Posts

Showing posts from August, 2017

உறங்கும் முன் - 32

Image
உண்மையான ப்ரார்த்தனை புல்லாய்ப் பிறவி வேணும், புல்லாகினும் நெடுநாள் நில்லாது, ஆதலால் கல்லாய்ப் பிறவி வேணும், ப்ருந்தாவனத்தில் ஒரு நாயாகவோ, கழுதையாகவோ, ஏதேனுமாகவோ ஆகவேண்டும் என்றெல்லாம்  மஹாத்மாக்கள் எல்லோரும் வேண்டி வேண்டிக் கேட்டு கொண்டிருக்க, ஒரு மஹரிஷியிடம் அபசாரப்பட்டு சுலபமாய் கோகுலத்தில் வந்து மரமாய் நின்று கொண்டார்கள் குபேரனின் புதல்வர்களான நளகூபரனும் மணிக்ரீவனும். நாரதரின் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பகவானின் அளப்பரிய கருணையை சுலபமாய்ப் பெற்று அழியாப் புகழும் பெற்றுவிடுகின்றனர். துருவன் ப்ரஹ்லாதன், அம்பரீஷன், வால்மீகி, வ்யாசர் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.  உரலை இழுத்துக்கொண்டு மரத்தை நோக்கி உருட்டிக்கொண்டு கண்ணன் வருவதைப் பார்த்ததும் இருவரும் புறப்படத் தயாராகினர். ஒரு கணம் விடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யம் பெற்றிருந்தனரே.. உரலை இரண்டு மரங்களுக்கும் நடுவே செலுத்தினான் கண்ணன். அது நன்றாய்ச் சிக்கிக்கொண்டது. இழுத்த இழுப்பிற்கு வரவில்லையென்றதும், பலமாக ஒரு இழு இழுத்தான். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், மரத்தை முறித்துக் கொண்டு வந்த குபேர குமா...

குபேரனின் உண்மையான செல்வங்கள்

Image
 குபேரனின் குமாரர்கள் நளகூபரன், மணிக்ரீவன். இருவரும் மதுவருந்தி தன நிலை இழந்து நாரதரின் மேல் போய் விழா, நாரதர் கொடுத்தார் ஒரு சாபம், கோகுலத்தில் சென்று மரமாய்ப் பிறக்க.. மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டதும் சொன்னார் இறைவன் கையால் விமோசனமென்று.. உண்மையில் அது சாபமா? வரமா? மஹாத்மாக்களின் நாவினில் வருவதெல்லாம் அனுக்ரஹமே. அவர்கள் இதயத்தில் அன்பே உருவான இறைவன் குடிகொண்டிருப்பதால், அவர்களால் அன்பு செலுத்துவதன்றி, கருணை பொழிவதன்றி, தமக்கெட்டிய இறைவனைக் கைப்பிடித்து நமக்கும் கொடுப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்? உண்மையில் அவர்கள் செய்யம் முத்தொழில் இவையே. இதனாலேயே அழிக்கும் தொழிலைச் செய்யும் இறைவனை விட மகாத்மாக்கள் உயர்ந்து விளங்குகின்றனர். கண்ணன் பிறந்ததிலிருந்து இன்று வரை கணத்திற்கு கணம் ஒரு லீலை செயகிறானே.. அத்தனையும் யாரறிவார்? இந்த குபேரனின் குமாரர்களன்றோ கண்ணனின் அத்தனை லீலைகளையும் அறிவர்? இவர்களே குபேரனின் உண்மையான செல்வங்கள்.

உறங்கும் முன் - 31

Image
உபநிஷத் அர்த்தம் உலூகலே நிபத்தம் (உரலில் கட்டுண்ட ப்ரம்மம்) யசோதா கட்டிப்போட்டுவிட்டுச் சென்றபின், எல்லாரும் கண்ணனை விடுவிக்கச் சொல்லிக் கெஞ்சுவதற்காக அவள் பின்னால் சென்றுவிட்டனர். பலராமனும் சிறுவர்களும்கூடத் தொலைவிலிருந்தனர். திடீரென சடசடசடவென பெரிய ஓசை கேட்டது. மாளிகையே இடிந்துவிட்டதோவென எல்லாரும் நடுநடுங்கிப் போயினர். யசோதா தலைதெறிக்க ஓடிவந்து தோட்டத்தில் கண்ணனைத் தேடினாள். கண்ணனையும் காணவில்லை, கட்டிப்போட்ட உரலுமில்லை. யசோதா கண்ணா கண்ணா என்று அரற்றிக்கொண்டு மூர்ச்சையாகி விழுந்தாள். எங்கே நமது கண்ணன்? அதோ சாய்ந்து விழுந்திருக்கும் இரட்டை மருதமரங்களுக்கிடையில் நீல ஓளியாய் மின்னுகிறானே.. மரங்கள் எப்படி விழுந்தன? பல்லாண்டுகளாக ஓங்கி நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற மரங்கள் விழுவானேன்?  சிறுவர்கள் ஓடிவந்து கண்ணனைப் பார்த்தனர். அதற்குள் யசோதை மூர்ச்சை தெளிந்து வந்து முடிச்சை அவிழ்த்து விட்டுக் கண்ணைத் தூக்கி எடுத்து அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தாள்.  கட்டிப் போட்டாக்கூட சும்மா இருக்க மாட்டியா, உரலை இழுத்துக்கிட்டு இங்க எதுக்கு வந்த?  என்று கேட்டுக்கொண்டே இடுப்பில...

