கிறாயே. என்ன வேண்டும் உனக்கு? அன்பின் கீதமாய் இசைக்கும் அவளது குரலினிமையில் மயங்காதார் எவர்? நரேந்திரர் தெளிவாகக் கேட்...

குருவருள் ஒன்றே கதி - 34

Image
அவதார புருஷர்கள் - 2 ஸ்ரீ ராமருஷ்ண பரமஹம்ஸரின் வேண்டுதலுக்கிணங்க தனக்கு தரிசனம் கொடுத்த பவதாரிணியிடம் தன் குடும்ப கஷ்டங்களுக்கு விமோசனம் கேட்காமல், பக்தியும் ஞானமும் வேண்டுமென்று கேட்டார் நரேந்திரன். மீண்டும் இன்று தரிசனம் தரச் சொல்கிறேன், இன்று உன் ப்ரச்சினைகளைப் பற்றி காளியிடம் கேட்டுக்கொள் என்றார் பரமஹம்ஸர். இன்றும் அன்னையின் தரிசனத்திற்காக இரவு பன்னிரண்டு மணிக்குக் கோவிலுக்குச் சென்றார் நரேந்திரன். திரும்ப திரும்ப, தன்னுடைய வேண்டுதல்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு போனார். நியாபத்திற்காக சிறு குறிப்பு கூட எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார் . இரவு பன்னிரண்டு மணிக்கு பரமஹம்ஸரின் வாக்கை சத்தியமாக்க அன்னை தோன்றினாள். அவளது தோற்றம் மயக்குவதாக இருந்தது. ஸாக்ஷாத் பகவத் ஸாந்நித்யம். குப்பென்று அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி வந்து அடைத்தது.  காற்றில் அலையும் குழலும், அவளது ஆடையும், தாமரைக் கண்களும், நீண்டு தொங்கும் நாக்கும், அழகிய முகமும், பயத்தை ஏற்படுத்துவதாக இல்லை. சிங்கத்தைப் பார்த்து மற்றவர்கள்‌பயப்படலாம். தாய்ச் சிங்கத்திடம் குட்டிச்‌சிங்க...

குருவருள் ஒன்றே கதி - 33

Image
அவதார புருஷர்கள் 'உலகில் எத்தனை ஜீவராசிகள் உள்ளனவோ அத்தனை வழிகள் உள்ளன இறைவனைக் காண்பதற்கு'  என்பது ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் வாக்கு. அவற்றுள் எந்த வழியைப் பின்பற்றி  ஒருவர் இறைவனை தரிசனம் செய்தாலும் அல்லது ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்தாலும் அவர் மஹாத்மாவாகிவிடுவார். யார் வேண்டுமானாலும் ஒரு ஸாதுவின் கருணையினாலோ, அல்லது வேறு ஸாதனைகள் மூலமோ கூட மஹாத்மாவாகிவிட முடியும். ஆனால், அவதார புருஷர்கள் என்பவர்கள் இறைவனின் அம்சமாகவோ, அல்லது இறைவனோ நேரடியாக பூமியில் இறங்கி வருபவர்கள். அவர்கள் பூமிக்கு வந்து செய்ய வேண்டிய சாதனைகள் ஏதுமில்லை. காலத்திற்கேற்றபடி எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற ஒரு மார்கத்தை நிறுவுவதே அவர்களது பணி. அப்படிப்பட்ட அவதார புருஷர்கள் பெரும்பாலும் தனியாக வருவதில்லை. இரட்டையர்களாகவே அவதரிக்கிறார்கள். அவர்கள் அவதரிக்கும்போது கைங்கர்யத்திற்காக அவர்களது பரிவாரங்களும் ஆங்காங்கே பிறந்துவிடுவார்கள். ஸ்ரீ ஆளவந்தார் - ஸ்ரீ ராமானுஜர்,  ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர் - ஸ்ரீ நித்யானந்தர்,  ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் - ஸ்ரீ விவேகானந்தர்,  எனும்படியாக இரண்டி...

