க்ருஷ்ணமாதுரி - 76


உலகியல் தளைகளை
என்
உளம் உணருமுன்
களைகிறாய்..
எப்படி
என்று கேட்டால்..
உள்ளேயே உறைபவன் நான்..
என்கிறாய்..
உன்னை அடையும்‌ உள்ளக்கிடக்கையை
மட்டும்
கண்டும்
காணாமலே
வளர்த்துவிடுகிறாய்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37