மனம் கேட்பதனைத்தையும்

மிகவும் சிரமப்பட்டு
ஓய்வொழிச்சல் இன்றி
எங்கெங்கோ அலைந்து
எப்படியோ தேடி கொடுத்துக்கொண்டே இருந்தேன்.
ஆச்சரியம்..
கொடுப்பனைத்தும்
கண‌நேரத்தில்
காணாமல் போயிற்று..
உள்ளே வந்து பார்த்தால்தான் தெரிகிறது..
மலையப்பனான நீ
அனைத்தையும் விழுங்கிக்கொண்டிருக்கிறாய்..
இனி கொடுக்கப் பொருளேதுமில்லை
என்னைத் தவிர..


Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37