அவிழ்த்து விடு யசோதே

Image
ஒரே நொடியில் கோகுலம் முழுதும் செய்தி பரவி விட்டது... கண்ணன் உரலில் கட்டுப்பட்டு நிற்கிறானென்று.. அவ்வளவுதான்.. இவ்வளவு நாட்களாகக் கண்ணனைப் பற்றிப் புகார் செய்த கோபிகள் எல்லோருக்கும் கோபம் வந்தது... என்னமா கட்டுவா அவ? என் வீட்டில கூடத்தான் எல்லாப் பானையும் உடைச்சுட்டுப் போனான்? நான் ஏதாவது சொன்னேனா? நல்லா இருக்கே... குழந்தை பாவம். பயந்துப்பான்.. அவிழ்த்து விடு யசோதே என்று சண்டைக்கு வந்துவிட்டனர்.. அவர்களே அவிழ்க்கலாமே என்றால், அதுதான் சூட்சுமம்.. கட்டிப்போட முடிந்தவரால் தானே அவிழ்த்து விடவும் முடியும்?

உறங்கும் முன் - 30

Image
குட்டிக் கண்ணனின் கோபமும் பயமும் அடுப்பில் பால் காய்ந்துகொண்டிருந்தது.  பொங்க விடாமல் சுண்டக் காய்ச்சி, ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் போட்டு உறங்கும் முன் குழந்தைக்குக் கொடுத்தால் நன்கு உறங்குவான். கண்ணனுக்குப் பாலூட்டும்போது, அவனது கால் விரல்களை சொடக்கெடுத்து, முதுகைத்தடவி, குழலில் கைவிட்டு சிடுக்கெடுத்து கோதிக்கோதி விட்டாள். அடுப்பில் பொங்கிவிடும்போல்  மேலே வரும் நேரம், வாசனையை நுகர்ந்து யசோதா பணிப்பெண்ணை அழைத்தாள். யாரும் அருகில் இல்லை போலும். பதில் வராது போகவே, பால் குடித்துக் கொண்டிருந்த கண்ணனை சட்டென்று வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு அடுப்பை அணைக்க விரைந்தாள். வந்ததே கோபம் கண்ணனுக்கு.. அம்மா... இருடா இதோ அடுப்பை அணைச்சுட்டு  வரேன்.. குரல் மட்டும் வந்தது. என்னைவிட அடுப்பிலிருக்கும் பால் முக்கியமாப் போச்சோ... சுற்றிமுற்றிப் பார்த்தான். ஒரு மத்து கிடைத்தது அவன் கையில். முற்றத்திற்கு வந்து, அடுக்கடுக்காய் அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான பால், தயிர், மோர்ப் பானைகளை அவன் கையிலிருந்த மத்து பதம் பார்த்தது. வெண்மை நிற ஆறு ஓட ஆரம்பித்தது. கடைசியாய் வெண்ணெய்ப் பானையைக் கையிலெ...

தாய்ப்பாசம்

Image
  குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்திருந்தனர் நமது முன்னோர். நான்கு அல்லது ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் உறுதி சொல்லொணாது. தன் தாயிடம்தான் என்றில்லை, கூட்டுக் குடும்பத்திலோ, அக்கம் பக்கத்திலோ இருக்கும் தாய்மார்கள் எல்லாருமே வேற்றுமை பாராது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது. அதனாலேயே, பார்க்கும் பெண்டிரையெல்லாம் தாயென்று வணங்கும் குணமும் மிகுந்திருந்தது.. குழந்தை கண்ணனுக்குத் தாய்ப்பால் கொடுக்காத கோபிகளே இல்லையென்று கூடச் சொல்லலாம். அதனால்தானோ என்னவோ அவன் அத்தனை வீடுகளையும் தன் வீடாகவே நினைத்தான் போலும். எந்த வீட்டிற்குள் வேண்டுமானாலும் நுழைந்து உரிமையோடு சாப்பிடக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியும் சாப்பிடுவான். தங்கள் குழந்தைகளைக் காட்டிலும் அதிக அன்பைக் கண்ணன் மீது வைத்திருந்தது அந்த ஆயர் கூட்டம். இந்தக் காரணத்தால்தான் பூதனையும் தாய்ப்பால் கொடுக்க வந்தபோது அனுமதித்தனர். அவள் கொடுத்த பொருளை மதியாது, கொடுக்க வேண்டும் என்ற அவளது எண்ணத்தை மதித்து தன் தாய்க்கு வழங்கப்போகும் அதே ஸ்தானத்தை அவளுக்கும் அளித்து ம...

