க்ருஷ்ணமாதுரி - 32

யாருமில்லையென்று 
கத்திச் சொன்னாலும், 
நீ 
அருகில் இருப்பதை
உணரும் தருணத்தில்
நெஞ்சோடு சொன்னாலும், 
உனக்குப் புரிகிறதா 
என்பது சந்தேகமே..

நந்தன் செருப்பைத் 
தள்ளாடி தள்ளாடிச் சுமந்த
அதே கரத்தின்
ஒற்றை விரலால்தான்
மலை தூக்கினாய்..

எல்லாம் அறிந்தவனாயினும் 
நீ
என்னை மட்டும் 
உன் 
அறியாமையால்
 ஆட்கொள்கிறாய்...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37