Posts

ப்ருந்தாவனமே உன் மனமே - 4

Image
பள்ளி செல்லும் கண்ணன் - 2 கண்ணா வா பள்ளிக்கூடம் கிளம்பணும் யசோதாவின் குரல் கேட்டு உள்ளே ஓடிவந்தான் கண்ணன். என்னம்மா அதுக்குள்ள கிளம்ப சொல்றீங்க? நேரமாச்சேடா.. எங்கம்மா நேரமாச்சு? இன்னும் கூண்டு வண்டி, மேளம் ஒண்ணும் வரலையே. அவங்க வந்து அலங்காரம் பண்ணி தயாராகி அப்றம்தானே கிளம்பணும். இன்னும் கொஞ்ச நேரம் அவங்க வர வரைக்கும் விளையாடிட்டு வரேம்மா. என்றவன், அம்மா வாண வேடிக்கை வெக்கச் சொன்னேனே எங்க? என்று கேட்டான். தூக்கக் கலக்கத்தில் இரவு சொன்னதை மறந்திருப்பான் என்று நினைத்தால் நியாபகமாய்க் கேட்கிறானே, அதெல்லாமில்லடா, நீ கிளம்பு, உன்னை சுபாகு கொண்டுபோய் விடுவார். என்ன காவலாளியோடவா? நடந்து போகணுமா? ஆமாண்டா, பக்கத்துத் தெருதானே. நடக்க மாட்டியா? கோகுலம் முழுக்க சுத்துவியே. அப்டின்னா, மேளம்? பொய்க்கால் குதிரை? தினம் அதெல்லாம் வருமாடா? முதல் நாள்னு நேத்திக்கு எல்லாம் வந்தது. அதற்குள் பணிப்பெண் தூக்கை எடுத்துவந்துதர, இதென்ன? மதியம் சாப்பிடவேணாமா? பசிக்குமே என்றாள் யசோதா. மதியமா? அப்ப வீட்டுக்கு ? சாயங்காலம் வரை பள்ளி உண்டுடா அப்டின்னா எப்ப விளையாடறதாம்? திரும்பி வந்தப்றம் விளையாடுடா.. அம...

ப்ருந்தாவனமே உன் மனமே – 3

Image
பள்ளி செல்லும் கண்ணன் - 1 மெதுவாகக் கண்ணனைப் பள்ளிக்கு அனுப்புவது பற்றி யசோதையிடம் பீடிகை போட்டுப் பேசினார் நந்தன். ஏனென்றால் யசோதா சம்மதித்தால்தான் கண்ணன் பிடிவாதம் பிடித்தால்கூட அவனைச் சரிக்கட்டி பள்ளிக்கு அனுப்ப முடியும். யசோதா, நானும் படிக்கல. என் அப்பா தாத்தாவெல்லாம் கூட படிக்காமயே காலத்தை ஓட்டிட்டாங்க. மஹராஜா எதாவது ஓலை அனுப்பினாக்கூட, நான் ஆளைவிட்டுத்தான் படிக்கச் சொல்லவேண்டியிருக்கு. இப்படி எழுதப் படிக்காம இருக்கறது என் தலைமுறையோட போகட்டும் யசோதா. நம்ம பையன் கண்ணனும் அப்படியே இருக்கணுமா? அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம். அவனாவது ஒரு நாலெழுத்து படிச்சான்னா, நமக்கும் கௌரவமா இருக்கும். இந்த மகாராஜா வேற பொல்லாதவனா இருக்கான். நாம் இப்படியே காலத்தை ஓட்ட முடியாது. நம்ம பையனுக்கு கொஞ்சமாவது விஷயம் தெரிஞ்சிருந்தாத்தான் நாளைக்கு அவன் பேச்சும் எடுபடும். என்ன சொல்ற? வர அமாவாசைலேர்ந்து பள்ளியில் சேர்த்து விடவா? யசோதைக்கு துணுக்குற்றாள். என்ன அதுக்குள்ளே பள்ளிக்கு அனுப்பனுங்கறீங்க. இன்னும் அஞ்சு வயசாகலயே. அதனால என்ன? நான் வாத்தியார் கிட்ட சொல்லி சேத்துவிடறேன். நாம் சொன்னா மாட்டேன்னு சொல்ல...

