க்ருஷ்ணமாதுரி - 44



ராகம்:விஜயநகரி
மாக்கோலமிட்டு வைத்தேன் - கண்ணா
உந்தன் வரவை எதிர்பார்த்து வாசலில் அழகான(மா)
பூக்கோலங்களுமிட்டு புது வெண்ணெய் எடுத்தேன்
நாவைச் சுண்டும் நல்ல பக்ஷணங்கள் செய்தேன்
தோரணங்கள் கட்டி தோதாய் மாலை தொடுத்தேன்
வாரணம் போல் வந்து வெண்ணெய்க்கோலமிட்டிடுவாய் (மா)
தெருக்கோடி வரை சென்று விழிகள் உனைத் தேட
தேனான குழலிசை கேட்கச் செவி ஏங்க
காய்ச்சின பாலுமிங்கே ஆறிச் சுவை தேய
தேவாதிதேவன் நீயும் கடிதில் என் கன்னம்‌சேர (மா)

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37