குருவருள் ஒன்றே கதி - 32

Image
குழந்தை மனம் - 2 இராமேஸ்வர பட் என்ற பண்டிதர் சொல்லக் கேட்டு குழந்தை போன்ற தெள்ளிய மனமுடையாரான ஸந்த் துகாராம் தான் எழுதிய அத்தனை அபங்கங்களையும் மூட்டை கட்டி இந்திராயணி நதியில் போட்டுவிட்டார். அத்தனை பாடல்களும் அவர் ஆழ்ந்த அனுபவத்தில் திளைத்திருக்கும் போது விட்டலன் அருளால் வந்து கொட்டியவை. எனவே, பெற்ற குழந்தையைத் தொலைத்தது போன்ற துக்கம் மேலிட்டு நதிக்கரையிலேயே அமர்ந்து அழத் துவங்கினார். ஒரு நாளாயிற்று. இரண்டு நாளாயிற்று. மூன்றாவது நாளும் ஆயிற்று. உணவு செல்லவில்லை. நீரும் செல்லவில்லை. அவரது அழுகையும் நின்றபாடில்லை. அங்கே பண்டரிபுரத்தில் காலை ப்ரபோதனத்திற்காக கதவைத் திறந்த பண்டாவுக்கு ஒன்றும் புரியவில்லை.  முதல்நாள் இரவு, டோலோத்ஸவம் செய்து அவர்தான் காப்பிட்டுச் சென்றார். மறுநாள் காலை கதவைத் திறந்தால், பாண்டுரங்கனின் தலையில் ஒரு பெரிய சாக்கு மூட்டை இருந்தது. அவனது உடைகள் அனைத்தும் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தன. எல்லா பண்டாக்களும் ஓடிவந்தனர்.  என்ன லீலை புரியலையே. எங்க போய் மூட்டையைத் தூக்கிண்டு வந்தாரோ? என்ன மூட்டை? இறக்குங்கோ பாக்...

குருவருள் ஒன்றே கதி - 31

Image
குழந்தை மனம்‌ - 1 ஸந்த் துகாராம் ஒரு சமயம் மாலை வேளையில் கீர்த்தனம்‌ செய்வதற்காக நதிக்கரையில் அமர்ந்திருந்தார். மிகவும் எளிமையாக ப்ரதேச மொழியில், பக்தி சொட்டும்படி  அமைந்திருந்த அவரது பாடல்கள்‌, அனைவரையும் அவர்பால் ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. தினமும்‌ மாலை வேளைகளில் நடக்கும் கீர்த்தனத்தைக் கேட்க, ஆயிரக் கணக்கில்‌ மக்கள் கூடுவர். கீர்த்தனம்‌ பாடி பாடி, பகவத் குணமும்‌ சொல்வார். அந்த ஸத்சங்கம் நள்ளிரவு வரை நீடிக்கும். மறுநாள்‌ காலை, விவசாயி யா கட்டும், நெசவாளியாகட்டும், வியாபாரியும்கூட  முதல் நாள் கேட்ட கீர்த்தனத்தைப் பாடிக்கொண்டே பணியைச் செய்வார்கள்.  அவ்வூரில் இன்னும் சில பௌராணிகர்கள் இருந்தார்கள். துகாராமின் கீர்த்தனத்தைக் கேட்க வரும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ராமேஸ்வர பட் என்ற பண்டிதருக்கு பொறாமை கொழுந்து விட்டெரிந்தது. நதிக்குப் போகும் வழியில் அவரது வீடு இருந்தது. மாலை வேளைகளில் துகாராமின் ஸத்சங்கத்திற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வதைக் கண்டு அவருக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று.  எவ்வளவு தைரியம் பார் அவனுக்கு? படிச...

குருவருள் ஒன்றே கதி - 30

Image
ஸ்பர்சவேதி - 2 பக்கத்துவீட்டிலிருந்து  கடன் வாங்கிக்கொண்டு வந்திருந்த, இரும்பையெல்லாம் தங்கமாக்கும் சக்தி பெற்ற,  ஸ்பர்சவேதிக் கல்லை நாமதேவர் சிறிதும் யோசிக்காது நதியில் விட்டெறிந்துவிட்டார்.  அதிர்ந்துபோனாள் நாமதேவரின் மனைவியான ராஜாயி.  இப்படிப் பண்ணிட்டீங்களே. நான் பக்கத்து வீட்டில் கடனா வாங்கிட்டு வந்தது. ரெண்டுநாளில் திருப்பித்தரேன்னு சொல்லியிருக்கேன். இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்றது? யாரா இருந்தாஎன்ன?  இப்படியெல்லாம் பொருளாசை பிடித்து அலையக்கூடாது. இந்த மாதிரி விஷயமெல்லாம் ஆபத்தில் கொண்டு விடும். அவங்களுக்கும் நல்லதுதான் பண்ணியிருக்கேன் இதையெல்லாம் அவங்க ஒத்துப்பாங்களா? சண்டை போடுவாங்களே. அவங்க ஏதாவது சொன்னா பாத்துக்கலாம். பேசாம இரு  என்று மனைவியை அடக்கிவிட்டார். நாமதேவர் விட்டல ஸ்மரணத்தினால், எந்த விதமான ஆசைகளுக்கும் ஆட்பாடாமல் இருக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர் சும்மா இருப்பாரா. கல்லைக் கொண்டுவரும்படி அவரது மனைவியிடம் சொல்ல, அவள் தயங்கித் தயங்கி ராஜாயியிடம் கொடுத்ததைச் சொல்ல, அவளை பயங்கரமாகத...

