Posts

திருக்கண்ணன் அமுது - 22

Image
தென்றலின் தாலாட்டு கண்ணன் பிறந்தது முதல், கோபிகளுக்கு நினைவும் செயலும் அவனே ஆனான். தலை சரியாக நிற்காத பருவத்திலேயே அவன் ஒரு கோபியைப் பார்த்துச் சிரிப்பதும், இன்னொருத்தியைப் பார்த்தால் முறைப்பதும், ஒருத்தியைப் பார்த்து அழுவதுமாக விஷமங்கள் செய்து அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.‌ பாலாரிஷ்டம் நீங்குவதற்காக மாதாமாதம் ரோஹிணியன்று ஆயுஷ்யஹோமம் நடக்க ஏற்பாடாயிற்று.  அதையொட்டி ஏராளமான தானங்களை நந்தன் வழங்கினார். முதல் மாத ரோஹிணியன்று ஹோமம் முடிந்ததும், முற்றத்தில் புகை அதிகம் இருந்ததால், யசோதை குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள். குழந்தை தூக்கக்கலக்கத்தில் இருந்ததால், தாலாட்டுப் பாடி, தொளில் போட்டுத் தட்டினாள். கண்ணன் அறிதுயில் கொண்டான். எவ்வளவு நேரம் தூங்குகிற குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது? அன்னைக்கும் கஷ்டம், குழந்தையும் நிம்மதியாய் உறங்காது. எனவே, ஒரு சேடிப் பெண்ணிடம் கண்ணைக் காட்ட, அவள் தோட்டத்திலேயே ஒரு தூளிக்கு ஏற்பாடு செய்தாள். அங்கே நிறுத்தியிருந்த பெரிய மாட்டு வண்டியின் அடியில், ஒரு புடைவையைக் கட்டி தூளிபோல...

திருக்கண்ணன் அமுது - 21

Image
த்ருஷ்டி போக்குபவனுக்கு த்ருஷ்டி  எப்படி வாழ்ந்தாலும், என்ன‌ செய்தாலும்‌ முடிவில் இறைவனை அடைந்துவிட்டால் அவர்கள் மீளாப் பதம் அடைந்துவிடுகின்றனர். அவரவர் வாசனையைப் பொறுத்து இறைவன்‌மீது அன்பு‌செலுத்துவதோ, அல்லது எதிர்ப்பதோ அமைகிறது.  இறைவன் தன் பால் அன்போடு நினைப்பவரையும், எதிர்ப்பவரையும் ஒன்றே போல் பாவித்து அவரவர் எண்ணத்தைப் ப்ரதிபலிக்கும் மார்கத்திலேயே சென்று அவர்களைத் தன்னிடம்‌ சேர்த்துக் கொள்கிறான். கண்ணனின் அதரம் பட்ட உடல் புனிதமாகி விட்டது. இறந்துபட்ட பூதனையின் உடலை அப்படியே தகனம் செய்தால் ஊரே பற்றி எரியும் என பயந்து சிறிது சிறிதாக வெட்டி எடுத்து தனித்தனியாக தகனம் செய்தனர். பெரிய ஞானிகள் அடையும் பதத்தை அவள் அடைந்து விட்டதால் புனிதமான அவளது உடல் எரிக்கப்படும் போது, துர்நாற்றம் வீசாமல், சந்தன மணமும் அகிலின் மணமும் மற்ற மகிழ்வான வாசனைகளும்‌ வீசின. இதற்குள் வசுதேவரைச் சந்திக்க போயிருந்த நந்தன் அவசரமாகத் திரும்பி வந்தார். வசுதேவரை ரகசியமாகச் சந்தித்த நந்தனிடம் அவர் சில விஷயங்கள் சொல்லியனுப்பினார். ரோஹிணியின் புதல்வனைப் பற்றிய கவலைதான் மிகுந்திருந்ததே தவிர கண்ணன் அவர்களது மையப்ப...

