க்ருஷ்ணமாதுரி - 45



காய்கறிக் கடை வாசலில்
ஒற்றையாய் நிற்கும்
மாட்டின்
பின்னால்..
பள்ளிக்கூடம் விட்டதும்
துள்ளிவரும்
சிறார்களின்
பின்னால்..
மண் சாலையில்
எழும்பும்
புழுதிப்படலத்தின்
பின்னால்..
மழைநாளில் ஒதுங்க
இடமின்றித்
தவிக்கும்
உயிர்களின்
பின்னால்..
பழம் விற்றுச் செல்லும்
முதிர்ந்த வியாபாரியின்
பின்னால்..
பால்காரக் கிழவியின்
பின்னால்..
உன் வேடமிட்டுக்
கள்ளமின்றிச்
சிரிக்கும்
மழலைகளின்
பின்னால்..
உன் பெயரைச் சொல்லும் அடியவர் பின்னால்..
சுற்றி சுற்றிச் சென்று
உன்னைத் தேடுகிறேன்..
ஒரே ஒரு முறை
எவ்வுருவிலேனும்
உன் திருக்கோலம் காட்டு...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37