க்ருஷ்ணமாதுரி - 42

உன் பெயரைச்
சொன்னதற்கு
நான் கேளாமலே 
அரசபோகம் 
கொடுத்திருக்கிறாய்..

இவ்வுலக அரசபோகம்
எனக்கெதற்கு..
உன் இதயராணியாக விரும்புவது
பேராசை..

என்றும்
உன் மனமாகி நிற்பவளின்
பணிப்பெண்ணாய்
வாழ்வதே
எனக்குப் போதும்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37