குருவருள் ஒன்றே கதி - 29

Image
ஸ்பர்சவேதி - 1 ஸந்த் நாமதேவர் பெரிய மஹாத்மா. மஹாத்மாவாக இருந்தபோதிலும், யார் எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார். தானாக வியாபாரம் செய்தோ, வேலைக்குச் சென்றோ தேவையான அளவு பொருளீட்டுவதற்கு அவரது மனோபாவம் ஒத்துழைக்கவில்லை. வெகு குறைவான சம்பாத்யம்.  எந்நேரமும் கோவிலிலேயே வாசம்‌செய்துகொண்டு விட்டல ஸ்மரணத்திலேயே ஆழ்ந்திருந்ததால், அவரால் சமூகத்திற்கேற்றபடி வாழவும் இயலவில்லை.  குடும்பத்தில் நிறைய குழந்தைகள், ஜனாபாய், நாமதேவரின் தாயார், இவர்களைத் தவிர திடீர் திடீரென்று வரும் விருந்தினர்கள். செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது.  அவரது மனைவிதான் எப்படியோ சமாளித்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.  ஒருநாள் பக்கத்து வீட்டுப் பெண்மணியை கவனித்ததில் ஏதோ விசேஷமாகப் பட்டது. எதுவாயினும் பகிர்ந்துகொள்பவள், சில நாட்களாக எதுவும் பேசுவதில்லை. புதுபுது நகைகளாகப் போட்டுக்கொண்டிருந்தாள். நாமதேவரின் மனைவியான ராஜாயிக்குத் தெரிந்த வரையில், பக்கத்து வீட்டுக்காரர் மிகவும் சாதாரணமாக  வேலை செய்பவர்தான். திடீர்ப் பணப்புழக்கத்தின் காரணம் புரியவில்லை....

குருவருள் ஒன்றே கதி - 28

Image
முதலைக்கு அருள் - 2 தன்னைச் சோதனை செய்வதற்காகக் குளத்தில் முதலையைக் கொண்டுவிட்டுவிட்டு இப்போது கதறியழும் அந்த மனிதனைக் கருணையோடு பார்த்தார் ஆலங்குடி பெரியவா.  நீ ஒன்னும் தப்பு பண்ணலப்பா. அழாத. நான் சொன்னது நிஜம்தானா சரிபாக்கறது ஒரு தப்பா. அழாத. என்றார். இப்படிக்கூட ஒருவர் இருக்கமுடியுமா? முதலை கடித்து காலில் குருதி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, எவன் அதற்குக் காரணமோ அவனிடம் இவ்வளவு கருணையோடு ஒருவர் பேசமுடியுமா? ஸாதுக்களால் மட்டுமே இயன்ற விஷயம் அது. அவன் அழுதுகொண்டே சொன்னான். நீங்க உடனே வாங்க. இதுக்கு மருந்து போடலாம். உங்களுக்கு வேணும்னா முதலை கடிச்சாக்கூட  வலிக்காம இருக்கலாம். ஆனா இதுக்குக் காரணமான என்னால் உங்க காலில் ரத்தம் வரதைத் தாங்கமுடியாது.. பெரியவா அவனைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டுச்  சொன்னார், நான் கஜேந்திர மோக்ஷம் மட்டுமா சொன்னேன்? அதுக்கு முன்னாடி ஜடபரதர் சரித்ரமும் சொன்னேனே. ஆத்மா வேற சரீரம் வேற ன்னு உபதேசம் பண்ணினேனே. அதுவும் நிஜம்தானே. அதனால், உடம்பில் இருக்கும் காயம் என் ஆனந்தத்தை பாதிக்காது. கவலை...