திருக்கண்ணன் அமுது - 20

Image
பூதனையின் பேறு அழகான உருவம் கொண்ட பூதனை நந்தனின் அரண்மனை வாயிலில் கால் வைத்ததுமே, கண்ணன் உறங்குவதுபோல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தான். அட, குழந்தை தூங்கறானே.. பரவால்ல, கொஞ்ச நேரம்‌ கையில் வெச்சுக்கறேனே, எவ்ளோ அழகு இந்தக் குழந்தை.. முதன் முதலில் இறைவனின் ஸ்பரிசம் அவளை என்னவோ‌ செய்தது. இவ்வளவு அழகான குழந்தையைக் கொல்வதா? அவள் மனத்தில் லேசான சஞ்சலம். இதுவா அரசனைக் கொல்ல வந்திருக்கும்? ம்ஹூம். எல்லாக் குழந்தைகளையும் கொல்வதுதான் அரசன் உத்தரவு. மீறினால்,  நமது உயிர் போய்விடும். சிறிது நேரம் மடியிலிருந்த  குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். கண்ணன் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அழகை ரசித்தாள் போலும். விழிக்கட்டும், பிறகு பாலைக் கொடுத்துக் கொல்லலாம், என்று நினைத்தாளோ தெரியவில்லை. கண்ணனோ கண்ணைத் திறப்பதாக இல்லை. ஏனாம்?  முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் முதன்முதலில் தாடகை என்ற ஒரு பெண் அரக்கியைக் கொல்ல நேர்ந்தது.  இந்த அவதாரத்திலும், முதலில் பெண் அரக்கி வந்திருக்கிறாளே என்று யோசித்தானோ.. கண்ணைத் திறந்து பார்த்து விட்டால் கருணை வந்துவிடும், பிறகு கொல்லமுடியாதென நினைத்தானோ.. அல்லது...

திருக்கண்ணன் அமுது - 19

Image
அழகும் ஆபத்தும் யசோதையின் கால்களுக்கிடையே விழுந்து கிடக்கும் பரம்பொருள் தலை நிற்காமல் அவ்வப்போது முட்டிக்கொண்டு, மூக்கை நசுக்கிக்கொண்டு அழுது, அப்பப்பா.. ஸௌலப்யத்தின் சிகரம் இந்தக் கண்ணன்.  திடீரென்று தேவகியின் வயிற்றில் குழந்தை மறைந்தது. அதே சமயம் நந்தன் வீட்டில் அடைக்கலமாய் வசிக்கும் வசுதேவரின் மனைவியான ரோஹிணியின் வயிற்றில் திடீரென்று ஒரு குழந்தை வந்துவிட்டது.  ஒற்றர் மூலம் இந்த விஷயத்தை அறிந்த வசுதேவர், இது இறைவனின் திருவுளமென்று புரிந்துகொண்டு அமைதியாய் இருந்துவிட்டார்.  நந்தன் தன் நண்பரான  வசுதேவரைப் பார்த்து, ரோஹிணியின் குழந்தையைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட்டு, அப்படியே  கண்ணன் பிறந்த சேதியையும்‌  சொல்லிவிட்டு வரலாம் என்று மதுரா கிளம்பிச் சென்றார். கம்சனின் விசேஷ மந்திரிகளுள் ஒருத்தியான பூதனை என்பவள் மிக அழகானவள் போல் உருக்கொண்டாள். மதுராவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடந்த ஒரு மாதத்திற்குள் பிறந்த குழந்தைகளின் வீடுகளுக்கெல்லாம் சென்றாள். பால் கொடுக்கும் சாக்கில், ஒவ்வொரு குழந்தையாகக் கொன்று கொண்டிருந்தாள்.  இப்படியாக,...

திருக்கண்ணன்‌ அமுது - 18

Image
நீராட்டம் குழந்தை பிறந்ததும் நந்தன் அளவற்ற மகிழ்ச்சியுடன் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்தார். குழந்தைப் பேறுக்காக,  குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வங்களுக்கும்,  யசோதையும், நந்தனும் என்னென்ன நேர்ந்துகொண்டிருந்தார்களோ, அத்தனையும் நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்தன. அந்தணர்களுக்கும், மற்றவர்களுக்கும்  ஏராளமான பசுக்களையும், வஸ்திரங்களையும், இன்னும் அவர்கள் விரும்பியவற்றையும்  தானங்களாக  வழங்கினார். கோகுலத்திலுள்ள அத்தனை வீடுகளிலும் அவரவர் வீட்டில் குழந்தை பிறந்ததைப் போல் மகிழ்ந்து தோரணம் கட்டி, வாசலில் தீபமேற்றி, பெரிய கோலங்கள் இட்டிருந்தனர். மகிழ்ச்சி‌ மிகுதியால், ஆங்காங்கே கும்மியிட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தனர். ஆண்கள் பரவசத்தில் கைகளில் என்னென்ன சாமான்கள் கிடைக்கிறதோ எல்லாவற்றையும் கொண்டுவந்து தாளம் போட்டுப் பாடி ஆடினர். இரவும் பகலும் ஒரே மாதிரி இருந்தது, எப்போதும் ஜே ஜே என்றிருந்தது நந்தன் வீடு.  குழந்தையைப் பார்க்க வரும் பலரும், பலவிதமான பரிசுப்பொருட்களால் நந்தன் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர்.  கோபிகள் என்ன பரிசு கொடுப்பார்கள்? ராஜா வீட்டு அழகுக் குழந்தைக்கு...