உறங்கும் முன் - 29

Image
தோட்டத்தில் கண்ணனும் பலராமனுமாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றதும் பலராமன் வேகமாக உள்ளே வந்தான். அம்மா அம்மா இங்கே வாங்களேன்.. வந்து பாருங்க... ஏன்? என்னாச்சுடா? ரோஹிணி கேட்டாள். கண்ணன் என்ன செய்யறான்னு நீங்களே வந்து பாருங்க.. யசோதையின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்தான். கண்ணன் என்று கேட்டதும் ஏலார்ந்த கண்ணி பதட்டமடைந்தாள். என்னடா செய்யறான் அவன்? மண்ணை அள்ளி முழுங்கறான். செய்யாதடான்னா கேக்க மாட்டேங்கறான். நீங்களே வந்து சொல்லுங்க என்றான். எல்லாரும் தோட்டத்தை நோக்கி ஓடினர், வாய்க்குள்ளே ஒரு உலகம் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரஹம்ஸர் மூன்று விஷயங்களைப் ப்ரதயக்ஷ ப்ரம்மம் என்று கூறுவாராம். கங்கா தீர்த்தம்,  பூரி ப்ரஸாதம்,  ப்ருந்தாவனத்தின் மண்.   பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் ரக்ஷையாக விளங்கும் மண்,‌ பக்தர்களெல்லாம் உருளப்போகும் மண்,  அக்ரூரர் சுவைத்த மண், கண்ணனின் அமுதக் கரம் பட்ட மண் எப்படிச் சுவைக்கிறதென்று அறிய அவனுக்கும் ஆசை போலும்.  கருப்பு நிறத்தில் மாவுபோல, ப்ரத்யேகமான நறுமணம்‌ கமழும் தனிச்சுவை கொண்டு திகழும்  மண்ணை அங்குமிங்கும் பார்த்துக்கொ...

உறங்கும் முன் - 28

Image
தினமும் புழுதியிலும் மண்ணிலும் விளையாடிவிட்டு, எங்கெங்கோ சென்று வயிறு நிறைய பால் தயிர் வெண்ணெய் பக்ஷணங்கள் என்று ஒன்றுவிடாமல் உண்டுவிட்டு மாலை வேளையில் திரும்பும் கண்ணனை சாப்பிட வைப்பது யசோதைக்குப் பெரும் சவால். தினமும் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து, அவனை ஒரு வேளையாவது வீட்டில் சாப்பிட வைக்க வேண்டுமென மல்லுக்கு கட்டிக்கொண்டிருக்கிறாள். அம்புலி மாமா  வெளியில் சென்று விளையாடிவிட்டுப் புழுதியோடு வந்த கண்ணனை குளிக்க அழைத்தாள்‌ யசோதா.  அம்மா எதுக்கு குளிக்கணும்? இப்பயே அழகாதானே இருக்கேன்? அதெல்லாம் நீ எப்பவும் அழகுதான் வா. ஒரே தூசி. அரிப்பு வரும்  என்று அழைத்துச் சென்று ஸ்நானம் செய்வித்து அலங்காரம் செய்வித்தாள். சாப்பிடலாமா? என்று கேட்க,  அம்மா, புதுக் கதை சொல்லுங்க என்றான். சரி வா, என்று காற்றாட, மாடியில்  நிலாமுற்றம் அழைத்துச் சென்றாள். வானத்தில் நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது. அம்மா அது என்ன? அது நிலாடா கண்ணா. நிலாவுக்கு கண்ணனின் அழகு முகம்  பார்த்து வெட்கம் வந்ததுபோல் மேகத்துள் மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தது. நில...

