Posts

நவ(நீத)ரஸகுண்டு .. (27)

Image
ஒரு கோபச்சிறுமியிடம் நைச்சியமாய்ப் பேசி, அவர்கள் வீட்டில் வெண்ணெய், பக்ஷணங்களெல்லாம் காலி செய்து பின் அவளது நவரத்ன வளையலையும் வாங்கி நாகப்பழம் விற்கும் பாட்டியிடம் கொடுத்துவிட்டான்  கண்ணன். வாயெல்லாம் ஊதா நிறமாக அவன் வீடு வந்து சேரும் முன்னால் புகார் யசோதைக்கு வந்துவிட்டது. அவள் சமாளித்து அனுப்பி விட்ட போதிலும், கண்ணனைப் பேச்சுவாக்கில் கேட்டாள். நவரத்தின வளையலை ஏன்டா நாகப் பழம் விக்கற பாட்டிகிட்ட கொடுத்த? கொடுக்கக் கூடாதாமா? கொடுக்கலாம்தான். ஆனா, உன் வளையலைக் கொடுத்தா பரவால்ல. அந்தக் குட்டிப் பொண்ணோட வளையலைக் கொடுக்கலாமா? அம்மா.. பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க.  அப்போதைக்கு கையில் இருந்ததைக் கொடுத்தேன். இங்க இருக்கறதெல்லாமே என்னோடதுதானேம்மா.. பேசும்போது எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. கண்ணா.. நீ எங்க வீட்டுப் பையன் எங்கவீட்டுப் பையன்னு.. ஆனா, எதையாவது செய்தா மட்டும் புகார் சொல்றாங்க.. இந்த மனுஷங்களே இப்படித்தாம்மா.. அவங்க ஒரு பேச்சுக்கு உன்னைக் கொஞ்சறதுக்காக சொல்லிருப்பாங்கடா. அதைப்போய் நம்புவியா? அம்மா.. பேச்சுக்கோ, நிஜமாவோ..  யாராவது ஒரே ஒரு தரம், கண்ணா நான் உன்னைச் சேர்...

நவ(நீத)ரஸகுண்டு..(26)

Image
இரண்டு கைகளிலும் நான்கு நான்காக முறுக்கை வளையல்களாக மாட்டிக்கொண்டு கடித்துக்கொண்டே வந்தான் கண்ணன். என்னடா இது? முறுக்கு வளையல் மா.. யார் கொடுத்தா.. பக்கத்துவீட்டு மாமி மா.. என்னடா பண்ணின அவங்க வீட்டில? யாராவது கொடுத்தா  ஒன்னோ‌ ரெண்டோ‌ வாங்கிண்டு வரவேண்டியதுதானே.. இப்படியா கைல அடுக்கிண்டு‌ வரது? அம்மா.. அவங்க என்னை ஒரு நாட்டியம் ஆடுன்னு‌ கேட்டாங்க... அலங்காரம் இல்லாம எப்படிமா ஆடமுடியும்? நான் காலைல வளையல் போட்டுவிட்டேனே.. அது இருக்கு மா.. சின்னதாயிடுச்சு. பெரிசா இருந்தாதானே  ஆடும்போது அதுவும் ஆடும்?   அவங்ககிட்ட  பெரிசா தங்க வளையல் எல்லாம் ‌இல்ல. அதனால பத்து முறுக்கு வளையல் கொடுத்தாங்கம்மா..வாங்கி போட்டுண்டு ஆடிக்காமிச்சிட்டு வந்தேன்... சாமர்த்தியம்தான்டா.. Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(25)