திருக்கண்ணன்‌ அமுது - 17

Image
பொய்யழுகை பிறந்ததென்னவோ சின்னஞ்சிறு குழந்தை, ஆனால், வீடு கொள்ளாத வேலை.  வருவோரெல்லாம் வந்த வண்ணமே. ஒருவருக்கும் திரும்பிப் போகும் எண்ணமே இல்லை, யசோதை போகச் சொல்லிவிடப் போகிறாளே என்று கோபிகள் மாற்றி மாற்றி அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தனர். கண்ணனைப் பார்த்துக்கொள்ள எப்போதும் ஒரு கோபியர் கூட்டம். ஒரு மணி‌நேரத்திற்கு ஒரு முறை அவனது அலங்காரமும் மாறும். எல்லோரும் அவன்‌ முகம் வாடாமல் பார்த்து பார்த்துக் கொஞ்சிக் கொண்டிருந்தனர். கண்ணனுக்கோ, தான் அழுதால் இவர்கள் என்ன செய்வார்கள் என்பதைக் காண ஆவல் போலும். திடீரென்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழ முயற்சி செய்தான். என்னதான் செய்வான் பாவம்? இதுவரை அழுது பழக்கமில்லை. இப்போது யார் யாரோ அழுததையெல்லாம்‌ நினைவுபடுத்திக்கொண்டு அதுபோல் நடித்தான் என்றுதான் சொல்லவேண்டும். அவன் முகம் மாறியதோ இல்லையோ, அத்தனை கோபிகளுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏன்டி குழந்தை அழறான்? தெரியலையே.. பசியா இருக்குமோ இப்பத்தான் பால் குடிச்சான் ஏதானும் எறும்பு கடிச்சுதா பாரு அவன் உடைகளைக் கழற்றி உதறி, வேறு மாற்றியாயிற்று. அவனுக்குக் கொஞ்சம் வெட்கமாய் இருந்தது. முகம் சிவந்து ...

திருக்கண்ணன் அமுது - 16

Image
நந்தோத்ஸவம் கோகுலத்தில் பொழுது புலர்ந்தது. அங்குள்ள கோபிகளுக்கு மண்டை காய்ந்தது.  நேத்திக்கே யசோதாம்மாவுக்கு இடுப்பு வலி வந்துட்டது. ஆனா, குழந்தை பிறந்த சேதி இன்னும் வரலியே.. நான் போய்ப் பாத்துட்டு வரேன்.. உள்ளே போய் கணவரிடம் சொன்னாள் ஒருத்தி,  நான் போய் யசோதாம்மா வீட்டில் வெல்லம் வாங்கிண்டு வரேன். போனாள். அடுத்தவளும் வீட்டில் ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பினாள். இப்படியாக ஒவ்வொருவராகக் கிளம்பி யசோதை வீட்டிற்கு வந்துகொண்டே இருந்தார்கள். ஒருவரும் திரும்பிப் போகவில்லை. போகவிட்டால்தானே நம் கள்ளன். அவனது, கண்ணும், மூக்கும், கன்னங்களும், சுழிந்த காதுகளும், அலையலையாய்க் கேசமும், திருவடிவழகும் காணக் காண பரவசமாயிற்று,அனைவரும் வீட்டை‌மறந்தனர். போனவர்களை வெகு நேரமாய்க் காணவில்லையென அவர்களது வீட்டிலுள்ளோரும் ஒவ்வொருவராய்க் கிளம்பி வர, நந்தன் வீடு நிரம்பியது. தண்டோரா போட அவசியமில்லாது போயிற்று. நந்த ராஜாவுக்குப் பையனாம் அவ்ளோ அழகாமே பாக்கப் போனவங்க யாரும் திரும்பி வரவே இல்லையாமே பொறந்த குழந்தை பாத்து பாத்து சிரிக்கறதாமே அதிசயம்தான் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் குதித்தனர...