ப்ருந்தாவனமே உன் மனமே – 2

Image
பானைக்கு வைகுண்டம் எல்லார் வீடுகளிலும் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது.கோகுலத்திலிருந்தது போலவே அவரவர் வேலைகளை கவனிக்கத் தொடங்கினர். புதிய இடம் கண்ணனுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. கண்ணனின் முக்கியமான தோழர்கள், சுபலன், ஸ்ரீதாமா, ஸ்தோஹ கிருஷ்ணன், பத்ரன், அம்சு:, சுதாமா, அர்ஜுனன், வ்ருஷபன், தேவப்ரஸ்தன் ஆகியோர். இவர்களைத் தவிரவும் எண்ணற்ற தோழர்கள் கண்ணனுக்கு உண்டு. அவர்களில் சற்று பெரியவன் ததிபாண்டன் என்பவன். அவனது உடல்வாகும் சற்று பெரியது. அவன் வயிறு பானைபோல் இருக்கும். அதனால் அவனுக்கு காரணப்பெயராய் ததிபாண்டன் என்று வந்துவிட்டது போலும். வெண்ணெய்க்களவு பற்றித் துப்புக் கொடுப்பதும், எந்த நேரத்தில் யார் வீட்டில் ஆள் இருக்கமாட்டார்கள் என்பது பற்றி கண்ணனுக்குச் சொல்வதும் இவர்கள் வேலை தான். புதிய இடமாதலால், யார் யார் வீடு எங்கே இருக்கிறது என்று நோட்டம் விடுவதற்காக, நண்பர்களுடன், (குரங்கும் சேர்ந்துதான்) சுற்றி வந்துகொண்டிருந்தான் கண்ணன். அப்போது ஒரு கோபி, வாசலில் எதோ வேலையாய் வந்துவிட்டு கண்ணன் வீதியில் வரும் அழகைப் பார்த்து அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவளது கண்களில...

ப்ருந்தாவனமே உன் மனமே.. - 1

Image
கண்ணன் விரும்பி வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த இடம், ஸ்ரீவனம் எனப்படும் பிருந்தாவனம். பிருந்தாவனத்தின் ஒவ்வொரு மண் துகளிலும் அது அவனது பூமி என்று சொல்லும்படியாக ஸ்ரீ கிருஷ்ணன் தனது பாதங்களின் முத்திரையைப் பதித்து வைத்துள்ளான். சைதன்ய மகாபிரபு, மீரா, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஊத்துக்காடு வேங்கடகவி, இன்னும் ஆண்டாள் உள்பட எண்ணற்ற மகான்கள் ப்ருந்தாவனத்தின் மீதான தங்கள் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்துரை விட்டு வெளியில் சென்றதே இல்லை எனும்போதும் மானசீகமாக ப்ருந்தாவனத்திலேயே வாழ்ந்திருக்கிறாள். தந்தையான பெரியாழ்வார் மூலம் கண்ணன் கதைகளைக் கேட்டுக் கேட்டு அவள் மங்களாசாசனம் செய்த பாசுரங்களைக் கொண்டே நாம் பிருந்தாவனம் முழுவதும் சேவித்துவிட்டு வந்துவிடலாம். ஒருபுறம் கோவர்தன மலையும், மற்றொரு புறம் யமுனா நதியுமாக இயற்கை அரணாக விளங்குவதால், ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு கிட்டும் என்ற எண்ணத்தில் எல்லோரும் பிருந்தாவனத்திற்கு வந்த போதிலும், கண்ணனுக்கு இங்கே வருவதற்குக் கொள்ளை ஆசை. அவ்வப்போது மாடு மேய்க்கச் செல்லும் இடையர்களிடம் காட்டின் வளமை பற்ற...

