நாமச்சுவை..(12)

அலுவல் காரணமாய்
உன் வீதி நடந்தேன்..

அரசல் புரசலாய்ச்
செவியில் நுழைந்த
உன் நாமம்
எனை
அள்ளிக் கொண்டுவந்து
உன் ஸந்நிதியில் 
போட்டது..

அனைத்தும் அறிந்த 
அரி நீ..
ஆனால், 
ஏதுமறியாதவன் போல் 
சிரிக்கும்
உன் அன்பை 
நினைத்தால்
அழத்தோன்றுகிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37