Image
ஒருநாள் நந்தன் வீட்டுப் பசு ஒன்று கன்றை ஈன்றது. அத்தருவாயில் இரண்டு கோமுகங்களை தரிசிப்பது பேறு என்பதால் அனைவரும் கொட்டிலில் குழுமினர். ப்ரசவித்துக்கொண்டிருந்த பசுவை வணங்கினர். புதிதாய்ப் பிறந்தது ஒரு அழகான கன்று. கண்ணன் எதிரில் இருக்கும்போது அது வேறு யாரைப்‌ பார்க்கும்? பிறந்ததும் அது முதலில் கண்டது நம் கண்ணனை. அவனையே அம்மா என்று நினைத்துக்கொண்டது. கண்ணன் விதம்விதமாகப் பெயர் வைப்பதில் ஸமர்த்தன். ஸுமுகி, ஸுகுணா, நந்தினி, வத்ஸன் என்று அவனது கன்றுகளுக்கு அழகழகான பெயர்கள். அது காளைக்கன்றானதால் அதற்கு ரிஷபன் என்று பெயர் வைத்திருந்தான். எல்லாப் பசு, கன்றுகளுக்குமே கண்ணன்மீது கொள்ளைப் பிரியம். அவை தன் தாய் / கன்றுகளை விட்டு கண்ணனைத்தான் தேடும்.  அதிலும் இந்தப் புதுக் கன்றுக்குட்டி தாய்ப்பசு இருக்கும் திசைக்கே போகாது. எப்போதும் கண்ணனுடனேயே தான் இருக்கும். இரவு தூங்கும்போது கண்ணனே அதைக் கொண்டுபோய்க் கொட்டிலில் விட்டுவிட்டு வருவான். தாய்ப்பசு கன்றை நினைக்கும்போது கொடுக்கும் ஒலி கேட்டு கண்ணனே குட்டிக்கன்றை தாயிடம்  அழைத்துப்போவான். அப்போதும் அதற்கு அம்மாவிடம் ஊட்டத் தெரியாது. கண்கொட்டாமல...

நவ(நீத)ரஸகுண்டு...(24)

Image
தாய் மடியில் படுத்துக் கொண்டிருந்தான் கண்ணன். அம்மாவுக்கும் பிள்ளைக்கும்‌பேச ஆயிரம்‌கதைகள். பேச்சோடு பேச்சாக யசோதை அவனை விசாரிப்பதே தனி‌அழகு.  ஏன்டா அந்தப் பொண்ணு முடியைப் பிடிச்சு இழுத்த? அம்மா.. அவதான் எனக்கு நீளமா முடி வேணும்னு ஆசையா இருக்கு கண்ணான்னு சொன்னா..  பிடிச்சு இழுத்தாதானேமா  தலைக்குள்ள சுருட்டி வெச்சிருக்கற  முடி வெளில வரும்?  அதுக்குப் போய் அழறாமா அவ.. Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(23)

Image
கண்ணனும் பலராமனும் விளையாட நிறைய மண்பொம்மைகள் வாங்கிப்போட்டிருந்தான்  நந்தன். கண்ணனுக்கோ மண்பொம்மைகளைவிட தன்னைச் சுற்றியுள்ள  உயிருள்ள பொம்மைகளோடு  விளையாடவே பிடித்திருந்தது. மழை வரும்போல் இருந்ததால், யசோதை வெளியில் போய் விளையாடக்கூடாதெனக் கண்டித்துச் சொல்லிவிட்டாள். கூடை நிறைய பொம்மைகளைக் கொண்டு வந்து போட்டு இவைகளை வைத்து விளையாடு என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள். வேறுவழியின்றி ஆளுக்கொரு பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு விளையாடத் துவங்கினார். யானை என்றால் யானைபோல் நடப்பது, தவளை என்றால் அதைப்போல் தவ்வுதல் என்று பொழுதுபோய்க்கொண்டிருந்தது. அவர்களிருவரையும் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட கோபி கண்கொட்டாமல் இருவரின் அழகையும்  பார்த்துக்கொண்டே இருந்தாள். ஒரு குதிரை பொம்மை சற்று தூரத்தில் இருக்க, அதை எழுந்துபோய் எடுக்கச் சோம்பேறித்தனப்பட்ட கண்ணன், அக்கா, அங்க பாருங்க என்று மேலே கைகாட்ட, அவள் திரும்பிய நேரம் பொம்மையைப் பார்த்துக் கையசைக்க மண் குதிரை பொம்மை குதித்து குதித்து அருகே வந்துவிட்டது. அதைக் கண்ட பலராமன் கலகலவெனச் சிரிக்க கண்ணனோ உஷ் என்று வாயில் விரல்வைத்...