உறங்கும்‌ முன் - 27

Image
நந்தபாலனும் சிவ பாலனும் கணேச சதுர்த்திக்காக இனிப்புக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை, மணிக் கொழுக்கட்டை, லட்டு, சுண்டல், பாயசம், வடை, இனிப்புகள் எல்லாம் தயார். பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. பெரிய மண்ணாலான கணபதியை நன்றாய் அலங்கரித்துப் பூஜை ஆரம்பிக்கும் நேரம். ஸங்கல்பம் செய்து, மூர்த்தி த்யானம் வந்தது. எந்த தெய்வத்தைப் பூஜை செய்கிறோமோ, அந்த மூர்த்தியை சிறிது நேரம் த்யானம் செய்தபிறகு பூஜையைத் துவங்க வேண்டும். பூஜை செய்யும்போது குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் போதும். குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் இயல்புடையவை. சந்தேகங்களைத்தான் கேட்பார்கள். தொந்தரவென்று நினைத்து கோவிலுக்குச் செல்லும்போதோ, பூஜைகளின்போதோ, அவர்களை விட்டுவிடக்கூடாது. காலையிலிருந்து தாயின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே சுற்றிக்கொண்டிருந்த கண்ணன், பூஜையின் போதும் அவளருகில் அமர்ந்தான். நம்‌ வீட்டிலுள்ள தெய்வத்தை நாமே பூஜை செய்வது தான் தெய்வத்தை மகிழ்விக்கும். விநாயகரைத் த்யானம் செய்வதற்காகக் கண்ணை மூடினாள் யசோதா த்யானம் முடிந்து கண்ணைத் திறந்தால், பாதிக் கொழுக்கட்டைகளைக் காணவில்லை. திரும்பிக் கண்...

உறங்கும்‌ முன் - 27

Image
காலையிலிருந்து வெல்லப்பாகு வாசனையும், பக்ஷணங்கள் செய்யும் வாசனையும் வாசல் வரை வருகிறது. கணேஷ சதுர்த்திக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாள் யசோதா. கண்ணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் ஓடி, எப்படியாவது ஏமாற்றி கொழுக்கட்டையை எடுக்கலாம் என்றால் யசோதாவோ, பூஜை முடிஞ்சதும் உனக்கு நிறையத் தரேன் கண்ணா, அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு, என்று சொல்லிவிட்டாள். அம்மா எப்ப பூஜை ஆரம்பிக்கும்? என்று அவளை நச்சரித்துக் கொண்டிருந்தான் குட்டிக் கண்ணன். நந்தபாலனும்  சிவ பாலனும் கணேச சதுர்த்திக்காக இனிப்புக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை, மணிக் கொழுக்கட்டை, லட்டு, சுண்டல், பாயசம், வடை, இனிப்புகள் எல்லாம் தயார். பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. பெரிய மண்ணாலான கணபதியை நன்றாய் அலங்கரித்துப் பூஜை ஆரம்பிக்கும் நேரம். ஸங்கல்பம் செய்து, மூர்த்தி த்யானம் வந்தது. எந்த தெய்வத்தைப் பூஜை செய்கிறோமோ, அந்த மூர்த்தியை சிறிது நேரம் த்யானம் செய்தபிறகு பூஜையைத் துவங்க வேண்டும். பூஜை செய்யும்போது குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் போதும். குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் இயல்புடையவை. சந்தேக...

உறங்கும் முன் - 26

Image
கண்ணனைப் பற்றிய புகார்கள் யசோதையிடம் செல்லுபடியாவதில்லை. அவனோ எந்த நேரம் எப்படி வந்து வெண்ணெயை எப்படி எடுப்பான் என்று தெரியாது. இப்போதெல்லாம் புதிதாக ஒன்று செய்கிறான். எல்லாரும் இருக்கும் சமயமாக வந்து தன புல்லாங்குழலை எடுத்து ஊதுகிறான். இவன் சாய்ந்து நிற்கும் அழகு, பிஞ்சு விரல்களால் தடவிக் குழலை வாசிக்கும் அழகு, இசைக்கேற்ப அவனது குண்டலங்கள் காதில் ரகசியம் பேசும் அழகு, இவற்றில் அத்தனை பெரும் மயங்கி மயங்கி அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, வெண்ணெய்ப் பானையைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறான். அவன் ஓடியபின், சற்று நேரம் கழித்துத்தான் அனைவருக்கும் பிரக்ஞை வருகிறது. எல்லா நேரமும் விழிப்புடன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்? என்னதான் செய்வார்கள்? பாவம் கோபியர்கள். கண்ணனோடு சமாதானம் பேசத் திட்டம் தீட்டினர்.  பசுக்களின் அன்பு எவ்வளவு யோசித்தாலும் கோபிகளுக்கு கண்ணன் செய்யும் வெண்ணெய்க்  களவிலிருந்து தப்பிக்க வழி ஒன்றும் புலப்படவில்லை. மிகவும் யோசித்தபின் ஒருவாறு முடிவுக்கு வந்தார்கள். நினைத்ததும் வருபவனாயிற்றே நமது  கண்ணன், அவனைப் பற்றி இவ்வளவு யோசித்தால் வராமல் இருப்பானா? மனத்...

