க்ருஷ்ணமாதுரி - 82


ஊனை உருக்கும்
உனதன்பின் வீரியத்தை
பூரணனான
நீ
அறியமாட்டாய்..
நான்
நீயாவதும்
இரண்டறக் கலப்பதும்கூட
எளிதே..
ஆனால்..
நீ
நானாக
ஒருபோதும்
இயலாது..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1