Posts

Showing posts from December, 2017

குருவருள் ஒன்றே கதி - 24

Image
குருவின் பொறுமை தற்போது பைடன் என்றழைக்கப்படும் ப்ரதிஷ்டானபுரத்தில் ஒருவன் வசித்து வந்தான். வேலை வெட்டி ஒன்றும் பார்ப்பதில்லை. மிகவும் சோம்பேறி. எப்போதும் கோதாவரி நதிக்கரையிலிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்து நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருப்பான். இப்படி இருந்தபோதிலும், அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவ்வூரில் வசித்து வந்த மஹாத்மாவான ஸந்த் ஏகநாதரை தினமும் ஒருமுறையாவது தரிசித்துவிடுவான்.  ஒருநாள் அவன் சூதாட்டத்திற்கு மிகவும் தாமதமாக வந்தான். அவனது நண்பர்கள், ஏனடா, இவ்ளோ நேரமா? அப்படி என்ன வேலை? சீக்கிரம் வந்தாத்தானே ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். இல்லடா, கொஞ்ச நேரமாயிடுச்சு. அதான் வந்துட்டேன்ல. ஆட்டாம் ஆரம்பிக்கலாம். இருடா, அப்படி என்ன வேலை உனக்கு? ஏன் இவ்ளோ நேரம்? சொல்லு. நாங்களும் தெரிஞ்சுக்கறோம். சொன்னாத்தான் மேல இன்னிக்கு ஆட்டம். அதுவா..  சற்று தயங்கினான். சொல்லுடா.. இந்த ஊர்ல ஏகநாதர்னு ஒரு மஹாத்மா இருக்காரே. தினமும் அவரைப் பாத்து வணங்கிட்டுத்தான் வருவேன். இன்னிக்கு அவர் வெளில வர தாமதமாயிடுச்சு. இருந்து பாத்துட்டு வந்தேனா. அதான். ...

குருவருள் ஒன்றே கதி - 23

Image
குருவின் ஸாந்நித்யம் - 5 மரவுரி, ஜடாமுடி, உச்சியில் கொண்டை, நீண்ட தாடி, சீதையைத் தேடி அலைந்துகொண்டு வரும் கோலம். ஆனால், இந்த ஒரு திருக்கோலத்திலும் எத்தனை அழகு?  ராமலக்ஷ்மணர்களைக் கண்டு முனிவரும் மயங்குகின்றனர். லக்ஷ்மணன் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் கேட்டான் தம்பீ, இங்க சபரியோட வீடு எங்க இருக்கு? அவர்களுள் ஒருவன் சபரிக்கு விஷயம் சொல்ல ஓடினான். சபரி பாட்டியா, அவங்க உங்களுக்காகத்தான் ரொம்ப நாளா காத்துக்கிடிருக்காங்க. நீங்க வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்.  என்று சொல்லி முன்னே நடந்தான்.  சிறுவன் ஓடிவந்து சொன்னதும், சபரியை ஒருவிதப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. எழுந்து நின்றாள்.  தூரத்தில் தபஸ்விகள் போன்ற இருவர், கைகளில் வில்லேந்தி கம்பீரநடையோடு வந்து கொண்டிருந்தனர்.  பார்த்தவுடன் குருவருளால் புரிந்துகொண்டாள். குரு தனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள்தான் வருகிறதென்று. மந்திரத்தின் பொருள் வேறென்ன? இறைவனேதான் என்று உள்ளுணர்வால் வழிகாட்டினார் குருதேவர். இதோ இவங்கதான் சபரிபாட்டி கையைக் காட...