நவ(நீத)ரஸகுண்டு..(22)

Image
கண்ணா.. நேத்து நதியில் பொண் குழந்தைகள் குளிக்கறச்சே, துணியெல்லாம் எடுத்து ஒளிச்சு வெச்சியாமே.. அப்படி பண்ணலாமா.. தப்பில்ல.. சற்று கோபமாகக் கேட்டாள் யசோதை.. அம்மா.. அவங்க துணியெல்லாம் கரையில் வெச்சுட்டு நதியில் இறங்கினாங்களா.. அவ்வளவுதான் ஒரே ஆட்டம்.. பொண் குழந்தைகளா அவங்க..  அவங்க குதிச்ச குதியில நதி பொங்கி பொங்கி அலையெல்லாம் மரம் உசரத்துக்கு வந்தது. பாவம்மா.. துணியெல்லாம் நனைஞ்சுட்டா குளிச்சுட்டு எதைப் போட்டுப்பாங்களாம்? அதான் உதவி பண்ணலாமேன்னு மரத்து மேல எடுத்து வெச்சேம்மா.. அவங்க கேட்டதும் சமத்தா எடுத்துக் குடுத்துட்டேன். நீங்க வேணும்னா கேட்டுப்பாருங்கம்மா. அதானே..இவளுங்களுக்கு வேற வேலையில்ல..என்று கண்ணனைத் தூக்கிக்கொண்டாள் யசோதை. Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(21)

Image
தோட்டத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்கள் அம்மாவும் பிள்ளையும். கண்ணன் ஒவ்வொன்றாய்க் காட்டி காட்டி இது என்ன? இது என்ன?  என்று கேட்க  இது அரசமரம், மல்லிகைச்செடி, குருவி என்று யசோதா சொல்லிக்கொண்டிருந்தாள். கண்ணன் அவற்றைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது யசோதா கேட்டாள். ஏன்டா.. குழந்தைகளுக்கெல்லாம் வெண்ணெய் குடுத்த சரி.. குரங்குக்குகூட வெண்ணெய் கொடுப்பாங்களா? கொடுக்கக் கூடாதாமா? குரங்குக்கு ஏதாவது பழம் கொடு. வெண்ணெய் எதுக்கு? அம்மா.. எனக்கு குரங்கு எது மனுஷன் எதுன்னே தெரியலம்மா.. ஒன்னா நின்னா எல்லார் முகமும் ஒரே மாதிரித்தான் இருக்கு. நான் என்ன பண்றதுமா? Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு.. (20)

Image
எதுக்குடா கண்ணா..கன்னுக்குட்டி மாதிரி மாட்டு மடில வாய் வெச்சு பால் குடிக்கற.. அம்மா.. கன்னுக்குட்டி குடிக்கலாம். நான் குடிக்கக்கூடாதா.. கன்னுக்குட்டி வாய் வெச்சு குடிக்கும்டா.. நாம கறந்துதான் குடிக்கணும். அம்மா.. பால் கறந்து என்ன நீ செய்வ? காய்ச்சுவேன்.. காய்ச்சி என்ன செய்வ? உனக்கு குடுப்பேன்.. உனக்கெதுக்குமா அவ்ளோ சிரமம். நீயே நாள் முழுக்க வேலை செய்யற.. உன் சிரமத்தைக் குறைக்கலாமேன்னுதான் நானே நேரா மாட்டுக்கிட்ட போய் குடிச்சுடறேன். Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(19)

Image
அந்தப் பழக்காரப் பாட்டி கூடைல நீ போட்ட தானியம்  எப்படிடா நவரத்தினமா மாறித்து? கொஞ்சம் சொல்லேன்..  யசோதை மேல் உட்கார்ந்து  ஆனை ஆடி க் கொண்டிருந்த கண்ணன் யோசிக்காமல் சொன்னான். அம்மா, அவங்க தன் கிட்ட இருந்த எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்துட்டாங்க மா. அவங்களுக்குன்னு எதுவுமே வெச்சுக்கல. ஆனா, நான் என்கிட்ட இருந்த தானியத்துல கொஞ்சம்தாம்மா குடுத்தேன். அவங்க அதுக்கே சந்தோஷப்பட்டாங்க.. அவங்க மனசு ரத்தினமாட்டம் இருந்ததா.. கூடையிலயும் ரத்தினம் வந்துடுச்சு. நான் எதுவுமே பண்ணலம்மா.. நம்பும்மா.. என்றவனைக் கொஞ்சி ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்தாள் யசோதை.. Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(18)