உறங்கும் முன் - 25

Image
இன்றும் இரண்டாம் ஜாமத்திலேயே ஒரு கோபியின் வீட்டில் சென்று சேவல் போலக் கூவிவிட்டு வந்துவிட்டான் வெண்னெய்க் கள்ளன். அவள் பாவம் நள்ளிரவென்று உணராமல் எழுந்து, விடிந்துவிட்டதென நினைத்துக்கொண்டு, தயிர்ப்பானை மேல் வெண்ணெய்ப் பானையைச் சும்மாடு வைத்து அடுக்கிக்கொண்டு, யமுனைக் கரைக்கு நடந்தாள். அங்குதான் எல்லா கோபிகளும் கூடி, அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து மதுரா வரை பேசிக்கொண்டு நடந்து செல்வர். அங்கிருந்து மதுராவிற்கு கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவு. கோட்டை வரை ஒன்றாகச்  சென்றபின் பிரிந்து தெருக்களுக்கு வியாபாரத்திற்குச் செல்வர். நமது கோபி நதிக் கரையில் சென்று காத்துக் காத்துப் பார்த்தாள். பொழுது விடியவுமில்லை. யாரும் வரவுமில்லை. மண்ணா? வெண்ணெயா?  விடியற்காலை என்று நினைத்துக் கொண்டு நள்ளிரவிலேயே நதிக் கரையில் சென்று மற்றவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் சுபாஷிணி. விடிவெள்ளியும் வரவில்லை என்றதும், இன்னும் விடியவில்லையோ என்று சந்தேகம் வந்தது. யாரையும் காணாததால் பயம் வந்தது. பயம் வந்தால் கோகுலவாசிகளின் நாவில் வருவது கோபாலனின் நாமம்தான். நாமத்தைச் சொல்லிக்கொண்டு பானைகளை இறக்கி வைத்தாள். ...

உறங்கும் முன் - 24

Image
யார் அந்தக் குரங்கு? அஹிமா, லஹிமா, ஓரிடத்தில் மறைந்து மற்றோரிடத்தில் தோன்றுவது, ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது  முதலான சித்திகள் எல்லாம் பகவானுக்கு ஸ்வயமே உள்ள ஐச்வர்யம். அவற்றைப் பயன்படுத்தி அசுரர்களை அழிப்பதோடல்லாமல், வெண்ணெய்த் திருட்டுக்கும் அந்த சித்திகளைப் பயன்படுத்தினான் பகவான்.  எங்கே சென்றாலும் ஒரு குரங்கு தொடர்ந்து வந்துவிடும்.  திருடும் வெண்ணெயைத் தனியாக உண்பது கண்ணனுக்கு அறவே பிடிக்காத விஷயம். தன்னோடு பங்கேற்கும் குழந்தைகளுக்கும்  வெண்ணெயில் பங்கு கொடுப்பான். கூடத் தொடர்ந்து வரும் குரங்குக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு. ராதைக்கென்று கொஞ்சம் எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்துவேறு வைத்துக் கொள்வானாம். எல்லாம் சாப்பிட்ட பிறகு, கை அலம்பும் வழக்கமெல்லாம் கிடையாது. கையைக் குரங்கின் மேல் துடைத்துவிடுவான். அதுவும் சுகமாகக் காட்டும். இப்படிக் கண்ணனைத் தொடர்ந்து வரும் குரங்கு யாராய் இருக்கும்? நமது ஹனுமார்தான். சென்ற அவதாரமான ராமாவதாரத்தில் ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்தார். இந்த அவதாரத்தில்  பகவான்  இவ்வளவு லீலைகள் செய்யும்போது வராமல் எப்படி...

கண்ணனின் குரங்கு

Image
தினமும் ஒரே வீட்டிற்கு வெண்ணெய்க் களவிற்குப் போகமாட்டான் நம் ஸ்வாமி. யார் யார் வீட்டு வெண்ணெய் சுவையாக இருக்கும், யார் வீட்டின் எந்த மாட்டின் பால் தேன் போல் இனிக்கும், தயிர் எந்த வீட்டில் மணமாக இருக்கும்? எந்த வீட்டில் என்ன பக்ஷணம் நன்றாய்ச் செய்வார்கள்? யார் வீட்டு சமையல் நாவைச் சுண்டும்? என்ன செய்தால் எந்த கோபி என்ன சொல்வாள்? என்ன செய்வாள்? எவ்வாறு உணர்வாள்? என்பது வரை அனைத்தும் கண்ணனுக்கு அத்துப்படி. காலை தூங்கி எழும்போதே, இன்று யார் வீட்டில், எப்போது, எவ்வாறு திருடப் போக வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் போட்டாகிவிடும். கோபச் சிறுவர்களோடு ஒரு குரங்கும் கண்ணனின் அனைத்து லீலைகளிலும் தவறாமல் பங்கேற்று வந்தது.

