க்ருஷ்ணமாதுரி - 91


ஏழடிகள் இணைந்து நடந்தால்
ஏந்திழை
உன் சொத்தாவேன்..
ஓரடியால்
உளகளந்தானே..
உனைநோக்கி
வைத்தேன்
நான் ஓரடி..
இணைந்து நடப்பாயோ..
அல்லது
தலைமேல் வைப்பாயோ..
அது
உன் விருப்பம்..
முதலில்
கொடுத்துவிடு
உன்
மரவடியை..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37