நீ என்னை

நினைக்கும் நேரம் மட்டுமே..
நான் உன்னை நினைக்கிறேன்.
உன் வயிற்றில்
மிதக்கும் பேரண்டங்களில்
நானும் ஒரு தூசியாக இருப்பினும்..
எப்போதும் நான்
உன் நினைவில் இருக்க,
உன் இதய ஓரத்தில்
நிரந்தரமாக
ஒரு கரும்புள்ளியாகவாவது
இருந்தாகவேண்டும்.



Comments