உறங்கும் முன் - 23

Image
கையும் களவுமாகக் கண்ணனைப் பிடித்தாலும்  கூட அவன் தான் வெண்னெய்த் திருடன் என்று நிரூபிக்க முடியவில்லை. என்ன செய்யலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள் கோபிகள். ஒவ்வொருவராய் ஏமாற்றியது போதாதென்று அனைவரையும் ஒரு சேர ஏமாற்றிவிட்டான். இனிமேல் அவனைப் பற்றிச் சொல்லும் இந்தப் புகாரையும் யசோதை காது கொடுத்துக் கூட கேட்கமாட்டாள். பேசாமல் கண்ணனோடு சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்று எல்லா கோபிகளும் சேர்ந்து ஒரு மனதாக முடிவெடுத்தனர். இவர்களது சமாதானம் அந்தக் கள்ளனிடம் செல்லுபடியாகுமா? ஆவி வந்த பானை எங்கு ஒளித்தாலும், எப்படி ஒளித்தாலும் வெண்ணெய்க் களவு நடந்துவிடுகிறது.  ஒரு கோபி பானையை உறியில் வைத்து அதோடு சேர்த்து மணியைக் கட்டி வைத்திருந்தாள். உறி ஆடினால், மணி அடிக்கும், கண்ணனைப் பிடித்து விடலாம் என்பது அவள் கணிப்பு. கண்ணனும் வந்தான், முதலில் மணியைத்தான் பார்த்தான். உறியை இழுத்தால், மணிச் சத்தம் கேட்டு தூங்கும் கோபி விழித்துக்கொள்வாளே என்றெண்ணிய கண்ணன், மணிக்கு உத்தரவிட்டான். நான் ஆட்டினால் அடிக்கக்கூடாதென்று. மணியும் ஒப்புக்கொண்டது.  உறி மீது ஏறினான். எவ்வளவு ஆட்டினாலும் மணி அடிக்கவ...

உறங்கும் முன் - 22

Image
கண்ணன் வெண்ணெய் திருடும்போது கையும் களவுமாகப் பிடிப்பதா? நேற்று யசோதை சொன்னாளாமே? நடக்கிற காரியமா? எப்போதும் பாலும், தயிரும், வெண்ணெயும் திருடு போன பின்னர் உடைந்த பணிகளும், காலி பணிகளும் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்களேயன்றி, ஒரு நாளும் களவு செய்யும் கண்ணனைக் கண்டதேயில்லை கோபிகள் எல்லாரும். இது போக ஊருக்கு வழி. நல்ல அம்மா, நல்ல பிள்ளை. இருவரும் ஒருவருக்கொருவர் ஏர்வைதான் என்று பேசிக் கொண்டனர். மாயக் கண்ணன் இரண்டாம் ஜாமத்தில் டடக் டடக் என்று சத்தம் கேட்டது.சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட கோபி, அரைத்தூக்கத்தில் கண்ணைக் கசக்கிகொண்டு மெதுவாக எழுந்து வந்தாள்.அவளுக்குத் தான் பார்ப்பது நிஜமா, கனவா, ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டாள். கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். ஓசைப்படாமல் சென்று கணவனை எழுப்பி அழைத்து வந்தாள். அங்கே.. நீலநிற ஜோதி, குட்டிக் கண்ணன், வெண்ணெய்ப் பானையை உருட்டிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துகொண்டு, வாய்க்குள் விரலை விட்டு வெண்ணெயை நக்கிக் கொண்டிருந்தது. பூனைபோலச் சென்று லபக்கென்று கண்ணன் கையைப் பிடித்தாள். திடிரெனப் பிடிபட்டதும், கண்ணன் வி...

உறங்கும் முன் - 21

Image
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோபியும் புதிது புதிதாகச் சொல்லும் புகார்களைக் கேட்டுக் கேட்டு யசோதை ஒரு பக்கம், நல்ல சாமர்த்தியம் தான் இந்தப் பிள்ளை. நேத்து கூட எங்கயோ போய் மடி நிறைய முறுக்கு, சீடை எல்லாம் கட்டிக் கொண்டு வந்ததே, என்று மகிழ்ந்தாலும், இவ்வளவு சிறு வயதில் இப்படி ஊரை ஏய்த்து உலையில் போடுகிறான். இன்னும் பெரியவனானால் என்ன செய்வானோ என்று கவலைப் பட்டால். இருந்தாலும், புகார் சொல்லும் எந்த கோபியிடமும் கண்ணனை வீட்டுக் கொடுக்காமல் அவள் சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கிறதே? அது கண்ணன் வெண்ணெய் திருடும் சாமர்த்தியத்தை விடப் பெரியது. இன்றைய புகார் என்னவோ? பாரம் குறைந்தது கோபியர் அனைவரும் பால், தயிர், வெண்ணெய் இவற்றை விற்கச் செல்லும்போது, எல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்துகொண்டு பிறகு செல்வார்கள். கடிகாரம் கிடையாது. விடிவெள்ளியும் மேகம் வந்தால் தெரியாது. எனவே சேவல் கூவுவதுதான் அவர்களை எழுப்பும் ஒலி. இன்று இரண்டாம் ஜாமத்திலேயே ஒரு கோபியின் வீட்டில் சென்று சேவல்போலக் கூவிவிட்டான். அவள் பொழுது புலரும் நேரமாயிற்று என்று விடுவிடென வேலைகளை முடித்து விட்டு பால் பானையைத் தலையில் வைத்துக்கொண்டு  கிளம்பி...