திருக்கண்ணன் அமுது - 15

Image
வாராது வந்த மாமணி உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறிடத்தில் வளர்கிறான் என்று சொல்லிவிட்டு மறைந்தாள் தேவி.   கம்சனுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. குழப்பத்தின் மொத்த உருவமாக இருந்தவனை பயமும் பிடித்துக் கொண்டது. எங்கோ வளர்கிறானாமே, வளர்வதற்குள் கண்டுபிடித்துக் கொன்று விடவேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது? மந்திரிகள் எல்லோரும் வந்தார்கள். எல்லோரும்‌பேசி அற்புதமான முடிவெடுத்தனர். ஊரிலுள்ள அத்தனை குழந்தைகளையும் கொன்றுவிடலாம் என்பதே அது. பிறகு இன்னும் ராஜ்ஜியத்தினுள் ஆலோசித்து பத்து நாள்களுக்குள் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொல்வதென தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் காரியத்தைச் செவ்வனே செய்ய கம்சனின் மந்திரிகளுள் ஒருத்தியான பூதனை முன்வந்தாள். வெளியூர்களுக்குச் செல்லக்கூடாதென்ற நிபந்தனையுடன் வசுதேவரையும், தேவகியையும்‌ சிறையிலிருந்து விடுவித்தான் கம்சன். இருந்தபோதிலும், எந்த நேரமும் மீண்டும் சிறைவாசத்தை எதிர் பார்த்திருந்தார் வசுதேவர். அவரைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்திருந்தான் கம்சன். சத்தம்‌போடாமல் நந்தகிராமம்‌ சென்ற நம் இறைவன் எப்படி இருக்கிறான்? வாருங்கள்‌ கோகுலம்‌ செல்வோம...

திருக்கண்ணன் அமுது - 14

Image
துர்காதேவியின் உதவி இறைவனின் உத்தரவின்படி தன் கலி தீர்க்கப் பிறந்த ஆண்மகவைக் கொண்டுபோய் நந்தன் வீட்டில் விட்டுவிட்டு அவருக்குப் பிறந்த பெண்குழந்தையைக் கொண்டுவந்தார் வசுதேவர். விஷ்ணுமாயையின் ப்ரபாவத்தால் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் விழித்துக் கொண்டனர்.  அவருக்கும் தேவகிக்கும் கூட நடந்தவற்றை சிலகாலம் மறக்கச் செய்துவிட்டான் போலும். ஏனெனில், ஸத்ய சந்தரான வசுதேவர் கம்சனே கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வார். எனவே, அதுவும் இறைவனின் திருவிளையாடல் என்றே கொள்ளவேண்டும்.  குழந்தை உருவிலிருந்த தேவியின் அலறல்  சத்தம்‌ கேட்டு காவலர்கள் அனைவரும் விழித்துக் கொண்டனர். டேய், குழந்தை பொறந்துடுச்சுடா.. பொறந்ததும்‌ ஓடிவந்து சொல்லச்‌சொன்னார். தூங்கிட்டோமேடா.. மகாராசா கோபிப்பாரே.. காலையில சொல்லிக்கலாமேடா.. இல்லடா. மத்த குழந்தைகளுக்கெல்லாம் காலைலதான் சொல்லச் சொன்னார். இது அவரைக் கொல்லவந்த குழந்தையாமே. எப்ப பொறந்தாலும் உடனே ஓடிவந்து சொல்லணும். இல்லாட்டா தலையை வாங்கிடுவேன்னு சொன்னதா, அதிகாரி சொன்னார். மகாராசா கிட்ட ஓடுவோம்டா.. மூச்சிரைக்க இரு காவலர்கள் ஓடிவருவதைக் கண்டதும் கம்சனுக்கு பதட்டம்‌ வந்துவ...

திருக்கண்ணன் அமுது - 13

Image
பிறந்ததுமே புறப்பாடு வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் கொள்ளை கொண்டுபோகும் அழகுடைய குழந்தையைத் தலைமேல்‌ சுமந்துகொண்டு புறப்பட்டார் வசுதேவர். மாயையினால், உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் உறக்கத்தில் ஆழ்ந்தன. ஆனால், ஜடப் பொருள்களுக்கெல்லாம்‌ ஜீவன் வந்துவிட்டது. பூட்டப்பட்ட சங்கிலிகள் தானே கழன்றன, பூட்டு தானே திறந்தது. சிறைச்சாலையின் அத்தனை  கதவுகளும் கடகடவென்று சத்தமின்றித் திறந்தன. எதையும் யோசிக்காமல் வசுதேவர் விடுவிடுவென்று நடந்தார். அடை‌மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் நடக்கத் துவங்கினார். தனது தலைவர் மழையில் நனைவதைக் காண இயலுமா? ஆதிசேஷன் ஓடிவந்து குடை பிடித்துக்கொண்டு பின்னாலேயே தொடர்ந்தார். இறைவன் எந்த நிலையிலிருந்தாலும் கைங்கர்யம்‌ செய்வதற்குத் தயார் நிலையிலிருப்பவராயிற்றே?  பாதிதூரம் சென்றதும் யமுனை வந்தது. வசுதேவர் எதையும்‌ பொருட்படுத்தினாரில்லை. நீரில் இறங்கி வேகமாய் நடக்கத் துவங்க இடுப்பளவு ஆழம்‌ வந்ததும் நடை‌யின் வேகம்‌ குறைந்தது. தன்னைக்‌ கடந்து செல்லும் இறைவனை தரிசிக்க விரும்பினாள் யமுனாதேவி. ஒரு அலையாய்  வசுதேவரின் தலைக்கு மேல்‌எழும்பி கூடையினுள்...

