க்ருஷ்ணமாதுரி - 90


தெரியாத இடத்தில்
தெரியாத நபர்களால்
தெரியாத ஊருக்கு
வண்டி ஏற்றிவிடப்பட்டேன்.
உன்
பெயர்
சொல்லிக்கொண்டு
பயணச்சுமைகளை
வண்டியில்
இறக்கிவைத்தேன்..
நெஞ்சில்
உன் எண்ணம்
சுகமான சுமை.
என் பயணங்களை
உன்னை நோக்கியதாக
நீதான் மாற்றிக்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37