க்ருஷ்ணமாதுரி - 81


உன் பெயரின்
துணை கொண்டு
இழிச்சொல்
பழிச்சொல்
கொடுஞ்சொல்
புறஞ்சொல்
உடல்நோய்
மனநோய்
இயற்கையால் வரும் நோய்
பகை
ஆபத்து
விபத்து
இன்னும்
ஆயிரமாயிரம் இன்பங்கள்..
அனைத்தையும்
சுலபமாய்த் தாங்கினேன்..
இப்போது
உன்
பெருங்கருணையைத்
தாங்கும்
சக்தி கொடு..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37