திருக்கண்ணன் அமுது‌ - 12

Image
வசுதேவரின் நம்பிக்கை சங்கு, சக்கரம், கதை, தாமரை இவைகளைத் தாங்கி சதுர்புஜனாக தேவகி மற்றும் வசுதேவர் முன் தோன்றினான் பகவான். இருவரும் கண்ணெதிரே தோன்றிய பரம்பொருளை பரப்ரும்மமாகக் கண்டு பாடிப் பரவினர். இருந்தாலும் கம்சன் வந்தால் இந்தக் குழந்தைக்கு என்னாகுமோ என்ற அச்சமும் இருந்தது. எனவே, நீ சாதாரணக் குழந்தையாக மாறு. பகவானாகக் காட்சி கொடுத்தது போதும் என்கிறாள் அந்த தெய்வத்தாய். உலகிலுள்ளோர் அனைவரும் தெய்வீகக் காட்சிக்கு ஏங்கிக் கொண்டிருக்க, அன்னையின் உள்ளம் மாறாய் நினைத்தது. அற்புதக் குழந்தை தன் பவளவாய் திறந்து பேசிற்று. நீங்கள் இருவரும் முற்பிறவியில் ப்ருஷ்னி, ஸுதபஸ் என்ற ப்ஜாபதியாய் இருந்தீர்கள். அப்போது என்னை நோக்கிக் கடும் தவம் இயற்றினீர்கள். உங்கள் தவத்திற்கு மகிழ்ந்து நான் காட்சியளித்தேன். அப்போது நீங்கள் முக்தியை வேண்டவில்லை. மாறாக என்னைப் போல் ஒரு குழந்தை வேண்டும் என வரம் கேட்டீர்கள். என்னைப் போல் இன்னொரு பொருள் இல்லாததனால்,  நானே வந்து பிறக்கலானேன். மூன்று முறை ஸத்யம் என்று வாக்களித்தபடியால், நானே உங்களுக்கு மூன்று முறை குழந்தையாகப்‌ பிறந்தேன். நீங்கள் ப்ருஷ்னி ஸுதபஸ் ஆக இருந்தப...

கொஞ்சம் சிரிப்புகொஞ்சம்‌ சிந்தனை - 5

Image
அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. ஒரு சமயம், ஒரு சின்னக் குழந்தை கையில் ஒரு க்ருஷ்ணன் படத்தோடு ஸ்வாமிஜியிடம் சென்றாள்.  இரண்டு வயதிருக்கலாம் அவளுக்கு.  படத்தை ஸ்வாமிஜிடம் கொடுத்தாள். மிக அழகாக இருந்த அந்தக் கண்ணனை சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிஜி. பின்னர் அவளிடம் கேட்டார், இது யாரு? குழந்தை மழலை முற்றாத சொற்களால் சொன்னது. கிட்டா.. ஸ்வாமிஜியின் இதழ்கள் புன்னகையால் விரிந்தன. கிட்டாப்பொருளில்லை. கிட்டும்.. என்று சொல்லிச் சிரித்தார். அதிலிருந்து அந்தக் குழந்தை யார் வந்து அந்தப் படத்தைக் காட்டிக் கேட்டாலும் கிட்டும் என்றே சொல்வாள். உண்மைதானே.. குருநாதர் கொடுத்தால் கிட்டும் பொருள்தானே அந்தக் கண்ணன்? <<Previous       Next>> Back to Index

