மலையேந்தும் விரல் குடையைப் பிடிக்கவே நமக்கு ஐந்து விரல்கள் தேவையாயிருக்க, மலை பிடிக்க பகவானுக்கு ஒரு விரலே போதுமாயிருந்தது. நந்தனுக்குப் பெருமை பிடிபடவில்லை. பார், என் பையனாக்கும் மலைய தூக்கறான் என்று பெருமையடித்துக் கொண்டிருந்தான். யசோதைக்கு மிகுந்த கோபம். நந்தனை இடித்துப் பேசினாள். ஊரைக் காப்பாத்தும் பொறுப்பு உமதாயிருக்க, என் பிள்ளை இளிச்சவாயனா? அவன்தான் மலைய தூக்கணுமா? அதான் தடி தடியா இத்தனை பேர் வேலைக்கு வெச்சிருக்கீங்களே. அவங்கள யாரையாவது தூக்கச் சொல்லுங்க. என் பிள்ளை சின்னக் குழந்தை.. பாவம். என்றாள். கோபச்சிறுவர்கள் எல்லாருக்கும் குஷி. கண்ணா, நாங்க நல்லா கெட்டியா மரம் குச்சியெல்லாம் கொண்டு வரோம். அங்கங்க முட்டுக் குடுத்து இந்த மலையை நிக்க வெச்சுட்டு வா, கொஞ்ச நேரம் கோலியடிச்சு விளையாடலாம் என்று கூப்பிட்டனர். வயதான பாட்டிகள் அங்கேயே ஓரமாய் அமர்ந்து பாக்கு இடிக்கத் துவங்கினர். கோபிகளின் ஆனந்தத்தை சொல்ல இயலுமா? இரண்டு வருடங்களாக தினமும் காலை மாடு மேய்க்கச் செல்லுமுன் ஒரு தரிசனம், திரும்பி வரும்போது ஒரு தரிசனம், இவர்கள் காட்டு வழி சென்றால், எப்போ...
Comments
Post a Comment