உறங்கும் முன் - 32

Image
உண்மையான ப்ரார்த்தனை புல்லாய்ப் பிறவி வேணும், புல்லாகினும் நெடுநாள் நில்லாது, ஆதலால் கல்லாய்ப் பிறவி வேணும், ப்ருந்தாவனத்தில் ஒரு நாயாகவோ, கழுதையாகவோ, ஏதேனுமாகவோ ஆகவேண்டும் என்றெல்லாம்  மஹாத்மாக்கள் எல்லோரும் வேண்டி வேண்டிக் கேட்டு கொண்டிருக்க, ஒரு மஹரிஷியிடம் அபசாரப்பட்டு சுலபமாய் கோகுலத்தில் வந்து மரமாய் நின்று கொண்டார்கள் குபேரனின் புதல்வர்களான நளகூபரனும் மணிக்ரீவனும். நாரதரின் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பகவானின் அளப்பரிய கருணையை சுலபமாய்ப் பெற்று அழியாப் புகழும் பெற்றுவிடுகின்றனர். துருவன் ப்ரஹ்லாதன், அம்பரீஷன், வால்மீகி, வ்யாசர் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.  உரலை இழுத்துக்கொண்டு மரத்தை நோக்கி உருட்டிக்கொண்டு கண்ணன் வருவதைப் பார்த்ததும் இருவரும் புறப்படத் தயாராகினர். ஒரு கணம் விடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யம் பெற்றிருந்தனரே.. உரலை இரண்டு மரங்களுக்கும் நடுவே செலுத்தினான் கண்ணன். அது நன்றாய்ச் சிக்கிக்கொண்டது. இழுத்த இழுப்பிற்கு வரவில்லையென்றதும், பலமாக ஒரு இழு இழுத்தான். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல், மரத்தை முறித்துக் கொண்டு வந்த குபேர குமா...

குபேரனின் உண்மையான செல்வங்கள்

Image
 குபேரனின் குமாரர்கள் நளகூபரன், மணிக்ரீவன். இருவரும் மதுவருந்தி தன நிலை இழந்து நாரதரின் மேல் போய் விழா, நாரதர் கொடுத்தார் ஒரு சாபம், கோகுலத்தில் சென்று மரமாய்ப் பிறக்க.. மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டதும் சொன்னார் இறைவன் கையால் விமோசனமென்று.. உண்மையில் அது சாபமா? வரமா? மஹாத்மாக்களின் நாவினில் வருவதெல்லாம் அனுக்ரஹமே. அவர்கள் இதயத்தில் அன்பே உருவான இறைவன் குடிகொண்டிருப்பதால், அவர்களால் அன்பு செலுத்துவதன்றி, கருணை பொழிவதன்றி, தமக்கெட்டிய இறைவனைக் கைப்பிடித்து நமக்கும் கொடுப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்? உண்மையில் அவர்கள் செய்யம் முத்தொழில் இவையே. இதனாலேயே அழிக்கும் தொழிலைச் செய்யும் இறைவனை விட மகாத்மாக்கள் உயர்ந்து விளங்குகின்றனர். கண்ணன் பிறந்ததிலிருந்து இன்று வரை கணத்திற்கு கணம் ஒரு லீலை செயகிறானே.. அத்தனையும் யாரறிவார்? இந்த குபேரனின் குமாரர்களன்றோ கண்ணனின் அத்தனை லீலைகளையும் அறிவர்? இவர்களே குபேரனின் உண்மையான செல்வங்கள்.

உறங்கும் முன் - 31

Image
உபநிஷத் அர்த்தம் உலூகலே நிபத்தம் (உரலில் கட்டுண்ட ப்ரம்மம்) யசோதா கட்டிப்போட்டுவிட்டுச் சென்றபின், எல்லாரும் கண்ணனை விடுவிக்கச் சொல்லிக் கெஞ்சுவதற்காக அவள் பின்னால் சென்றுவிட்டனர். பலராமனும் சிறுவர்களும்கூடத் தொலைவிலிருந்தனர். திடீரென சடசடசடவென பெரிய ஓசை கேட்டது. மாளிகையே இடிந்துவிட்டதோவென எல்லாரும் நடுநடுங்கிப் போயினர். யசோதா தலைதெறிக்க ஓடிவந்து தோட்டத்தில் கண்ணனைத் தேடினாள். கண்ணனையும் காணவில்லை, கட்டிப்போட்ட உரலுமில்லை. யசோதா கண்ணா கண்ணா என்று அரற்றிக்கொண்டு மூர்ச்சையாகி விழுந்தாள். எங்கே நமது கண்ணன்? அதோ சாய்ந்து விழுந்திருக்கும் இரட்டை மருதமரங்களுக்கிடையில் நீல ஓளியாய் மின்னுகிறானே.. மரங்கள் எப்படி விழுந்தன? பல்லாண்டுகளாக ஓங்கி நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற மரங்கள் விழுவானேன்?  சிறுவர்கள் ஓடிவந்து கண்ணனைப் பார்த்தனர். அதற்குள் யசோதை மூர்ச்சை தெளிந்து வந்து முடிச்சை அவிழ்த்து விட்டுக் கண்ணைத் தூக்கி எடுத்து அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தாள்.  கட்டிப் போட்டாக்கூட சும்மா இருக்க மாட்டியா, உரலை இழுத்துக்கிட்டு இங்க எதுக்கு வந்த?  என்று கேட்டுக்கொண்டே இடுப்பில...