திருக்கண்ணன் அமுது -11

Image
அற்புதக் குழந்தை ராமாவதாரத்தில் பன்னிரண்டு மாதங்கள் கௌசல்யையின் கர்பத்தில்  வாஸம்‌செய்தான் இறைவன். அப்போது அதிகமான இரண்டு மாதங்களை இந்த அவதாரத்தில் நேர் செய்கிறான்.  எட்டு‌மாதங்கள் கர்ப வாஸம்‌ செய்த இறைவன் தேவகியின் யோனி வழியாக ஜனிக்கவில்லை. வயிற்றினுள்‌ மறைந்து வெளியே தோன்றினான். அத்புத பாலகன்‌ என்கிறார் ஸ்ரீ சுகர். அற்புதக்‌குழந்தையாம்,அது எங்ஙனம்? பிறக்கும்போதே பீதாம்பரம், எல்லா விதமான ஆபரணங்கள்,  கிரீடம் எல்லாவற்றோடும் தோன்றினான். அதனால் அற்புதக் குழந்தையாம். சின்னஞ்சிறு பகவானாகத் தோன்றும்போதே, அவனது அளவிற்கேற்றபடி, ஆயுதங்களோடு பிறந்தானாம். தயிர் கடையும் மத்தைப் போல் ஒரு கதை, தீபாவளி சக்கரத்தைப் போன்ற ஒரு குட்டி சக்கரம், சின்னஞ்சிறு வெண்சங்கு, அவனைப்போல் அழகான ஒரு சிறிய தாமரை ஆகியவைகளை வைத்திருந்தான். எனவே, அற்புதக் குழந்தையாம். பொதுவாக பிறக்கின்ற குழந்தை அழும்,பெற்றோர் குழந்தையை அமைதிப்படுத்துவார்கள். ஆனால், இங்கு, எட்டாவதாகப் பிறந்த  அற்புதக் குழந்தைக்கு கம்சனால் ஆபத்து வருமே என நினைத்து தேவகி அழுகிறாள். குழந்தை சமாதானப்படுத்துகிறது. எனவே, அற்புதக் ...

கொஞ்சம் சிரிப்புகொஞ்சம் சிந்தனை - 4

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. ருக்மிணி நாரத மஹரிஷி மூலமாகவும், மற்ற பௌராணிகர்கள் மூலமாகவும், கண்ணனைப் பற்றிக் கேட்டு கேட்டு அவன் மீது காதல் கொண்டாள். தன் விருப்பத்தை தந்தையான பீஷ்மக மஹாராஜாவிடம் தெரிவித்தாள். அவர் மிகவும் ஸாது. க்ருஷ்ணனைப் பற்றி அவரும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். அவன் இறைவன்தான் எனவும் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருப்பதை அறிவார். எனவே, மிகுந்த சந்தோஷமடைந்தார். எதுவாயினும் அரச சபையில் தெரிவித்து அனைவரின் ஒப்புதல்களையும்‌பெறவேண்டும் என்பது நியதி. ஏனெனில் ஒரு அரச குமாரியின் விவாகம் தன்னிச்சையாக நடைபெற இயலாது. ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையே ஆன உறவு தீர்மானிக்கப்படும். எனவே, சபையில் ருக்மிணியின் திருமணத்தைப் பற்றிய பேச்செடுத்தார். ஆத்மாவை ஐந்து புலன்களும் இறைவனை அடையவிடாமல் காப்பதுபோல், ருக்மிணியின் ஐந்து சகோதரர்களும் க்ருஷ்ணனுக்...

திருக்கண்ணன் அமுது - 10

Image
சிறையில் பிறந்த  நிறைபொருள் எதையும்‌ உத்தேசித்து எழுதுவதில்லை. ஆனால், கண்ணன் அருளால், பத்தாவது பதிவில் கண்ணனின் பிறப்பு வருகிறது. ஸ்ரீமத் பாகவதத்திலும் தசம‌ஸ்கந்தத்தில்தான் கண்ணனின் சரித்ரம் சொல்லப்படுகிறது. இறைவன் வந்து தேவகியின் வயிற்றில் அமர்ந்ததும், தேவகி ஒரு திவ்ய ஒளியோடு ஜொலித்தாள்.  அத்தனை தேவர்களும் அவளை வழிபட்டுக் கொண்டிருக்க, கம்சனின் நிலைமை தலைகீழாய் இருந்தது. மற்ற குழந்தைகளை தேவகி  கருவுற்றிருந்தபோது அவ்வப்போது சிறை மேற்பார்வைக்கு வந்து தேவகியையும் வசுதேவரையும் மிரட்டிவிட்டுச் செல்வான்.  ஆனால், இறைவன் வந்து கர்பத்தில் அமர்ந்ததிலிருந்து, கம்சனுக்கு சிறைச்சாலையின் அருகில் வரும்போதே, பயம் நெஞ்சை அடைத்தது. எப்படியோ சிறையின் வாசல் வரை வந்துவிட்டு, சிறை அதிகாரியிடம் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அப்படியே திரும்பிவிடுவான். எட்டு மாதங்களில் ஒரு முறை கூட கம்சன் சிறைச்சாலை வாயிலைக்கூட மிதிக்கவில்லை.  பயத்தினால் கலங்கி, வெளிறிப்போயிருந்தான் கம்சன்.  இதற்குள் இறைவன் பூமியைத் தொடும் பொன்னான காலம் வந்துவிட்டது. ஆவணி மாதம், தேய்பிறையில், ர...

