Posts

Showing posts from June, 2022

கிரஹணத்தில் உதித்த நிலவு - 4

விஸ்வரூபன் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் வெகு விரைவில் கற்றுத் தேர்ந்தான். அவனது பூரண நல்லறிவின் அழகு முகத்தில் சூரியன்போல ஒளிர்ந்தது. ஞான மார்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட விஸ்வரூபன் மிகவும் விரக்தனாக இருந்தான். அதைக் கண்ட சசிமாதாவிற்கு அவன் ஸந்நியாசம் வாங்கிக்கொள்வானோ என்ற அச்சம் அவ்வப்போது தோன்றிற்று. ஒரு நாள் ஜகந்நாத மிஶ்ரருக்கு முன்பு போலவே அத்வைதாசாரியாருடனான சந்திப்பு கங்கைக் கரையில் தற்செயலாகத் தனிமையில் நிகழ்தது. தன்னை வணங்கிய ஜகந்நாதரைக் கூர்ந்து பார்த்த அத்வைதாசாரியார் சட்டென்று உனக்கொரு அவதாரபுருஷன் மகனாகப் பிறப்பான் என்றருளினார். பிள்ளையில்லாத துயர் ஏற்கனவே அவர் செய்த ஆசீர்வாதத்தினால் நீங்கியது. இது பேரருளல்லவா? பெரியோர் வாக்கு பொய்க்காதே. மிகவும் மகிழ்ந்தார் ஜகந்நாதர். சில நாள்களில் சசிமாதா திருவுற்றாள். ஆம். கருவில் திருநிறைச் செல்வனை ஏற்றாள். ஸ்ரீமதி ராதாராணிக்கும் கண்ணனுக்கும் ஒரு நாள் ப்ரேம ஸல்லாபம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ராதாராணி கண்ணனாகவும் கண்ணன் ராதாராணியாகவும் மாறி ஒருவர் ஹ்ருதயத்தை ஒருவர் ஊடுருவ எண்ணினர். கண்ணன் மேல் வைக்கும் அன்பின் சுவையை கண்...