Image
இரவு கண்ணனை உறங்க வைக்கும் போது கண்ணனின் முதுகைத் தடவிக்கொண்டே  அளகபாரத்திலுள்ள சுருட்டை முடியை விரல்களால் அளைந்துவிடுவாள் யசோதை.   கிறங்கிப்போகும் கண்ணன், அப்போது  கேட்கும் கேள்விகளுக்கு தன்னையறியாமல் உண்மையை உளறுவான். கண்ணா.. ம்ம்.. ஊர்ல இருக்கற எல்லா கன்னுக்குட்டிக்கும்  அம்மா மாடு எதெதுன்னு அவங்கவங்களுக்கே சரியா தெரியாது. உனக்கெப்படிறா தெரியறது? அம்மா.. ஊர்ல எத்தனை அம்மா இருக்காங்க பசங்க இருக்காங்க.. உங்களுக்கு எது யாரோட பையன்னு சரியா தெரியும்போது கன்னுக்குட்டி தெரியாதாம்மா எனக்கு.. ஆனா உனக்கு நம்ம வீடு மத்தவங்க வீடுன்னு வித்யாசம்  தெரிய மாட்டேங்குது. கன்னுக்குட்டி மட்டும் தெரியறதேடா.. அம்மா..  இந்த மனுஷங்க, வீடு இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கறதைவிட கன்னுக்குட்டியை ஞாபகம் வெச்சுக்கறது சுலபம்மா.. அதுக்கு அன்பு மட்டும் போதும்... Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(17)

Image
ஏன்டா.. மத்தவங்க வீட்டில் போய் அவங்களைக்‌ கேக்காம வெண்ணெய் எடுத்து சாபிடக்கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லியா.. நேத்து எதுக்கு அவங்க வீட்டில்போய்  வெண்ணெய் சாப்பிட்ட? அம்மா.. நான் நம்ம வீட்டில் கேக்காம எடுத்து சாப்பிடலாமா கூடாதா? இது உன் வீடுடா.. இங்க நீ சாப்பிடலாம். அம்மா.. முந்தாநாள் அவங்க வீட்டு வாசல்ல விளையாடும்போது அவங்கதாம்மா என்னைக் கூப்பிட்டு உன்னை மாதிரி எனக்கும் குழந்தை வேணும்னு சொன்னாங்க. நான் என்னையே உங்க குழந்தையா நினைச்சுக்கலாமே ன்னு சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷப்பட்டு முத்தமெல்லாம் கொடுத்து வெண்ணெய்யும் கொடுத்தாங்க.. மறுநாள் இதுவும் நம்ம வீடுதானேன்னு நானா எடுத்து சாப்பிட்டா உன் கிட்ட புகார் சொல்றாங்கம்மா.. ஒருநாளைக்கு ஒரு பேச்சு பேசினா குழந்தை எனக்கெப்படிமா புரியும்? Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு..(16)

Image
அம்மா..  ஒரு ரகசியம் கிட்ட வாயேன்.. என்று யசோதையின் கழுத்தை வளைத்து காதருகில் சென்று பச்சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு கலகலவென்று சிரித்தான் கண்ணன்.  அங்கு வேலை செய்து கொண்டிருந்த   இரண்டு கோபிகள் அதைக் கண்டனர்.  கண்ணனிடம் வந்து  எங்களுக்கும்‌ ரகசியம் சொல்லு கண்ணா  என்று ஆசையாய்க்‌ கேட்க,  மிகுந்த ஆசையோடு இருவரையும் கிட்ட வாங்க என்று குனியச் சொல்லி மிக அருகே வந்ததும் அவர்கள்‌ இருவர் தலையையும் முட்டிவிட்டான். முறைத்தவர்களைப் பார்த்து கலகலெவென்று சிரித்தான் கண்ணன். கண்ணனின் சிரிப்பு அவர்கள் ஏமாந்ததை மறக்கச் செய்தது. Back to Index 

நவ(நீத)ரஸகுண்டு...(15)

