க்ருஷ்ணமாதுரி - 29

உன் 
காலக் கணக்கு
 சுலபமானது..
என் 
பாவபுண்ணியக் கணக்குகளை நோக்குகையில்.. 

நீயோ 
பள்ளிக்குச்
சரியாகப் போகாமல்
 ஏய்த்தவன்..

அதனால்தானோ என்னவோ
உன் பெயரைச் சொன்னதுமே,
என் கணக்குகள் அனைத்தையும் 
அழித்து  
சூன்யமாக்கி
என்னைப்
 பூஜ்யமாக்கினாய்...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37