க்ருஷ்ணமாதுரி - 75


தினமொரு பிறவி வேண்டும்..
ஈரேழ் வகை உலகிலும்
எத்தனை எத்தனை
மலர் வகையோ
அத்தனையிலும்
ஒரு பிறவி
வேண்டும்...
வாழ்வது
ஒரு நாளெனினும்
ஒவ்வொரு நாளும்
உன் அடியார்
கரம் சேர்ந்து..
உன் கமலத்தாளிணை சேரவேண்டும்..
வனமாலாதரனே!
ஆதலால்..
எனக்கு
தினமொரு பிறவி வேண்டும்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37