க்ருஷ்ணமாதுரி - 36

எவரெனைக் காணினும்
உனை நினைவூட்டும்
காகமாவேனோ..

புரியாவிட்டாலும்
விடாமல் 
உன் பெயரைச்
சொல்லும்
கிளிப்பிள்ளையாவேனோ..

பஞ்சமஸ்வரத்தில்
இனிக்கும் குரலில்
உன் புகழ் பாடும் குயிலாவேனோ..

குப்பையிலும் 
தானியம் தேடிக் கொறிக்கும் கோழியாக
விஷய விஷங்களுக்கிடையில்
விஷ்ணுவைத் தேடுவேனோ...

தொலைவு அதிகமானாலும்
கூர்ந்துனை நோக்கும் 
கழுகாவேனோ..

உன் முக சந்த்ரனை 
எதிர் நோக்கி 
உயிர் வாழும் 
சகோரமாய் ஆவேனோ..

பாலெது நீரெதுவெனத்
தெரிந்து
உன் அன்புப்பாலைப் பருகும் 
அன்னமாவேனோ..

எப்போதும்
உனை நோக்கி
விழித்திருக்கும்
ஆந்தையாவேனோ.. 

எப்பறவையானாலும்
எனக்கேற்பு கண்ணா..
பறந்து வந்து 
உன் தோளில் அமரும் 
வரம் தா...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37