குருவருள் ஒன்றே கதி - 22

Image
குருவின் ஸாந்நித்யம் - 4 சபரிக்கு தாரக நாமத்தை, உபதேசித்துவிட்டு யோகத்தினால் தன் சரீரத்தை விட்டார் மதங்க மஹரிஷி. அவரது யோகாக்னியால் அவரது சரீரமும் பஸ்மமாகிற்று. ஆனால், அவர் சொன்னபடி, அவரது ஆசிரமத்தில் இருந்த யோககுண்டத்தில் அக்னி சோபையுடன் விளங்கியது.  சிஷ்யர்கள் அனைவரும் ஆசிரமத்தை விட்டு நீங்கினர். சபரி தினமும் ஆசிரமத்தையும் நதிக்குச் செல்லும் பாதையையும் சுத்தம் செய்வாள். பின்னர், மந்திரத்தின் பொருளின் வருகையை நோக்கிக் காத்திருப்பாள். ஒருவேளை இன்று வந்துவிட்டால், வாசல் தெளித்து, சிறிய  கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கேற்றி வைத்து, வருபவர்க்குக் கொடுப்பதற்காக பழங்களையும் பறித்து வைத்துக்கொண்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து குருதேவர் சொன்ன மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பாள்.  இரவானதும், காட்டில்‌ இனி யாரும் வரமாட்டர்களோ என்று நினைத்து உள்ளே செல்வாள்.  இப்படியாக சபரி காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தாள். எவ்வளவு நாட்களுக்கு? இன்னும் ராமன் பிறக்கவே இல்லை. தசரதனது ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது.  இனி அஸ்வமேத ...

குருவருள்‌‌ ஒன்றே கதி - 21

Image
குருவின் ஸாந்நித்யம் - 3 சபரியை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார் மதங்க மஹரிஷி. குரு தன்னைவிட்டுக் கிளம்பப் போகிறார். இனி அவரைப் பார்க்க இயலாது என்ற விஷயத்தை அவளால்‌ ஜீரணிக்கவே முடியவில்லை. ப்ரமை பிடித்தவள் போல் குடிசையின் வாயிலில் உள்ள மண் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். பாட்டீ.. .. பாட்டீ... .. சட்டென்று உணர்வு வந்தவளாக எழுந்தாள். குருவின் மீதுள்ள மரியாதையை அவரது சீடனின் மீதும் செலுத்தப் பழகியிருந்தாள். பாட்டீ.. என்ன அப்படியே உக்காந்திருக்கீங்க.. குருநாதர் உங்களைக் கூப்பிடறார். வேகமா வாங்க. ஒன்றும் பேசாமல் வேகமாய் சீடனின் பின்னால் ஓடினாள். வா சபரி. நான் இந்த உலகத்தை விட்டு வைகுண்டம் கிளம்பப்போறேன். எல்லா சீடர்களுக்கும் வேண்டியதைக் கொடுத்துட்டேன். உனக்கும் ஏதாவது வேணும்னா தயங்காம கேளு. சாமீ.. நீங்க போகப்போறீங்களா? திரும்பி எப்ப வருவீங்க? சிரித்தார் ரிஷி.  திரும்பியெல்லாம் வரமுடியாது சபரி. சொல்லு உனக்கு என்ன வேணும்? சாமீ.. உங்களைப் பாக்காம நான் எப்படி இருப்பேன்? சின்ன வயசிலேர்ந்து இவ்ளோ நாள் வரை மிருகங்களைக் கொன்னு வயிறு வளத்தி...