Image
அம்மா.. வேணாம்மா.. அம்மா வேணாம்மா.. வீடு முழுக்க ஓடினான் கண்ணன். அவனைப் பிடிக்க கோபியர் படையே முயன்றபோதும் முடியவில்லை. கடைசியில் நவநீதாஸ்திரத்தை எடுத்தாள் யசோதை. இதோ பார்.. இன்னிக்கு ஒழுங்கா எண்ணெய் தேய்ச்சுக்க வந்தா இந்தப் பானை வெண்ணெய் முழுக்க உனக்கேதான்.. சற்று மயங்கி நின்று பானையைப் பார்த்த கண்ணனை லபக்கென்று பிடித்தாள் ஒரு கோபி. அவனைக் காலில் போட்டு அழுத்திப் பிடித்துக்கொண்டாள் யசோதை. அவன் வாயைத் திறந்துகொண்டே இருந்தான்.  வாயைமூடுடா..எண்ணெய் உள்ள போயிடும். வெண்ணெய் வெச்சாத்தான் மூடுவேன். ஒரு உருண்டை வெண்ணெய்யை வாயில் போட, லபக்கென்று விழுங்கி மீண்டும் ஆ.. அவளை எண்ணெய் தேய்க்கவே விடவில்லை. அவன் வாயில்  வெண்ணெய் போடத்தான் சரியாய் இருந்தது. பானை காலியாயிற்றா என்று ஓரக்கண்ணால் பார்த்தான். தீர்ந்து விட்ட தென்று தெரிந்ததும் யசோதை அசந்த நேரம் பார்த்து தப்பித்து ஓடிவிட்டான். Back to Index 

நாமச்சுவை..(13)

Image
உன் பெயர் படுத்தும் பாடு அளப்பரியது. அதைச்  சொல்லி சொல்லி அதுவே  இப்போது  என் பெயராகிப்போனரது.. அனைவரும்  உன் பெயரால் எனை அழைப்பதால்.. என் பெயர்? ம்ஹூம்.. நினைவில்லை.. <<Previous    Next>> Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(14)

Image
ஒருநாள்‌ எதுவுமே பேசாமல் வாசல் திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு சமர்த்தாக உட்கார்ந்திருந்தான் கண்ணன். வெகுநேரமாகியும் ஒரு துளி சத்தம் இல்லை. வழக்கமாக வெண்ணெய் திருடும் போது தான் சத்தம்‌ வராது. எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து ஒரு பக்கம் ஆச்சர்யமுற்றாலும், இன்னொரு பக்கம் ஏதாவது காத்து கருப்பு அடித்திருக்குமோ என்று பயப்படவும் செய்தாள். மெதுவாக அருகில் போய்,  என்னடா பண்ற? சட்டென்று திரும்பி,  அம்மா.. ஒருநாளாவது எந்த வம்புக்கும் போகாம பேசாம இரேன் கண்ணான்னு நீதான சொன்ன.. இப்ப காத்து கருப்பு அடிச்சுதோன்னு பயப்படற? நான்தான் மா கறுப்பு, நான் யாரையும் அடிக்க மாட்டேம்மா.. காத்து ராட்சசனைக்கூட அன்னிக்கு நான்தான் அழிச்சேன். நீ பயப்படாதமா.. திடீரென்று இப்படி எல்லாம் அறிந்தவனாய்ப் பேசுவான் என்று எதிர்பார்க்காத யசோதை, நிஜமாகவே பயந்துபோய் அவனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டில்  சென்று மாட்டின் குளம்பு மண்ணெடுத்து  த்வாதச நாமம் சொல்லி அவனுக்கு உடலெங்கும் வைத்து, கோமிய ஸ்நானம் செய்வித்தாள். அம்ம்ம்மா! நான் சமத்தா இருந்தாக்கூட கோமிய ஸ்நா...

நவ(நீத)ரஸகுண்டு.. (13)

Image
அன்றைக்கு கோகுலத்திலிருந்த ஆதிநாராயணர் கோவிலில் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் ஏற்பாடு செய்திருந்தான் நந்தன். முறுக்கு, லட்டு, அதிரசம், என்று கல்யாண பக்ஷணங்களும், சர்க்கரைப் பொங்கல், இன்னும் பல நைவேத்யங்களும் செய்து வண்டி கட்டிக்கொண்டு போனார்கள். அம்மா,   இவ்ளோ அப்பிச்சி எதுக்கு மா? உம்மாச்சிக்கு கல்யாணம்டா இன்னிக்கு. அவருக்குத்தான் எல்லாம். அம்மா..  எல்லாமே அவருக்காமா? ஆமாம்டா.. எல்லாத்தையும் அவரே சாப்பிட்டா எனக்கு? இப்பவே கொஞ்சம்  கொடுத்துடும்மா..  என்று அழ ஆரம்பித்தான். இல்லடா.. அவர் சாப்பிடமாட்டார். அவருக்கு கண்டருளப் பண்ணியாச்சுன்னா எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடுவா. அப்றம்‌ உனக்கு தரேன். அப்ப அவர் பட்டினியாம்மா.. அவர் சாப்பிடமாட்டாராம்மா? பாவம்மா அவர்  என்ற குழந்தையை சமாதானப்படுத்த  நீ சாப்டா அவர் சாப்டா மாதிரிதான் கண்ணா.. என்று சொல்ல, மறுபடி அப்படின்னா  இப்பவே குடுமா  என்று அழ ஆரம்பித்தான். Back to Index 