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் சிந்தனை - 3

அவ்வப்போது உபன்யாசங்களுக்கு நடுவே குருநாதருக்கே உரிய ஒரு தனிப்பட்ட நடையில்  சொல்லப்படும் சில விஷயங்கள் நம்மை மறந்து  வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்துவிடும். அவ்ற்றுள் சில இங்கே  சிரிப்பதற்காகவும் கொஞ்சம் சிந்திப்பதற்காகவும்  பகிரப்படுகின்றன. ஒவ்வொரு நாளையும் காலன் 'டர் டர்' என்று கிழித்துக்கொண்டிருக்கிறான். அதனால்தான் காலண்டர் என்றே பெயர் வந்ததோ என்னவோ? எனவே, வெட்டிப் பொழுது போக்காமல் நாமம்‌ சொல்வோம். நமது கடைசி மூச்சு இதுதான் நமது கடைசிப் பிறவி என்பதை உறுதி செய்யவேண்டும். <<Previous       Next>> Back to Index

திருக்கண்ணன் அமுது - 9

Image
தாயைக் குடல்விளக்கம் செய்த எம்பெருமான் கருவுற்ற ஏழாவது குழந்தையை  ஐந்தாவது மாதத்தில் திடீரென்று வயிற்றுக்குள்  காணவில்லை. கர்பம் கரைந்துவிட்டதோ என்று எண்ணி அழும் தேவகியை சமாதானப் படுத்த எவராலும் இயலவில்லை.  கம்சன் அளவுக்கதிகமாகக் குழம்பிப் போனான். ஏழாவது குழந்தையைக் காணோமா? வயிற்றில் கரைந்துவிட்டதா? ஏதாவது மாயையா? அப்படியானால், இனி அடுத்துப் பிறக்கப்போகும் குழந்தை ஏழாவது குழந்தையா? அல்லது எட்டாவதா?  அசரீரி எட்டாவது கர்பம் என்று சொல்லிற்று. பிறந்த குழந்தைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டுமா? இறந்து விட்டவையும் கணக்கில் வருமா? இதுபோதாதென்று கர்பத்தில்‌ கரைந்த குழந்தையைச் சேர்த்து எண்ணுவதா? பைத்தியமே பிடிக்கும்போலாகிவிட்டது. ஆறு குழந்தைகளைப் பிறந்ததுமே கண்ணெதிரே பறிகொடுத்துவிட்டாள். ஏழாவதாக வந்ததும் கரைந்துவிட்டது. புண்ணாகிப் போன  அவளது கர்பப்பையை ஆற்றுவதற்காக இறைவனே வந்து அமர்ந்தான். இவ்வளவு நாள்களாக தேவகி, வசுதேவர், ஸாதுக்கள், தேவர்கள், இன்னும் ஈரேழு பதினான்கு உலகங்களில் வசிப்பவர்களும் எதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனரோ, அது நிகழ்ந்தது. பிறப்பே இல்லாத...

திருக்கண்ணன் அமுது - 8

Image
கரு மாறும் படலம்  அப்பொழுதான் பிறந்த தங்கையின் குழந்தையை சீர் செய்து சீராட்ட வேண்டிய  தாய் மாமனான கம்சன், கல்லில் அடித்துக் கொன்றுவிட்டான். நாரதர் ஏன் அவனைக் குழப்பிவிட்டார்? பல காலமாக கொடுங்கோலை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஸாதுக்களுக்கு சீக்கிரமே நல்ல காலம் பிறக்கவேண்டும். பாவங்களின் கணக்கு எல்லையை மீறும்போது,  இறைவனின் அவதாரம் உடனே நிகழும். இவற்றைத்தாண்டி, இன்னும் ஒரு காரணம் உண்டு.  அஷ்டவசுக்களில் அறுவர்தான் தேவகியின் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள். ஏதோ சாபத்தினால் அவர்கள் ஜனிப்பதற்கு விதி இருந்ததே ஒழிய, வாழ்வதற்கு பாவ புண்யங்கள் இல்லை. அதனாலேயே சில குழந்தைகள் ஒரு சாப விமோசனத்திற்காக, பிறந்து உடனே இறந்துவிடுகின்றன.  இந்த விஷயத்தைப் பின்னாளில் கண்ணனே தேவகியிடம் தெரிவித்து, அந்த வஸுக்களை வரவழைத்து தேவகியிடம் காட்டவும் செய்கிறான். சிலர் பட்ட கடனைச் செலுத்தாமல் ஏமாற்றினால், ஏமாற்றப்பட்டவர், அவருக்குக் குழந்தையாகப் பிறப்பாராம். குழந்தைக்கான செலவுகள், அதற்கான பணிவிடைகள் இவற்றின் மூலம் கடன் வசூலானதும், குழந்தை மழலையின்பம் எதையும் கொடாமல் இறந்துவிடும்.  இன்னும் சில...