உறங்கும் முன் - 20

Image
கோகுலத்தில் ஒரு வீடு விடாமல் நுழைந்து விஷமங்கள் செய்யும் கண்ணனை, பெரிய பெரிய அசுரர்களுக்கும் கண நேரத்தில் முக்தி அளிக்கும் கண்ணனை, நினைத்த மாத்திரத்தில் அக்ஷயமான ஐஸ்வரியங்களை அனுகிரஹிக்கும் கண்ணனை, கோபிகள் குழந்தையானது பொம்மையை ஆட்டி வைப்பது போல் ஆட்டி வைத்தனர். கோபிகள் எதைச் சொன்னாலும் அப்படியே கேட்கும் கண்ணனின் நீர்மையை எப்படிக் சொல்வது? வெண்ணெய் நடனம் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணன் சட்டென்று ஒரு வீட்டினுள் நுழைந்தான்.  கண்ணனைக் கண்டதும் மிகவும் ஜாக்கிரதையான அந்த கோபி, கண்ணா வா வா,  எங்க வந்த? மாமீ இங்கதான் தெருவுல விளையாடிண்டிருந்தேன்.ஒரே தாகமா இருந்தது. அதான் வந்தேன் என்றான். அப்டியா? இங்க உக்காரு. வரேன். என்று அவள் சொன்னதும் சமர்த்தாக உட்கார்ந்து கொண்ட அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம்  உள்ளே சென்ற அந்த கோபி, திரும்பி வரும்போது, இன்னும் இரண்டு கோபிகளுடனும், வெண்ணெய்ப் பானை, முறுக்கு, சீடை, பக்ஷணங்களுடனும் வந்தாள். எல்லாரும் வந்து கண்ணனைச் சுற்றி உட்கார்ந்து கொண்டனர். நீரை வாங்கிக் குடித்த கண்ணனின் கண் அவர்கள் கொண்டு வந்தவைகளின் மீதே இருந்தது.  ...

உறங்கும் முன் - 19

Image
வாசலில் நின்று கொண்டேன் கண்ணன் நேற்று அடித்த லூட்டிகளை பற்றி பேச ஆரம்பித்தால் கோபிகைகளுக்கு அத்தனை வேலைகளும் மறந்து விடும். மாயையிலிருந்தே விடுவிக்கும் அவனது கதாம்ருதம், வீட்டு வேலைகளை மறக்கச் செய்வதில் என்ன வியப்பு? தூரத்தில் பழம் விற்கும் பாட்டி வருகிறாள். பழம் வாங்கலியோ பழம்... பழம் வாங்கலியோ பகவானுக்கும் பக்தனுக்கும் போட்டி ஆயிரக்கணக்கில்‌ நந்த பாலன் விஷமங்கள் செய்த போதிலும், அவர்கள் வீட்டில்‌ சென்று த்வம்சம்‌ செய்த போதிலும், அவனது அத்தனை லூட்டிகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அவன் மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் கோகுல வாசிகள். எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தாலும், ஒரு புறம் புகார்களாக  அடுக்கிய போதும், மற்றொரு புறம் அவன் வரவில்லையென்றாலோ, அவனைப் பார்க்கவில்லையென்றாலோ ஏங்கிப்‌போவார்கள். பழம் விற்கும் ஏழைப்பாட்டியின் குரல் கேட்டு, வாசலில் ஓடி வந்தான் கண்ணன்.  பாட்டீ, நில்லுங்க.. பழம் வேணுமா சாமீ... எனக்குத் தருவீங்களா? குட்டிக் கண்ணனின் அழகு அவளை என்னவோ‌செய்தது. போதாகுறைக்கு பாட்டி என்று உறவு கொண்டாடுகிறான். உறவுகள் ஏதுமின்றி, தனியாக பழங்கள் விற்று வயிற்றைக் கழுவிக் கொள்பவளு...

