க்ருஷ்ணமாதுரி - 77


வையமளந்தது
உன்
பாதக்குடை...
சென்ற வார மழையில்
இன்று முளைத்த
நாய்க்குடையைப் பிடுங்குவதுபோல் பிடுங்கி
உன் விரல் பிடித்த
மலைக் குடை..
கைப்பைக்குள்
அடங்கியிருக்கும்
கறுத்த குடைபோல்..
உலகின் குடையான
உன்னை
என் இதயப்பைக்குள்
அடக்க ஆசை..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37