க்ருஷ்ணமாதுரி - 89


உள்ளம் திருடிய
உன்
அரையிலிருந்து
நேற்று
நீ அறியாமல்
கொண்டுவந்தேன்
இக்குழலை....
ஒவ்வொரு துளையிலும்
ஒவ்வொரு சுகந்தம்..
உன் சந்தனவிரல்கள்
விளையாடும்
இக்குழலின்
ஊதும் துளையில்
என் உயிரைப் போட்டு
எடுத்த இடத்தில் வைக்கிறேன்..
முதலில் உறிஞ்சிவிடு..
பிறகு வாசி
உன் காமவர்தினியை..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37