அவிழ்த்து விடு யசோதே

Image
ஒரே நொடியில் கோகுலம் முழுதும் செய்தி பரவி விட்டது... கண்ணன் உரலில் கட்டுப்பட்டு நிற்கிறானென்று.. அவ்வளவுதான்.. இவ்வளவு நாட்களாகக் கண்ணனைப் பற்றிப் புகார் செய்த கோபிகள் எல்லோருக்கும் கோபம் வந்தது... என்னமா கட்டுவா அவ? என் வீட்டில கூடத்தான் எல்லாப் பானையும் உடைச்சுட்டுப் போனான்? நான் ஏதாவது சொன்னேனா? நல்லா இருக்கே... குழந்தை பாவம். பயந்துப்பான்.. அவிழ்த்து விடு யசோதே என்று சண்டைக்கு வந்துவிட்டனர்.. அவர்களே அவிழ்க்கலாமே என்றால், அதுதான் சூட்சுமம்.. கட்டிப்போட முடிந்தவரால் தானே அவிழ்த்து விடவும் முடியும்?

உறங்கும் முன் - 30

Image
குட்டிக் கண்ணனின் கோபமும் பயமும் அடுப்பில் பால் காய்ந்துகொண்டிருந்தது.  பொங்க விடாமல் சுண்டக் காய்ச்சி, ஏலக்காய், குங்குமப்பூ எல்லாம் போட்டு உறங்கும் முன் குழந்தைக்குக் கொடுத்தால் நன்கு உறங்குவான். கண்ணனுக்குப் பாலூட்டும்போது, அவனது கால் விரல்களை சொடக்கெடுத்து, முதுகைத்தடவி, குழலில் கைவிட்டு சிடுக்கெடுத்து கோதிக்கோதி விட்டாள். அடுப்பில் பொங்கிவிடும்போல்  மேலே வரும் நேரம், வாசனையை நுகர்ந்து யசோதா பணிப்பெண்ணை அழைத்தாள். யாரும் அருகில் இல்லை போலும். பதில் வராது போகவே, பால் குடித்துக் கொண்டிருந்த கண்ணனை சட்டென்று வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு அடுப்பை அணைக்க விரைந்தாள். வந்ததே கோபம் கண்ணனுக்கு.. அம்மா... இருடா இதோ அடுப்பை அணைச்சுட்டு  வரேன்.. குரல் மட்டும் வந்தது. என்னைவிட அடுப்பிலிருக்கும் பால் முக்கியமாப் போச்சோ... சுற்றிமுற்றிப் பார்த்தான். ஒரு மத்து கிடைத்தது அவன் கையில். முற்றத்திற்கு வந்து, அடுக்கடுக்காய் அடுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான பால், தயிர், மோர்ப் பானைகளை அவன் கையிலிருந்த மத்து பதம் பார்த்தது. வெண்மை நிற ஆறு ஓட ஆரம்பித்தது. கடைசியாய் வெண்ணெய்ப் பானையைக் கையிலெ...

