அவிழ்த்து விடு யசோதே

ஒரே நொடியில் கோகுலம் முழுதும் செய்தி பரவி விட்டது...

கண்ணன் உரலில் கட்டுப்பட்டு நிற்கிறானென்று..
அவ்வளவுதான்..

இவ்வளவு நாட்களாகக் கண்ணனைப் பற்றிப் புகார் செய்த கோபிகள் எல்லோருக்கும் கோபம் வந்தது...

என்னமா கட்டுவா அவ? என் வீட்டில கூடத்தான் எல்லாப் பானையும் உடைச்சுட்டுப் போனான்? நான் ஏதாவது சொன்னேனா?

நல்லா இருக்கே... குழந்தை பாவம்.

பயந்துப்பான்.. அவிழ்த்து விடு யசோதே
என்று சண்டைக்கு வந்துவிட்டனர்..

அவர்களே அவிழ்க்கலாமே என்றால், அதுதான் சூட்சுமம்.. கட்டிப்போட முடிந்தவரால் தானே அவிழ்த்து விடவும் முடியும்?

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37