குருவருள் ஒன்றே கதி - 20

Image
குருவின் ஸாந்நித்யம் - 2 மிகுந்த மகிழ்சியோடு தனக்குக் கிடைத்த கைங்கர்யத்தை ச்ரத்தையாகச் செய்து வந்தாள் சபரி.  குரு நம்மோடு பேசவேண்டும், நம்மைத் தனியாக கடாக்ஷிக்கவேண்டும், நாம்‌ செய்யும்‌ கைங்கர்யத்தை அவர்  கவனிக்கவேண்டும்,  என்றெல்லாம் கூட அவசியம் இல்லை.  குருவின் ஸந்நிதியில் சும்மா இருப்பதுகூட சாதனைதான்.  கைங்கர்யம் கிடைத்துவிட்டால் அது இன்னும் சிறப்பு. (போனஸ்) அதை ச்ரத்தையாக விடாமல் செய்துவருவதாலேயே ஒருவருக்கு கைவல்யம் கிடைத்துவிடுகிறது.  எப்படியாவது, எதையாவது சிறியதோ, பெரியதோ நாம் செய்யும் ஒரு விஷயம் குருவை மகிழ்வித்துவிட்டால் போதும். அதன் பிறகு, அந்த ஜீவன் எதைப் பற்றியும் கவலையின்றி நிம்மதியோடு தன் வாழ்வைக் கழித்துவிடலாம். குருவின் ஸந்நிதியின் உயர்வைப் பற்றி எவ்வளவு சொன்னாலும்‌ அது குறைவானதே.  சபரி தினந்தோறும் மதங்க மஹரிஷி சென்று வரும் பாதையைச் சுத்தம் செய்து வந்தாள். சில காலம்  ஓடியது. ஒரு நாள் ஆசிரமத்தில் ஒரே பரபரப்பு. எல்லோரும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். இந்த திடீர்ப் பரபரப்பு சபர...

குருவருள் ஒன்றே கதி - 19

Image
குருவின் ஸாந்நித்யம் அடர்ந்த காடு, அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தாள் அவள். சற்றே முதிர்ந்த தோற்றம். இடுப்பில் கவண், சிற்சிறு கத்திகள், ஒரு தோல் பை, கையில் ஒரு கோல். சுற்றிலும் பார்த்துக் கொண்டு பதுங்கி பதுங்கி வந்துகொண்டிருந்தாள். வேடுவப் பெண்ணாய் இருக்கவெண்டும். வெகுதூரம் வந்துவிட்டாள்.  தூரத்தில் காதுகளை விறைத்துக்கொண்டு ஒரு மான் நின்றுகொண்டிருந்தது.  கவண் கல்லைக் கொண்டு அதன் காலில் அடிக்கலாம் என்று எடுத்தாள்.  சட்டென்று ஒரு எண்ணம் வந்தது.. எவ்ளோ அழகா இருக்கு, சின்ன சின்ன புள்ளி, காதை எப்படி தூக்கி வெச்சிருக்கு, நிக்கறதைப் பாரு.. எவ்ளோ அழகான கண், கண்ணை உருட்டி உருட்டிப் பாக்குதே.. யப்பா.. இதைப் போய் அடிப்பாங்களா.. பாத்துட்டே இருக்கலாம் போல.. பசிக்குதே... வேற ஏதாவது மிருகம்  கிடைக்காம போகுதா? இந்த மானை அடிக்க வேணாம்.  கவணைத் திரும்ப இடுப்பில் செருகிக்கொண்டாள். மான் ஓடிவிட்டது. இன்னும் சிறிது தூரம் சென்றதும், இரண்டு முயல்கள் விளையாடிக்கொண்டிருந்தன.  அப்பாடா.. முயல் போதும் இன்னிக்கு.. அடிக்கக் கவணை எடுக...

குருவருள் ஒன்றே கதி - 18

Image
இளமை திரும்பியது - 3 சொன்ன வண்ணம் செய்த இறைவன் திடீரென்று ஊர் முழுதும் அசம்பாவிதங்கள் தோன்றியதும், அரசன் மிகுந்த கவலையும் பயமும் கொண்டான். உடனே, ராஜகுருவிடம் காரணம் கேட்க, ராஜகுரு ஆலோசித்துவிட்டுச்  சொன்னார். ஊரில் காமாக்ஷி உள்பட ஒரு தெய்வமும் இல்லை. எல்லாக் கோவில்களும் ஸாந்நித்யமற்று வெற்றுக் கட்டிடங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒரே நாளில் ஏன் இவ்வாறு ஆயிற்று. ஏதோ தெய்வ குற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கிடையில், கணிகண்ணனும் அவனைத் தொடர்ந்து சென்ற ஆழ்வாரும், தெய்வங்களும் காஞ்சிபுர நகரத்தில் எல்லையில் ஒரு கிராமத்தில் அன்றிரவு தங்கினார்கள்.  அத்தனை தெய்வங்களின் ஸாந்நித்யமும் சட்டென்று ஏற்பட்டவுடன் கிராமமே‌ ப்ரகாசமாயிற்று. அனைவர் மனத்திலும் ஆனந்தம் பொங்கியது. நிறைய ஸத்சங்கங்கள் ஏற்பாடாயின. திடீர் முரண்பாட்டை ஒற்றர் மூலம் அறிந்த ராஜகுரு, எல்லா தெய்வங்களும் காஞ்சியை விட்டு அங்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து, மன்னனை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு குவிந்திருந்த ஸாந்நியத்தைக் கண்டு, காமாக்ஷியை த்யானம் செய்து அழைத்தார். அ...

