ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (5)

தர்ஶனம் நோ தித்ருக்ஷூணாம் தேஹி பாகவதார்ச்சிதம்|
ரூபம் ப்ரியதமம் ஸ்வாநாம் ஸர்வேந்த்ரிய குணாஞ்ஜனம்||
( ஸ்ரீமத் பாகவதம் 4:24:44)

ப்ராசீன பர்ஹிஸ் என்பவரின் புதல்வர்களுள்‌ பதின்மர்  ப்ரசேதஸர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பூமியில் ஸ்ருஷ்டியை ஏற்படுத்துவதற்காகக் கிளம்பிய அவர்களுக்கு ஸ்ரீ ருத்ரன் தரிசனம் கொடுத்து, ஸ்ரீ ஹரியின் பெருமைகளையும், அவரை அடையும் மார்கத்தையும் உபதேசம் செய்தார். அதிலிருந்து ஒரு ரத்தினம் இதோ :

ஹே பகவன்! 
தங்களது திருவுருவம் அடியார்களுக்கு மிகவும் ப்ரியமானது. எல்லா இந்திரியங்களுக்கும் நன்மை பயக்கும் மருந்து போன்றது. பக்தர்களால் விரும்பி வணங்கத்தக்க தங்கள் திருவுருவத்தை  எமக்குக் காட்டுங்கள்..


Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37