தாய்ப்பாசம்

Image
  குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்திருந்தனர் நமது முன்னோர். நான்கு அல்லது ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் உறுதி சொல்லொணாது. தன் தாயிடம்தான் என்றில்லை, கூட்டுக் குடும்பத்திலோ, அக்கம் பக்கத்திலோ இருக்கும் தாய்மார்கள் எல்லாருமே வேற்றுமை பாராது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது. அதனாலேயே, பார்க்கும் பெண்டிரையெல்லாம் தாயென்று வணங்கும் குணமும் மிகுந்திருந்தது.. குழந்தை கண்ணனுக்குத் தாய்ப்பால் கொடுக்காத கோபிகளே இல்லையென்று கூடச் சொல்லலாம். அதனால்தானோ என்னவோ அவன் அத்தனை வீடுகளையும் தன் வீடாகவே நினைத்தான் போலும். எந்த வீட்டிற்குள் வேண்டுமானாலும் நுழைந்து உரிமையோடு சாப்பிடக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கியும் சாப்பிடுவான். தங்கள் குழந்தைகளைக் காட்டிலும் அதிக அன்பைக் கண்ணன் மீது வைத்திருந்தது அந்த ஆயர் கூட்டம். இந்தக் காரணத்தால்தான் பூதனையும் தாய்ப்பால் கொடுக்க வந்தபோது அனுமதித்தனர். அவள் கொடுத்த பொருளை மதியாது, கொடுக்க வேண்டும் என்ற அவளது எண்ணத்தை மதித்து தன் தாய்க்கு வழங்கப்போகும் அதே ஸ்தானத்தை அவளுக்கும் அளித்து ம...

உறங்கும் முன் - 29

Image
தோட்டத்தில் கண்ணனும் பலராமனுமாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றதும் பலராமன் வேகமாக உள்ளே வந்தான். அம்மா அம்மா இங்கே வாங்களேன்.. வந்து பாருங்க... ஏன்? என்னாச்சுடா? ரோஹிணி கேட்டாள். கண்ணன் என்ன செய்யறான்னு நீங்களே வந்து பாருங்க.. யசோதையின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்தான். கண்ணன் என்று கேட்டதும் ஏலார்ந்த கண்ணி பதட்டமடைந்தாள். என்னடா செய்யறான் அவன்? மண்ணை அள்ளி முழுங்கறான். செய்யாதடான்னா கேக்க மாட்டேங்கறான். நீங்களே வந்து சொல்லுங்க என்றான். எல்லாரும் தோட்டத்தை நோக்கி ஓடினர், வாய்க்குள்ளே ஒரு உலகம் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரஹம்ஸர் மூன்று விஷயங்களைப் ப்ரதயக்ஷ ப்ரம்மம் என்று கூறுவாராம். கங்கா தீர்த்தம்,  பூரி ப்ரஸாதம்,  ப்ருந்தாவனத்தின் மண்.   பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் ரக்ஷையாக விளங்கும் மண்,‌ பக்தர்களெல்லாம் உருளப்போகும் மண்,  அக்ரூரர் சுவைத்த மண், கண்ணனின் அமுதக் கரம் பட்ட மண் எப்படிச் சுவைக்கிறதென்று அறிய அவனுக்கும் ஆசை போலும்.  கருப்பு நிறத்தில் மாவுபோல, ப்ரத்யேகமான நறுமணம்‌ கமழும் தனிச்சுவை கொண்டு திகழும்  மண்ணை அங்குமிங்கும் பார்த்துக்கொ...

உறங்கும் முன் - 28

Image
தினமும் புழுதியிலும் மண்ணிலும் விளையாடிவிட்டு, எங்கெங்கோ சென்று வயிறு நிறைய பால் தயிர் வெண்ணெய் பக்ஷணங்கள் என்று ஒன்றுவிடாமல் உண்டுவிட்டு மாலை வேளையில் திரும்பும் கண்ணனை சாப்பிட வைப்பது யசோதைக்குப் பெரும் சவால். தினமும் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து, அவனை ஒரு வேளையாவது வீட்டில் சாப்பிட வைக்க வேண்டுமென மல்லுக்கு கட்டிக்கொண்டிருக்கிறாள். அம்புலி மாமா  வெளியில் சென்று விளையாடிவிட்டுப் புழுதியோடு வந்த கண்ணனை குளிக்க அழைத்தாள்‌ யசோதா.  அம்மா எதுக்கு குளிக்கணும்? இப்பயே அழகாதானே இருக்கேன்? அதெல்லாம் நீ எப்பவும் அழகுதான் வா. ஒரே தூசி. அரிப்பு வரும்  என்று அழைத்துச் சென்று ஸ்நானம் செய்வித்து அலங்காரம் செய்வித்தாள். சாப்பிடலாமா? என்று கேட்க,  அம்மா, புதுக் கதை சொல்லுங்க என்றான். சரி வா, என்று காற்றாட, மாடியில்  நிலாமுற்றம் அழைத்துச் சென்றாள். வானத்தில் நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவு ப்ரகாசித்துக் கொண்டிருந்தது. அம்மா அது என்ன? அது நிலாடா கண்ணா. நிலாவுக்கு கண்ணனின் அழகு முகம்  பார்த்து வெட்கம் வந்ததுபோல் மேகத்துள் மறைந்துகொண்டு எட்டிப் பார்த்தது. நில...