குருவருள் ஒன்றே கதி - 27

Image
முதலைக்கு அருள் - 1 ஆலங்குடி பெரியவா என்ற மஹாத்மா தென் தமிழகத்திலும் தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றைச் சுற்றியும் சுற்றித் திரிந்து வந்தார். ஸ்ரீ மத் பாகவதமே அவரது உயிர்‌மூச்சு. யார் அழைத்தாலும் அங்கு சென்று ஸ்ரீ மத் பாகவதம்‌ சொல்ல ஆரம்பித்துவிடுவார். திகம்பரராக சுற்றித் திரிந்த அவரிடமிருந்து அனவரதமும் ஸ்ரீ மத்பாகவத ஸ்லோகங்கள் வந்துகொண்டே இருக்கும். அவரது உபன்யாசத்தைக் கேட்ட சிலர், அவரிடம் வந்து, நீங்க ரொம்ப அழகா பாகவதம்‌சொல்றேள். திகம்பரரா இருந்துண்டு சொல்றதால‌ பொது மக்களும்‌, பெண்களும் வந்து கேக்கணும்னு ஆசையிருந்தாலும், சங்கடப்படறா. என்றதும்,  அப்டின்னா ஸந்நியாசம்‌ வாங்கிக்கறேன். எல்லாரும் பாகவதம்‌ கேக்கணும்‌ அவ்ளோதான்  என்று சொல்லி ஸந்நியாசம்‌ வாங்கிக்கொண்டுவிட்டார்.  ஒரு சமயம்‌ ஒரு கிராமத்தில், கஜேந்திர மோக்ஷம்‌ சொல்லிக் கொண்டிருந்தார். அதைக்கேட்ட நாஸ்திகனான ஒருவன், முதலை காலைப் பிடிக்குமாம், ஸ்லோகம் சொன்னா‌ விட்டுடுமாம். என்ன கதை விடறார் இவர் என்று நினைத்தான். பெரியவா ஊர்க்குளத்தில் அதிகாலை ஸ்நானம் செய்யப்போவார்.  மற...

குருவருள் ஒன்றே கதி - 26

Image
காகமும் கருடனும் ஸந்த் ஏகநாத ஸ்வாமி பைடன் என்றழைக்கப்படும் ப்ரதிஷ்டான புரத்தில் வசித்துவந்தார். இறைவனே அவருக்கு பன்னிரண்டு வருடங்கள் சேவை செய்தபோதிலும், ஊரார் அனைவரும் அவரை  மஹாத்மா என்று போற்றியபோதிலும் அவரது மகனான ஹரிக்கு ஏகநாதர் மீது பூரண நம்பிக்கை வரவில்லை.  நம்மோடுதான் எப்போதும் இருக்கிறார். நம்மைப் போலவே குளிக்கிறார், சாப்பிடுகிறார், உறங்குகிறார், ஜபம் செய்கிறார், பூஜை செய்கிறார். மஹாத்மா என்று கொண்டாடும் அளவிற்கு இவரிடம்  வேறென்ன தனித்தன்மை இருக்கிறது என்ற அலட்சியம் இருந்தது.  யாரேனும் வந்து புகழ்வதை ஏகநாத ஸ்வாமி அறவே தவிர்த்த போதிலும், அதைத் தாண்டி அவரைக் கொண்டாடுபவர்களும் இருக்கத்தான் செய்தனர். அவ்வூரிலிருந்த பெண்மணி ஒருத்தி ஏதோ காரணத்திற்காக ஸஹஸ்ர ப்ராம்மண போஜனம் செய்விப்பதாக வேண்டிக்கொண்டாள். அதாவது ஆயிரம் அந்தணர்களுக்கு உணவிடுதல். வேண்டுதல்‌ நிறைவேறிவிட்டது.  ஆனால், அவளது வறுமை காரணமாக ஆயிரம் பேருக்கு அவளால் உணவிட இயலவில்லை. வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற இயலாமல்‌மிகவும் வருந்தினாள். ஒருநாள் அவளது குலதெய்வம் அவளது கனவில் ...