குருவருள் ஒன்றே கதி - 17

Image
இளமை திரும்பியது - 2 பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்! கணிகண்ணன் திருமழிசையாழ்வாரின் அனுமதியுடன் அரண்மனைக்குச் சென்றான். வாருங்கள் நீதான் கிழவியைக் குமரியாக்கினீரா? உமது திறமை கண்டு வியந்து போற்றுகிறோம்.. வணக்கம் மன்னா.. நான் எதுவும் செய்யல. அவங்க சாமிக்கு தொண்டு செய்யணும்னு ஆசைப்பட்டாங்க. குருவருளால மாறிட்டாங்க.. நீர் எப்படி வேண்டுமானாலும் சொல்லும். எனக்கும் வயதாகிவிட்டது. இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன.. சற்று என் இளமையைத் திருப்பினால், உமக்கு நிறைய ஸன்மானங்கள் கிடைக்கும்.. அரசே, அது என்னால் ஆகாது. ஏதோ குருவருளால் அதிசயம் நிகழ்ந்தது. அதுவும் அவரது தொண்டில் மகிழ்ந்து இறைவன் கொடுத்தது.. என்னை இளமையாக்கும்படி உமக்கு உத்தரவிடுகிறேன். என்னால் முடியாது அரசே.. எனில், உம்மை நாடு கடத்தும்படி உத்தரவிட நேரிடும்.. பரவாயில்லை. உலகம் பெரியது. குருவருள் எதைச் செய்யும் செய்யாது என்பதில் நான் தலையிட இயலாது. நான் ஊரை விட்டுப் போகிறேன்.. எனில், இன்றே நீ நம் நாட்டை விட்டுக் கிளம்பவேண்டும் உத்திரவு மன்னா! என்று சொல்லிவிட்டு கணிகண்...

குருவருள் ஒன்றே கதி - 16

Image
இளமை திரும்பியது.. பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசையாழ்வார் பெரிய யோகீஸ்வரர். நேருக்குநேர் எம்பெருமானோடு அளவளாவக் கூடியவர். மிகுந்த வயதான காலத்தில், க்ஷேத்திரங்களுக்குச் செல்வது சிரமமாகிவிட்ட நிலையில், காஞ்சீபுரத்தில் உள்ள திருவெஃகா என்ற திருத்தலத்தில், உள்ள ஆலயத்தில் தங்கிவிட்டார்.  அப்போது கோவிலுக்கு வழக்கமாக வரும் தம்பதியினர் ஒரு யோகீஸ்வரர் கோவிலில் இருப்பதைப் பார்த்து அவருக்கு சேவை செய்யத் துவங்கினர். அவர்களது சேவையில் மகிழ்ந்துபோன ஆழ்வார், ஒரு கனியின் வாயிலாக  அருள்கொடையை வழங்கினார். இதுவரை மக்கட்பேறின்றி வருந்திய அவர்கட்கு அவ்வருள் கனி பிள்ளைக்கனியைக் கொடுத்தது. கண்ணனைப் போலவே ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கணிகண்ணன் என்று பெயரிட்டார் ஆழ்வார். அருள்கொடையால் பிறந்தவனாகையால், அவனும் நற்பண்புகளில் சிறந்து விளங்கியதோடு, குருசேவையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தான்.  காஞ்சி மன்னனின் அரசவையில் நாட்டியக்காரியாக இருந்த ஒரு பெண்மணிக்கு மிகவும் வயதாகிவிட்டதால், ஓய்வு கொடுத்து மானியமும் கொடுத்து அனுப்பிவிட்டான் அரசன். அவள்  கோ...

