க்ருஷ்ணமாதுரி - 92


கவன ஈர்ப்புத் தீர்மானங்களில்
முதல் வகை
உன் விழிகளாம்..
அதன் ஒரே வீச்சில்
நிறைவேற்றப்படுவது
எனது
கவனச் சிதறல் ..
தீர்மானம் ஏதுமின்றி
தவிக்கும்
என் மனத்தின்
ஓசை அடங்க,.
உன் குழலிசையின்
முத்திரையிட்ட
ஒரே ஒரு ஸ்வரம் போதும்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1