உறங்கும்‌ முன் - 27

Image
நந்தபாலனும் சிவ பாலனும் கணேச சதுர்த்திக்காக இனிப்புக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை, மணிக் கொழுக்கட்டை, லட்டு, சுண்டல், பாயசம், வடை, இனிப்புகள் எல்லாம் தயார். பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. பெரிய மண்ணாலான கணபதியை நன்றாய் அலங்கரித்துப் பூஜை ஆரம்பிக்கும் நேரம். ஸங்கல்பம் செய்து, மூர்த்தி த்யானம் வந்தது. எந்த தெய்வத்தைப் பூஜை செய்கிறோமோ, அந்த மூர்த்தியை சிறிது நேரம் த்யானம் செய்தபிறகு பூஜையைத் துவங்க வேண்டும். பூஜை செய்யும்போது குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் போதும். குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் இயல்புடையவை. சந்தேகங்களைத்தான் கேட்பார்கள். தொந்தரவென்று நினைத்து கோவிலுக்குச் செல்லும்போதோ, பூஜைகளின்போதோ, அவர்களை விட்டுவிடக்கூடாது. காலையிலிருந்து தாயின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே சுற்றிக்கொண்டிருந்த கண்ணன், பூஜையின் போதும் அவளருகில் அமர்ந்தான். நம்‌ வீட்டிலுள்ள தெய்வத்தை நாமே பூஜை செய்வது தான் தெய்வத்தை மகிழ்விக்கும். விநாயகரைத் த்யானம் செய்வதற்காகக் கண்ணை மூடினாள் யசோதா த்யானம் முடிந்து கண்ணைத் திறந்தால், பாதிக் கொழுக்கட்டைகளைக் காணவில்லை. திரும்பிக் கண்...

உறங்கும்‌ முன் - 27

Image
காலையிலிருந்து வெல்லப்பாகு வாசனையும், பக்ஷணங்கள் செய்யும் வாசனையும் வாசல் வரை வருகிறது. கணேஷ சதுர்த்திக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாள் யசோதா. கண்ணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் ஓடி, எப்படியாவது ஏமாற்றி கொழுக்கட்டையை எடுக்கலாம் என்றால் யசோதாவோ, பூஜை முடிஞ்சதும் உனக்கு நிறையத் தரேன் கண்ணா, அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு, என்று சொல்லிவிட்டாள். அம்மா எப்ப பூஜை ஆரம்பிக்கும்? என்று அவளை நச்சரித்துக் கொண்டிருந்தான் குட்டிக் கண்ணன். நந்தபாலனும்  சிவ பாலனும் கணேச சதுர்த்திக்காக இனிப்புக்கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை, மணிக் கொழுக்கட்டை, லட்டு, சுண்டல், பாயசம், வடை, இனிப்புகள் எல்லாம் தயார். பூஜைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. பெரிய மண்ணாலான கணபதியை நன்றாய் அலங்கரித்துப் பூஜை ஆரம்பிக்கும் நேரம். ஸங்கல்பம் செய்து, மூர்த்தி த்யானம் வந்தது. எந்த தெய்வத்தைப் பூஜை செய்கிறோமோ, அந்த மூர்த்தியை சிறிது நேரம் த்யானம் செய்தபிறகு பூஜையைத் துவங்க வேண்டும். பூஜை செய்யும்போது குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் போதும். குழந்தைகள் தானாகவே கற்றுக்கொள்ளும் இயல்புடையவை. சந்தேக...