குருவருள் ஒன்றே கதி - 15

Image
பாம்பின் கால் பாம்பறியும் - 2 ஸமர்த்த ராமதாசரைச் சந்தித்த பிறகு, அந்த ப்ரமிப்பிலிருந்து  சிவாஜியால் விடுபடவே இயலவில்லை. அவரது அழகான திரவுருவம், அவர் பேசிய வார்த்தைகள், அவரது மகிமை இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.  சிறிது காலம் சென்றதும் வேறெங்கோ சென்றுவிட்டுப் படையோடு திரும்பிக் கொண்டிருந்த சிவாஜியின் கண்களில் தேஹு‌ என்ற ஊரின் பெயர் தென்பட்டது. சட்டென்று நின்றார் சிவாஜி. அன்றைக்கு குருநாதர் இந்த தேஹு கிராமத்தில் சென்று துகாராம் என்ற மஹாத்மாவைப் பார் என்றாரே. படைகள் முழுவதையும் ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு, இரண்டு மந்திரிகளுடன் ஊருக்குள் சென்றார் சிவாஜி. துகாராம் மஹராஜின் வீட்டைக் கண்டுபிடிப்பது வெகு சுலபமாய் இருந்தது. மந்திரிகளை தூரத்தில் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் துகாராமைப் பார்க்கச் சென்றார் சிவாஜி.  பழைய வீடு, வீட்டில் எந்த வசதிகளும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. சின்னஞ்சிறிய குழந்தைகள் கந்தலாடையோடும், ஒட்டிய வயிறோடும் வாசலில்  விளையாடிக்கொண்டிருந்தன. துகாராம் திண்ணையில் அமர்ந்து தம்புராவை மீட்டிக்கொண்டு ...

குருவருள் ஒன்றே கதி - 14

Image
பாம்பின் கால்‌ பாம்பறியும் - 1 வீர சிவாஜி ஒரு சமயம் ஒரு போருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு நதிக்கரையைக் கண்டதும் அங்கே சற்று இளைப்பாறிவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்று படைகளுக்கு உத்தரவிட்டார். நால்வகைப் படைகளும் போரில் களைத்திருந்தன.  தாகம் தீர்க்க நதிக்கு வந்தார் சிவாஜி. முகம் கை கால்களைக் கழுவிக்கொண்டு, நீரைப் பருக எண்ணி கைகளில் நீரை அள்ளியபோது, கையில் ஒரு இலை வந்தது. அதில் ஏதோ எழுதிருந்தது. என்னவென்று படித்தபோது ராமரைப் பற்றிய ஒரு அழகான பாடல் என்று அறிந்துகொண்டார். யாரோ இப்போதுதான் எழுதிருக்கவேண்டும். எங்கிருந்து வந்தது? யார் எழுதியிருப்பார்கள்? எவ்வளவு அழகான கவிதை? சிவாஜியின் கண்கள் எழுதியவரைத் தேடின. சிறிது தூரம் நதியின் ஓரமாகவே நடந்தார். அடுத்ததாக பாடல் தாங்கிய  இன்னொரு இலை வந்தது. தொடர்ந்து சென்றபோது, பாடல்கள் நிரம்பிய இலைகள் வரிசையாய் வந்துகொண்டே இருந்தன. யாரோ எழுதி எழுதி நதியில் போடுகிறார்கள். இவ்வளவு அழகான பாடல்களை நதியில் போடுவானேன்? ஆர்வம் தாங்காமல்,  இலைகள் வந்...