உறங்கும் முன் - 18

Image
பானைக்குள் கன்று பெரிய கோபச் சிறுவர் கூட்டத்தோடு வெண்ணெய் வேட்டைக்குக் கிளம்பினான் கோபாலன். கண்ணா,  இன்னிக்கு யார் வீட்டுக்கு போப்போறோம்? பேசாம வாடா. நேராக, சொல்லி வைத்தாற் போல் ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டு ஒரு சிறுவனை அனுப்பினான். அவன் மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, ஜாடை காட்ட, படையுடன் உள்ளே நுழைந்தான் கண்ணன். எங்கே தேடியும் வெண்ணெய்ப் பானை கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே கண்ணன் மேலே பார்க்கவும், நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்வதுபோல் வெண்ணெய்ப் பானையிலிருந்து ஒரு சொட்டு நீர் சொட்டவும் சரியாக இருந்தது. அந்த கோபி மிகவும் யோசித்து நல்ல உயரத்தில் உறியைக் கட்டி அதில் பானைகளை ஏற்றி வைத்திருந்தாள். எப்படிக் குதித்தாலும் எட்டவில்லை. சற்று பெரியவனாக இருந்த ததிபாண்டன் என்ற சிறுவனைக் குனிய வைத்து அவன் மேல் இன்னொருவனை ஏற்றி அவர்கள் மேல் தன் பட்டுப் பாதங்களை வைத்து ஏறினான். ஆஹா.. வெண்ணெய்ப் பானை எட்டிவிட்டதும், அவன் முகத்தில்தான் எவ்வளவு ஆனந்தம். கொஞ்சம் எடுத்துச் சுவைத்துப் பார்த்தான்.. மதுரமாய் இருந்தது. குட்டிக் கை நிறைய அள்ளி அள்ளிச் சுவைக்க, அவன் முழங்க...

பட்டணத்துப் பெண்

Image
கிராமத்து வாழ்க்கைப் பழக்கங்கள் அறியாத பட்டணத்துப் பெண் கோமதி கோகுலத்தில் வாழ்க்கைப் பட்டு வந்து ஒரு வாரம்தானாகிறது. சின்ன சின்ன வேலைகளைக்கூட சரியாகச் செய்ய வராமல் சகட்டுமேனிக்கு மாமியாரிடம்  திட்டுக்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தாள்.. ஏ கோமதி... நல்லா தேடிப்பிடிச்சு என் தலைல வந்து உன்னக் கட்டிவெச்சாங்க பாரு..  நதில குளிக்கத் தெரியல, துவைக்கத் தெரியல, மாட்டைப் பாத்துக்க வரல.. ஒரு வேலையும் தெரியல. என்னத்த நீயும் வளந்தியோ.. நானும், வேணியும் நதிக்குப் போய் குளிச்சு துவச்சிட்டு வரோம். நீ வீட்டிலேயே இரு. சமையலாவது பண்ணத்தெரியுமா? எதையாவது சமைச்சு வை.. சரிம்மா... இருடி.. இந்த ஊர்ல ஒரு பையன் இருக்கான். நந்தனோட பிள்ளை. அவன் வந்தா வெண்ணெய்ப்பானையெல்லாம் போயிடும். அவங்கிட்ட ஜாக்கிரதையா இரு. உள் தாபாள் போட்டுக்கோ. என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்... வீட்டு வாசல் வழியாகப் போய்க் கொண்டிருந்த நமது கண்ணன் காதில் விழுந்துவிட்டது. தன் பெயர் கேட்கிறதே என்று உற்றுக்கேட்டுக்கொண்டான். என்ன செய்வானோ?  பாவம் அந்தப் புதுப்பெண் கோமதி..

உறங்கும் முன் - 17

Image
நந்தபாலனின் கதையமுதம் அனைவரையும் சுண்டி இழுக்க, அவனோ அம்மா கதை சொல், அம்மா கதை சொல், என்று தினமும் உறங்கும் முன் யஶோதைடம் கதை கேட்பான். கதை கேட்கும் கண்ணன் கதை எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட என்று பெரியாழ்வார் அனுபவித்தபடி கோகுலம் முழுதும் நந்தன் பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவர்களிடம் மிதமிஞ்சியிருந்த செல்வமான பசுவின் வெண்ணெய், தயிர், பால் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டு, ஜெய் ஜெய் கோபால! ஜெய் ஜெய் கோவிந்த!  என்று கோஷமிட்டார்கள். இன்றும்கூட ஒருசில இடங்களில் நந்தோத்ஸவம் கொண்டாடும்போது, ஒருவர் மீது ஒருவர் அடிப்பதற்காக வைத்திருக்கும் பால், தயிர்ப் பானைகளில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றிவிடுவர். பால் தயிர், வெண்ணெய், மஞ்சள் இவற்றால் அடிக்கும்போது ஏற்படும் கறை துவைத்தால் போய்விடும். எண்ணெயை ஊற்றி அடித்தால் அது கொண்டாட்டங்கள் முடிவதற்குள் துணியில் நன்கு பிடித்துகொள்ளும். அதன் பின் வருடம் முழுவதும், எப்போது அந்த உடையைப் பார்த்தாலும், அதன் தொடர்பாக நந்தோத்ஸவமும், கண்ணன் அடித்த லூட்டிகளும் நினைவில் வருமாம். கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் கிளம்பிய பின்னர், பசுவின் குளம்பட...