க்ருஷ்ணமாதுரி - 46



இருளில் தவிக்கும்‌
நேரமெல்லாம்
இருள் நிறத்தான்
உன் அண்மையை
உணர்கிறேன்..
ஒரே ஒரு கணம்தான்..
நீ வந்தவுடன்
இருள் அகன்றுவிடுகிறது.
வெளிச்சம் வந்தால்
காணாமல் போகிறாய்..
மீண்டும்
இருளை எதிர்பார்த்துக்கொண்டு
நான்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37