கனவில் வந்த முகம்‌

மறந்துபோயிருந்தாலும்,
விழிக்கும்போது எழும் புன்னகைக்குக்
காரணம்
கனவில் கேட்ட
உன் குழலிசைதான்.
சொல்லத் தெரியாமல்
கனக்கும் மனம்
சட்டென்று ஒரு கணத்தில் லேசாவதின் காரணம்
உன் மனத்தில்
ஒரு கணம் எழுந்த
என் நினைவுதான்.
அலையலையாய் எழும்
எண்ணக் குவியல்களின் நடுவில்
சட்டென்று மனம் சிந்தனையற்று நிற்பதன் காரணம்
உன் மயிலிறகசைவுதான்.
இதுவரை
பார்க்கவில்லையென்றாலும்
மறைபொருளாய்
என் பக்கலில் எப்போதும் இருப்பது
நீ நீ நீயேதான்.



Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37