நாமச்சுவை..(12)

Image
அலுவல் காரணமாய் உன் வீதி நடந்தேன்.. அரசல் புரசலாய்ச் செவியில் நுழைந்த உன் நாமம் எனை அள்ளிக் கொண்டுவந்து உன் ஸந்நிதியில்  போட்டது.. அனைத்தும் அறிந்த  அரி நீ.. ஆனால்,  ஏதுமறியாதவன் போல்  சிரிக்கும் உன் அன்பை  நினைத்தால் அழத்தோன்றுகிறது.. <<Previous     Next>> Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(12)

Image
கண்ணன் யசோதை வீட்டிலேயே உள் கட்டு அறையில் உட்கார்ந்து வெண்ணெய்ப் பானையை எடுத்து விழுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள் ஒரு கோபி. கண்ணா வேணாம்.. அம்மாட்ட சொல்வேன்.  என்றவளைப் பார்த்து நல்லா சொல்லிக்கோ என்று பழிப்பு காட்டினான். அவள் போய் யசோதையைக்‌ கூட்டிவர, தூக்கமாட்டாதவன் போல் ஒரு உலக்கையைத் தூக்கிக்கொண்டு தடுமாறி தடுமாறி நடந்து கொண்டிருந்தான். பதறிய யசோதை,  டேய், நீ என்னடா இதைத் தூக்கற .. காலில் போட்டுக்கப்போற. என்று உலக்கையை வாங்க, இவங்கதான் உலக்கையைக் கொடுத்து இடிச்சிண்டே இரு.. இதோ வரேன்னு போனாங்க.. என்று சொல்லவும், அவளுக்கு நன்றாக இடி விழுந்தது யசோதையிடம். மறுநாள் முதல் அவன் வெண்ணெய் உண்பதற்குக் காவலே அந்த கோபிதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.. Back to Index 

நாமச்சுவை..(11)

Image
சொல்ல சொல்ல  ஒளிரும்  உன் நாமத்தின் வெளிச்சமாகவே நீ மிளிர்கிறாய்..   <<Previous     Next>> Back to Index

நவ(நீத)ரஸகுண்டு..(11)

Image
கண்ணன் முதன்முதலில் தவழ ஆரம்பித்து வாசல்படி தாண்டியதும், உற்சவம் கொண்டாடினான் நந்தன். அன்றைக்கு படிக் கொழுக்கட்டை போட்டாள் யசோதை.. இந்த அப்பிச்சி நன்னார்க்கு மா  என்று கேட்டு கேட்டு வாங்கி விழுங்கிய கண்ணன், மறுநாள் காலை எழுந்ததும் கேட்டான்.  அம்மா அந்த கொழுக்கட்டை அப்பிச்சி குடு அது நேத்து நீ படி தாண்டினதுக்கு போட்டதுடா.. இன்னிக்கு கிடையாது. இனிமே பிள்ளையார் சதுர்த்திக்குத்தான். உடனே குடுகுடுவென்று தவழ்ந்து போய் படியைத் தாண்டி அந்தப்பக்கம் போய் உட்கார்ந்து கொண்டு, அம்மா.. இன்னிக்கும் படி தாண்டிட்டேன். அந்த அப்பிச்சி குடு.. கலகலவென்று சிரித்த யசோதா, டேய்.. நிறைய வேலை இருக்குடா.. நிறைய சாப்டா உடம்புக்காகாது. இன்னிக்கு மட்டும்தான். இனிமே அடுத்த மாசம் பிள்ளையார் சதுர்த்திக்குத்தான்.. என்றபடி,  குழந்தை கேட்கிறானே என்று மீண்டும் கொழுக்கட்டை செய்யத் துவங்கினாள் யசோதை. Back to Index