க்ருஷ்ணமாதுரி - 15

எங்கு நோக்கினும்
உன் கால் தடங்கள்
இந்த பூமியில்..

உன் பக்தர்களோ 
விழுந்து புரள்கிறார்கள்..

நானோ
உலகளந்த  
உன் பாதச்சுவடுகளின் மேல்
என் பாதம் வைத்து
உனக்கும் எனக்குமான
பொருத்தம் பார்க்கிறேன்..


Comments