திருக்கண்ணன் அமுது - 7

Image
எது முதல்? கம்சனுக்குக் கொடுத்த வாக்கிற்காக அன்று பிறந்த பச்சிளம் குழந்தையை, தனது முதல் மகனை, எடுத்துக்கொண்டு வசுதேவர் கம்சனைக் காணச் சென்றார்.  பிறந்து சில நிமிடங்களே ஆன தனது  சின்னஞ்சிறு குழந்தையைத் தானே கொண்டுவந்து கொடுக்கும் வசுதேவரைப் பார்த்ததும் கம்சனுக்கே என்னவோ போலாகி விட்டது. அவனது கல்நெஞ்சில் கூட சிறிது ஈரம் துளிர்த்தது. வசுதேவரின் நேர்மையைக் கண்டு வியந்துபோனான் அவன். வசுதேவரே, இது உமது முதல்‌ குழந்தைதானே. இவனால் எனக்கு ஆபத்தில்லையே. திருப்பி  எடுத்துக்கொண்டு போம்.  இப்போதும் வசுதேவர் மகிழ்ந்தாரில்லை. எந்தச் சலனமும் இன்றி குழந்தையைத் திருப்பிச் சிறைக்கே கொண்டு வந்து விட்டார்.  கம்சனது துர்மதியைப் பற்றி நன்கறிவார் அவர். இப்போது திருப்பிக் கொண்டுபோகச் சொல்கிறானே என்று மகிழ்ந்து விட முடியாது. திடீர் திடீரென்று மாறுபடும் மனப்போக்கை உடையவன் கம்சன்.  எனவே, இன்றைக்கு இந்தக் குழந்தை தப்பித்தது, அவ்வளவே என்ற எண்ணத்தோடு சலனமின்றித் திரும்பினார். சில நாட்களாயிற்று. நாரத மஹரிஷி கம்சனது சபைக்கு வந்தார். மூவுலகங்களிலும் தடையின்றி ஸஞ்சாரம் செய்யும் வரம் பெற்றவர்...

திருக்கண்ணன் அமுது - 6

Image
தெய்வ ஸங்கல்பம் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனுக்கு எமன் என அசரீரி சொல்லிற்று. அதைக் கேட்ட கம்சன் சினம் கொண்டு தேவகியைக் கொல்லத் துணிந்தான். வசுதேவர் கம்சனிடம் பலவாறு பேசி, தேவகியின் உயிரைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், கம்சன் இருவரையும் சிறையில் அடைத்துவிட்டான். இவற்றில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் உண்டு. பிறந்ததிலிருந்து  கூடவே இருந்து சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தவன் தமையனான கம்சன். அவனோ, தனக்கு ஆபத்து என்றதும் சகோதரியையே கொல்வதற்காகக் கத்தியை உருவிக்கொண்டு வந்துவிட்டான். வசுதேவருக்கும் தேவகிக்குமான உறவு ஏற்பட்டு இன்னும் ஒரு நாள்கூட முழுதாக முடியவில்லை. ஆனால், அன்று காலையில் கைப்பிடித்த பெண்ணுக்காக, வசுதேவர் கத்தியை உருவிக்கொண்டு நிற்கும் கம்சனோடு தைரியமாக விவாதம் செய்கிறார். உருவிய கத்தியை கணநேரத்தில் இருவர் கழுத்திலுமே பாய்ச்சக்கூடியவன்  என்பதை நன்கு உணர்ந்திருந்தபோதும், மனைவியுடனான பந்தம் ஏற்பட்டுவிட்டதால், அவளைக் காக்கத் துணிந்தார்.  மந்திர பூர்வமாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு, பஞ்ச பூதங்களையும், பெரியோர்களையும் சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற திருமணம் தம்பதிகளின் வாழ்வ...