குருவருள் ஒன்றே கதி - 25

Image
மாறிடும்‌ பொல்லா விதி ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் அணுக்கமான சீடர் மதுர்பாபு என்பவர். அவர் அன்னை பவதாரிணி கோவிலைக் கட்டிய ராணி ராசமணி என்பவரின் மாப்பிள்ளையாவார். பெரும்‌செல்வந்தரான ராணியின் மூத்த மகளைத் திருமணம் செய்திருந்த அவரிடம் சொத்து முழுவதையும்‌ நிர்வகிக்கும்‌ பொறுப்பைக் கொடுத்திருந்தார் ராணி. திடீரென மூத்த மகள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, சிறிதுகாலம் கழித்து இளைய மகளையும் அவருக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார் ராணி ராசமணி. மதுர்பாபு மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்பதும் அதற்குக் காரணம். சிறிது நாள்களாக மதுர்பாபுவின் முகம் வாடியிருப்பதைக் கண்ணுற்ற ஸ்ரீ ரமக்ருஷ்ணர் அவரைக் காரணம் கேட்டார். மதுர்பாபு முதலில் எதுவும் சொல்லவில்லை. மிகவும் வற்புறுத்திக் கேட்கவே,  விடுங்கள் மஹராஜ், எல்லாம் விதிப்படிதான் நடக்கும். என்ன? விதிப்படி என்ன நடக்கும்? என் முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துட்டா. இப்போ இரண்டாவது மனைவியின் உடல்நிலையும் மோசமாயிட்டே வருது. ஒருவேளை இவளுக்கும் ஏதாவது ஆயிட்டதுன்னா என்ன செய்யறதுங்கற கவலைதான். பிறப்பு இறப்பெல்லாம் ந...

குருவருள் ஒன்றே கதி - 24

Image
குருவின் பொறுமை தற்போது பைடன் என்றழைக்கப்படும் ப்ரதிஷ்டானபுரத்தில் ஒருவன் வசித்து வந்தான். வேலை வெட்டி ஒன்றும் பார்ப்பதில்லை. மிகவும் சோம்பேறி. எப்போதும் கோதாவரி நதிக்கரையிலிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்து நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருப்பான். இப்படி இருந்தபோதிலும், அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவ்வூரில் வசித்து வந்த மஹாத்மாவான ஸந்த் ஏகநாதரை தினமும் ஒருமுறையாவது தரிசித்துவிடுவான்.  ஒருநாள் அவன் சூதாட்டத்திற்கு மிகவும் தாமதமாக வந்தான். அவனது நண்பர்கள், ஏனடா, இவ்ளோ நேரமா? அப்படி என்ன வேலை? சீக்கிரம் வந்தாத்தானே ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். இல்லடா, கொஞ்ச நேரமாயிடுச்சு. அதான் வந்துட்டேன்ல. ஆட்டாம் ஆரம்பிக்கலாம். இருடா, அப்படி என்ன வேலை உனக்கு? ஏன் இவ்ளோ நேரம்? சொல்லு. நாங்களும் தெரிஞ்சுக்கறோம். சொன்னாத்தான் மேல இன்னிக்கு ஆட்டம். அதுவா..  சற்று தயங்கினான். சொல்லுடா.. இந்த ஊர்ல ஏகநாதர்னு ஒரு மஹாத்மா இருக்காரே. தினமும் அவரைப் பாத்து வணங்கிட்டுத்தான் வருவேன். இன்னிக்கு அவர் வெளில வர தாமதமாயிடுச்சு. இருந்து பாத்துட்டு வந்தேனா. அதான். ...

குருவருள் ஒன்றே கதி - 23

Image
குருவின் ஸாந்நித்யம் - 5 மரவுரி, ஜடாமுடி, உச்சியில் கொண்டை, நீண்ட தாடி, சீதையைத் தேடி அலைந்துகொண்டு வரும் கோலம். ஆனால், இந்த ஒரு திருக்கோலத்திலும் எத்தனை அழகு?  ராமலக்ஷ்மணர்களைக் கண்டு முனிவரும் மயங்குகின்றனர். லக்ஷ்மணன் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் கேட்டான் தம்பீ, இங்க சபரியோட வீடு எங்க இருக்கு? அவர்களுள் ஒருவன் சபரிக்கு விஷயம் சொல்ல ஓடினான். சபரி பாட்டியா, அவங்க உங்களுக்காகத்தான் ரொம்ப நாளா காத்துக்கிடிருக்காங்க. நீங்க வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்.  என்று சொல்லி முன்னே நடந்தான்.  சிறுவன் ஓடிவந்து சொன்னதும், சபரியை ஒருவிதப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எழுந்து நின்றாள்.  தூரத்தில் தபஸ்விகள் போன்ற இருவர், கைகளில் வில்லேந்தி கம்பீரநடையோடு வந்து கொண்டிருந்தனர்.  பார்த்தவுடன் குருவருளால் புரிந்துகொண்டாள். குரு தனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள்தான் வருகிறதென்று. மந்திரத்தின் பொருள் வேறென்ன? இறைவனேதான் என்று உள்ளுணர்வால் வழிகாட்டினார் குருதேவர். இதோ இவங்கதான் சபரிபாட்டி கையைக் காட...